Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1858

இந்த ஒரு ஜென்மமே போதும்

$
0
0
 
காலாற வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன்.
Angels whisper to a man when he goes for a walk!
ஒரு எழுபது வயது மனிதர் செக்யூரிட்டி ட்ரஸ்ஸில் அந்த வீடுகளுக்கு காவலில் நின்று கொண்டிருந்தார்.
 இருட்ட ஆரம்பித்து விட்டது. நைட் டூட்டிக்கு வந்து விட்டார்.

வயதான செக்யூரிட்டி“பார்த்துப் போங்க சார். ரெண்டு நாள்ல நாலு நாகப்பாம்பைப் பாத்துட்டேன். கட்டுவிரியன் கூட போன வாரம் அடிச்சேன்!”
நான்:“ஐயா! நீங்க ஒவ்வொரு நாளும் ராத்திரி பூரா இங்க முழிச்சிக்கிட்டு இருக்கீங்க! நான் சும்மா ஏதோ அரை மணி நேர வாக்கிங்!”
“ பாம்பு பயம் இருக்கட்டும். இந்த கொசுத்தொல்லை ராவுல தாங்கவே முடியல சார்”


மீண்டும் அந்த வழியில் திரும்பும்போது அவர் ஒரு பெரிய வீட்டில் நின்று கொண்டிருந்த நாற்பது வயது பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் இரண்டு ஏ.சி. பொருத்தப்பட்டிருக்கிறது. கல்யாணத்திற்கு போய் விட்டு அப்போது தான் காரில் வீட்டிற்கு வந்திருப்பார் போல!

இரட்டை பெரிய கேட் போட்ட பங்களாவின் வெளியே தான் காரில்  கணவர் இவரை வீட்டில் இறக்கி விட்டு விட்டு எங்கோ மீண்டும் போகிறார்.

அவசரமாக  கழுத்து காது நகைகளுடன் தான் அந்த முதிய செக்யூரிட்டியிடம் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.

“ இல்லைய்யா! உண்மையாத்தான் சொல்றேன். எனக்கு வந்த கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது. இந்த வயசுக்குள்ள நான் அனுபவிச்சிருக்கிற கொடுமை என் எதிரிக்குக் கூட
வரக்கூடாதுய்யா. ஒரு ஜென்மத்துல ஏழு ஜென்மத்து தொயரத்தைப்பாத்தாச்சி. அழறதுக்கு என் கண்ணுல தண்ணி கூட இனிமே இல்ல..போதும் இந்த ஒரு ஜென்மமே போதும்.”

செக்யூரிட்டி: “கவலப்படாதீங்கம்மா.. அந்த ஆண்டவன் இருக்கான். ஒங்களுக்கு ஒரு கொறையும் வராது”


Every horse thinks  its own pack heaviest!
- Thomas Fuller



      

                                                                                                                



Viewing all articles
Browse latest Browse all 1858

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்