Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

கவி சுகம் ஒன்று, நாகேஷ் - சுருளி சுவை ஒன்று

$
0
0


ஷங்கர் ராமசுப்ரமணியன் திறம் மிக்க கவி


“மழை பெய்த தெருவில்
கூழாங்கற்கள்
தவளைகளாக மாறின
வட்டமாய் அணிவகுத்து
துள்ளத் தொடங்கின
தங்கள் இலக்கில்லாத
முற்றுகையை
தவளைப் போர் வீரர்களே
தவளைப் போர் வீரர்களே
உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை
வீட்டுத் திண்ணையில் படுத்திடும்
நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”


’ஒரு நல்ல கவிஞனை சித்திரவதை செய்ய சுலபமான வழி உண்டு. அவனுடைய கவிதையை விரிவாக விளக்கி பொழிப்புரை எழுதுவது.’ என்று சொல்வார் நஸ்ஸிம் நிகோலாஸ் தாலிப் என்ற லெபனான் நாட்டு தத்துவ மேதை. இவர் எழுதிய ’கறுப்பு அன்னப்பறவை’ (The Black Swan) புத்தகம் முக்கியத்துவமானது.

To be a poet is a condition, not a profession. – Robert Frost
…………………………………………………….



குருக்கள் நாகேஷ்.

கொம்புத்தாழன் சுருளிராஜன் கோவிலுக்கு சாமி கும்பிட வருகிறார்.

சுருளி நெற்றியில் விபூதி பட்டை போட்டிருப்பதைப் பார்த்து நாகேஷ் “பட்டைய எடம் மாத்திட்ட!”

பட்டை சாராய பழக்கம் உள்ள சுருளி சாராயம் குடல கெடுப்பதை குறிப்பிடுவது இப்படி - “ பட்டை உள்ள போடுறதில்ல. ரூட்டு கெட்டுப்போயிடுது.”


குருக்கள் பிரசாதம் கொடுக்கிறார். சுருளி அதை சாப்பிடும் போது நாகேஷ் கேள்வி : ”பிரசாதத்த கூட ஏண்டா திருட்டுத்தனமா தின்னுற?”

சுருளி சுளித்த முகத்துடன் வாய விரித்து : ”பழகிப்போச்சி.”

பழைய ’ருத்ர தாண்டவம்’ படத்தில்.
……………………………………….

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_25.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-38.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_10.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_4856.html

Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>