Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

இரங்கல் எப்போதும் அபத்தம்

$
0
0

கீட்ஸ் மறைந்த போது ஷெல்லி அதிர்ந்து போனான். அடுத்த வருடமே அவனும் மறையப்போகிறான் என்பது பெருந்துயரம். அதை அறியாமலே கீட்ஸ் பற்றி கதறி ஒரு இரங்கல் கவிதை எழுதினான்.
ஒவ்வொரு பேராவிலும் புலம்பினான்.
A lengthy elegy.

I weep for Adonais – he is dead!
Oh weep for Adonais…
Most musical of mournars, weep anew…
Thy youngest, dearest one has perished..
He will awake no more, oh, never more..
Ah, woe is me..
Grief returns with the revolving year…

கீட்ஸ் இருபத்தாறு வயதை கடக்கு முன்னும், ஷெல்லி முப்பது வயது நிறையுமுன்னும் இறந்தார்கள்.

ஆத்மாநாமுக்கு இளைய வயதில் கிணற்றுக்குள் ஏற்பட்ட துர்மரணம் எல்லோரையும் அதிர வைத்த ஒன்று. 


’என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்கமுடியாது’ என்பது ஆத்மாநாமின் சூளுரை. உயிரோடு இன்று இருந்திருந்தால் அந்த கவிஞனின் பேனா எத்தனையோ ஓவியங்களான கவிதைகளை எழுதியிருக்கும். முப்பத்து மூன்று வயது அற்பாயுள்.
’எதிர்த்து வரும் அலைகளுடன் நான் பேசுவதில்லை.
எனக்கு தெரியும் அதன் குணம்.
பேசாமல்
ஒதுங்கி வழி விட்டு ஒதுங்கி விடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்கு படகாக’
– ஆத்மாநாம் நம்பிக்கை
ந.முத்துசாமியின் நண்பர் சி.மணி எழுதிய ஆத்மாநாம் இரங்கல் கவிதை கீழே.

அடக்கம்
ஆத்மாநாம்,
நீ தான் முக்கியம் எனக்கு,
உன் கவிதைகளை விட. இவை
எப்போதும் இருக்கும்; ஆனால்
உனக்கு பதிலியாகாது. இவற்றோடு
பழகுவதும் வேறுவகை.
உன் கவிதைகளை விட
உன் வாழ்க்கைப் போராட்டங்கள்
உக்கிரமானவை.
கவிதையில் மூழ்கிய மாதிரி
கிணற்றில் குதித்து மூழ்கினாய்.
ஒரு வித்தியாசம்,
இவை இரண்டும்
வெவ்வேறு அடக்கம்.
..............

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>