Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

வேடிக்க - 31

$
0
0
வேடிக்க - 31
- R.P. ராஜநாயஹம் 

திருச்சி ரோட்டரி கிளப்பில் Chief guest ஆக கலந்து கொள்ள போன போது, ரயில் பயணத்தின் போது 
டெல்லி குருமூர்த்தியை சந்தித்தேன். காலையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் பார்க்கும் வாய்ப்பு.

டெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் production executive ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெருமைக்குரிய அனுபவங்களுக்கு சொந்தக்காரர்.
முன்னதாக டெல்லி வானொலி Announcer cum Senior Translater.

தன் வேலை பற்றி குருமூர்த்தி:
"Translator cum announcer and incharge of Tamil unit, வெளிநாட்டு சேவை பிரிவு  தில்லி"

டெல்லி வானொலி பணி பற்றி குரு மூர்த்தி "நான் மூத்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் அறிவிப்பாளராக   பணிபுரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பிரிவின் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்தேன்." 

Translator cum announcer and incharge of Tamil unit, வெளிநாட்டு சேவை பிரிவு  தில்லி.

அபூர்வ மனிதர் A.R. ராஜாமணி பற்றி..

ஆரம்ப காலங்களில் ராஜாமணி ராமானுஜ மெஸ்ஸில் தான் இருந்ததாக குருமூர்த்தியிடம் குறிப்பிட்டாராம். போஸ்டல் அட்ரஸ் ராமானுஜர் மெஸ் தான்.

சாகித்ய அகாதமிக்காக திருலோக சீதாராம் குறித்த நூலை ராஜாமணி எழுதியுள்ளார்.

டெல்லி எழுத்தாளர் சங்கத்தை தனி மனிதனாக நடத்திய இலக்கியவாதி.
க.நா.சு, செ.ரவீந்திரனுக்கெல்லாம் ராஜாமணி நெருக்கமான நண்பர். பெண்ணேஸ்வரனோடும் நல்ல பரிச்சயம்.

ராஜாமணிக்கு புரவலர் செ.ரவீந்திரன்.

ராஜாமணி பிரம்மச்சாரி. நிரந்தர வருவாய் எதுவும் இல்லாத நிலையில் வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவையே மூச்சாக கொண்டிருந்த உத்தமர்.

தமிழ் பத்திரிகைகளில் டெல்லி விஷயங்கள் எழுதியிருக்கிறார்.

சென்னை வந்தால் ந. முத்துசாமி கூத்துப்பட்டறையில் தங்குவார்.

ராஜாமணி டெல்லி எழுத்தாளர் சங்கத்தை வைத்து எழுத்தாளர் மாநாடு நடத்தியவர்.

ஜெயகாந்தன் டெல்லி வந்த போது ராஜாமணியை சுட்டிச் சொன்னார் 
"அவனக்கூப்புடு. 
என் ஃப்ரண்டு ராஜாமணி"

A.R. ராஜாமணி பற்றி 
அற்புத மொழிபெயர்ப்பாளர் ஷாஜகான் கூறுகிறார்

 "ராஜாமணி நல்ல வாசகர். தில்லியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் வருகை தருவார்.  நிகழ்ச்சிகளைப் பற்றி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினாரே தவிர, நல்ல எழுத்தாளர் என்று சொல்ல இயலாது. குழு மனப்பான்மைக்கு ஆளாகாதவர் என்பதால், எல்லாருக்கும் நல்லவர். 

மொழிபெயர்ப்பு என்ற விஷயத்தில், மூலத்துக்கு நேர்மையாக இருப்பது என்பதைவிட, மூலத்தைப் படித்துவிட்டு, சொந்தமாக அடித்து ஆடுவது அவர் வழக்கம்.

ராமானுஜம் மெஸ் முகவரிதானே தவிர, அவர் தங்கியது அங்கு அல்ல. கரோல்பாக்கில் ஒரு வீட்டின் மாடிப்படிக்குக் கீழே ஓர் அறையில். 

கடைசி காலத்தில் குருமூர்த்திதான் ராஜாமணிக்குப் புரவலர்."

....

Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>