காற்றில் மிதக்கும் இறகு :
"மனதுக்கு நெருக்கமான நண்பரைச் சந்தித்தது போல ஐயாவின் முகநூல் பக்கம் இருக்கும்.
இவருடைய மொத்த முகநூல் பதிவுகளையும் முழுமையாகப் படித்து முடித்து விட வேண்டும் என்பது
தீராத ஆசை.
ஒரு மனிதன் இந்த வாழ்வின் அர்த்தங்களையும் மனித மனதின் ஒளியையும் இருளையும்
ஒரே நேரத்தில் தரிசிக்கும் அனுபவத்தையும்
நமக்குத் தந்து விடுவார்.
இலக்கியம் திரைத்துறை சாமான்ய மனிதர்கள் என்று ஞாபக அடுக்குகளில் இருந்து எத்தனை எத்தனை காற்றில் மிதக்கும் நினைவுகளாய் பதிவுகள்.
படிக்க படிக்க விரியும் வியப்பு
இந்த நிமிடம் வரை மறையாது..
எத்தனை நுண்ணிய ஞாபகங்கள்.. எங்கிருந்து எதையோ இணைக்கும் புள்ளிகள்..
தமிழ் அறிவுச் சமூகத்தின் பொக்கிஷம் R.P. ராஜநாயஹம் ஐயா அவர்கள்.
என் நிறைய நேரங்களை உங்கள் பதிவுகளே எடுத்துக் கொள்கின்றன.
வாசிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன் வாழிய நீங்கள்!"