’வானத்தில் திரியும் பறவைகளைப் பற்றி மட்டும் பாடாதீர்கள். மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்.’
உச்சி வெய்யில் நண்பகல் பதினொன்றரை மணி நேரம். ஆலப்பாக்கத்தில் ஒரு காலனியின் நுழைவு பகுதிக்கு முன்னே தேங்கி நிற்கிற சிறு அளவு மழை நீர் குட்டை. ரோட்டில் அதை ஒட்டி ஒரு தள்ளு வண்டி டிபன் ஸ்டால். இந்த பக்கம் ஒரு பேங்க். பஸ் ஸ்ட கரும்பு ஜூஸ் கடை. எதிரே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகம். படு பிசியான ரோடு.எதிரே ஃபர்னிச்சர் கடை. டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ரெண்டு.பல வகை வாகனங்கள் நகர்வில். நடப்பவர்கள், நிற்பவர்கள் என ஜீவனுள்ள பகுதி ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
’குளத்தோடு கோவித்துக்கொண்டு குண்டி கழுவாமல் ஒருவன் போனானாம்’ என்று ஒரு சொலவடை. ஒருவன் குண்டி கழுவ குளத்தில் இறங்கும் போது கால் வழுக்கி அடி பட்டு விடுகிறது. பதறி எழுந்து விரைத்துக்கொண்டு குளத்தை முறைத்துப் பார்த்து விட்டு ச்சீ போ என்று தலையை ஒரு பக்கமாக திருப்பி, உதட்டை பிதுக்கிக்கொண்டு விறு விறு என்று நடக்க ஆரம்பிக்கிறான். நடக்கும் போதே குளத்தைப் பார்த்து திரும்பி மீண்டும் மீண்டும் உதட்டை பிதுக்கி, ச்சீ போ என்று தலையை ஒரு பக்கமாக கோபமாக திருப்பி...இப்படியே ரோஷத்தோடு போய் விடுகிறான்.
கட்.
மீண்டும் ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
ஒரு பெரிய மனுஷன் வேட்டிய கழற்றி தரையில் வைத்து விட்டு, ’யார் கோபப்பட்டாலும் எனக்கென்ன? நான் கவலைப்படவே மாட்டேன், மயிரே போச்சி’ன்ற தோரணையில டவுசரை கழற்றிய படி புடுக்கு தெரிய, பீக்குண்டி தெரிய மழை நீர் குட்டையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கும் போது.....
ஒரு பெரிய மனுஷன் வேட்டிய கழற்றி தரையில் வைத்து விட்டு, ’யார் கோபப்பட்டாலும் எனக்கென்ன? நான் கவலைப்படவே மாட்டேன், மயிரே போச்சி’ன்ற தோரணையில டவுசரை கழற்றிய படி புடுக்கு தெரிய, பீக்குண்டி தெரிய மழை நீர் குட்டையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கும் போது.....
எனக்கு வளசரவாக்கம் மினி பஸ் வந்து விட்டது.
..............................
