பாக்யராஜ் ஆபிஸில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த
சுரேஷ் கோபியை
இயக்குநரை சந்திக்கவே விடாமல் அவருடைய அசிஸ்டெண்ட்கள் ரொம்ப அவமானப்படுத்தியதைப்பற்றி கேள்விப்பட்டதுண்டு.
இப்போது அவர் மத்திய அமைச்சர் ஆகி விட்டார்.
பாக்யராஜிடம் இது பற்றி பாண்டிச்சேரியில் சொன்ன போது
அவர்"உங்கள விரட்டி அவமானப்படுத்தினாங்கள்ள,
சுரேஷ் கோபியையும் அப்டி பண்ணியிருக்கானுங்க."
அப்போது பாக்யராஜ் இன்னொரு சமாச்சாரம் சொன்னார்.
பாக்யராஜின் பெரும் ரசிகர்
ஒடிசா நடிகர் இயக்குநர் ப்ரசாந்த் நந்தா.
இவர் ஒடிசா முன்னாள் அமைச்சர். இப்போது பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்.
இவர் 'அந்தஸ்தோடு'பாக்யராஜை தேடி வந்து சந்தித்திருக்கிறார்.