சிற்பம், ஓவியம், இலக்கியம் என்ற கலைகளில் செயல் திறமையற்ற ஏட்டுச்சுரைக்காயான குசும்பன்
தன் எழுத்தில் எல்லாவற்றையும் அறிந்தவனாக தன்னை காட்டி விமர்சகனாக தும்பிக்கையை ஊனி, நாலு காலையும் தூக்கி நின்னு, சட்டுனு சங்கு சக்கரமாக சுத்துவான்.
விசும்பன் கவிதை சொல்லும் போதே கண் கலங்கி விசும்புவான். தியேட்டர் பெர்சனாலிட்டி லிஸ்ட்டிலும் இடம் கேட்பான்.
சும்பன் movie connoisseur என்று தன்னை காட்டிக்கொள்வான். மரத்தில வால தொங்கப் போட்டு ஊஞ்சல் ஆடுவான்.
நிசும்பன் பலவிதமான மேடைகளில் கூட்டங்கள் கலந்து கட்டி பிரமுகர்களை அழைத்து நடத்தியே பிரபலமானவன்.
குசும்பன், சும்பன், விசும்பன், நிசும்பன் சேர்ந்து கூட்டு விவாதம் செய்து கொண்டிருந்த இடத்தில் சந்தர்ப்ப வசமாக
ஒரு அப்பாவி சாமானியன்.
'பெண்'பற்றி குசும்பன் சொன்ன விஷயத்திற்கு ரெலவண்ட்டாக இந்த அப்பாவி சாமானியன்
நீட்ஷே ஜரதுஷ்ட்ராவில் இருந்து சொன்னான் “Are you going to women? Don't forget your whip"
குசும்பன் திரும்பி அப்பாவி சாமானியனை பார்த்தான்.
(இவன் நம்மள அம்மணமாக்க பாக்கிறானே)
விசும்பன், சும்பன், நிசும்பன் மூவரிடமும் திரும்பி குசும்பன் சொன்னான்
” நமக்கு நீட்ஷே, காஃப்கான்னு பேசுற அறிவாளியெல்லாம் தேவையில்ல”
அப்பாவி சாமானியனை பிரஷ்டம்
செய்து விட்டான் குசும்பன்.
ராசிபலனில் சாமானியனுக்கு அன்று
“ நெத்தியில சுன்னி மொளச்சவன் மூஞ்சியில முழிக்காமல் தவிர்க்கவும்”னு போட்டிருந்தும்
விதி வசத்தால் ஜாக்கிரதையாக இல்லாமல்
போய் விட்டானே. அந்தோ!
வீட்டிற்கு போனவுடன்,
பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதும் போது குசும்பன்
தன் எழுத்தில் இடையிடையே
அங்கங்கே கவனமாக சேர்த்தான் -
” பிளேட்டோ சொல்கிறார்”
“ இங்க்மார் பெர்க்மன் சொல்கிறார்”