Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

வாசுதேவன் காத்தமுத்து

$
0
0




வாசுதேவன் காத்தமுத்து குறித்து

எண்ணங்கள் 

ராஜநாயஹத்தை 
'ஓரிரு முறை பார்த்திருக்கிறேன்'என்று ஞாபக மறதியில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

1. 2001ம் ஆண்டு திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் ஆல்பர் காம்யு ஃப்ரெஞ்ச் "அந்நியன்"ஆங்கில மொழி பெயர்ப்பு, தமிழ் நேரடி மொழிபெயர்ப்பு இரண்டையும் ஒப்பிட்டு 
ராஜநாயஹம் இரண்டு மணி நேரம் பேசிய பின் வாசுதேவன் கேட்டார் "நீங்க இங்க்ளீஷ் ப்ரொஃபஸரா?"

2. வாசுதேவன் காத்தமுத்து ஜப்பானிய யசுநாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகள் இல்லம் 'மொழிபெயர்ப்பு குறுநாவல் பற்றி 
அடுத்த மாதத்தில் தமிழ் இலக்கியக் கழகத்தில் 
அருமையாக பேசியதை மறக்கவே முடியாது.

3. அதன் பிறகும் சில முறை தமிழ் இலக்கியக் கழகத்தில் சந்தித்திருக்கிறேன்.

4. 2002ல் தமிழ் இலக்கியக் கழகத்தில் R.P.ராஜநாயஹம் "ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை"கட்டுரையை வாசித்த போது வாசுதேவன் வரவில்லை என்பதால் வாசுதேவனின் தில்லை நகர் ஆஃபிஸிற்கே வந்து தந்திருக்கிறேன்.

5. திருச்சியில் வாசுதேவனின் தில்லை நகர் ஆஃபிஸிற்கு அதன் பிறகும் இரு முறை அப்போது ராஜநாயஹம் வந்ததுண்டு.

ராஜநாயஹம் மறக்கவே முடியாத முக்கிய நண்பர் வாசுதேவன் காத்தமுத்து.

"ராஜநாயஹத்தை நினைக்கும் போது ஏன் கண் கலங்குகிறது?"என்ற வாசுவின் உருக்கம் நெகிழ்த்துகிறது.

.....

ராஜநாயஹம் பற்றி 


"திருச்சியில் எவ்வளவு இளமையாக பார்த்த முகம்! 
காலம் எதனையும் நிலைக்க விடுவதில்லை நினைவுகளைத் தவிர!"

-  வாசுதேவன் காத்தமுத்து

...

"என்னவகை எழுத்து இது?

இலக்கியம், அரசியல், அறிவியல், உளவியல், சினிமா,இசை, ஓவியம்.....என எல்லாவற்றையும் இணைத்து சுவாரஸ்யமாக  ஒரு தேர்ந்த கதை சொல்லியைப்போல....சொல்லும் புதுவகை எழுத்து.

ஓரிரு முறை பார்த்திருப்பேன்.

என் பேரைச்சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவரது நண்பன். நான் செய்த பேறு.

இவரை நினைக்கும்போது 
ஏன் கண் கலங்குகிறது?"

- வாசுதேவன் காத்தமுத்து

Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>