Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

A Double drop - 2

$
0
0








 நாகூர் ஹனிஃபா 

“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.
‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லைபாடிய ஹனிஃபா

‘அழைக்கின்றார்,அழைக்கின்றார்,அழைக்கின்றார் அண்ணா!’

‘கல்லக்குடி கொண்ட கருணா நிதி வாழ்கவே!’ 

‘எங்கள் வீட்டுப்பிள்ளை,ஏழைகளின் தோழன், தங்க குணம் கொண்ட கலை மன்னன், மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்!’

எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்து பின், 1973திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது நாகூர் ஹனிஃபா தி.மு.க பிரச்சாரத்தில் பாடிய சவால் பாடல்
 “நன்றி கெட்ட கிழவனுக்கும் நாணயமில்லா குள்ளனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்.
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!
நன்றி கெட்ட மோகனுக்கும் நாணயமில்லா சுப்பனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!”

இந்த பாடலில் குறிப்பிடப்படுபவர்கள்
கிழவன் = எம்ஜியார்
குள்ளன் = மதியழகன் ( எம்.ஜி.ஆர் பிரிந்த போது சட்டமன்ற சபாநாயகர்)
மோகன் = மோகன் குமாரமங்கலம் ( அப்போது மத்திய அமைச்சர் )
சுப்பன் = சி.சுப்பிரமணியம் ( அப்போது மத்திய அமைச்சர் )

இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி. வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மீது கூட மூன்றாமிடம் பெற்ற ஆளும் கட்சி தி.மு.க.விற்கு கோபமில்லை. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு,க. மீதும் நான்காமிடத்தில் படுதோல்வியடைந்த இந்திரா காங்கிரஸ் மீதும் தான் கடும் வெறுப்பு.
...............................


ரங்கராஜ் பாண்டே


1999ல் மார்ச் 27ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்க்டன் லைப்ரரியில்  நான் அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி பேசினேன். நிகழ்ச்சி முடிந்த பின் மேடையில் அசோகமித்திரனை பலரும் சந்தித்து அளவளாவிய போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் அசோகமித்திரனிடம் “ பாலகுமாரனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க நான் உடனே சொன்னேன். “Balakumaaran – Poor man’s Janakiraman!”  
உடனே  “ ஏன்? அப்படி சொல்றீங்க?” - மென்மையாக கேட்ட அந்த இளைஞன் ரங்கராஜ் பாண்டே! 

 நான் “அப்படித்தான் சொல்லனும்.” 

அசோகமித்திரனுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்து விட்ட ஆசுவாசம். மென்மையாக இருவரையும் பார்த்து சிரித்தார்.




 ....................................................

http://rprajanayahem.blogspot.in/…/a-double-drop-intense-mi…



Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>