மதுரை அமெரிக்கன் கல்லூரியில்
எங்கள் ஆங்கில பேராசிரியர் ஜோப் டி மோகன் வித்தியாசமானவர். வகுப்பில் தமிழை வினோதமாக பயன் படுத்தி படுத்தியெடுப்பார். Funny professor.
”வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.
வாலறிவன்ன்னா என்னா தெரியுமா? தப்பு பண்ணா, சேட்டை பண்ணா வால அறுத்துடுவான் ஆண்டவன். அதான் வாலறிவன்."
"நீ ஒரு காது கொண்டு கேட்டால் அது இருக்காது. இரு காது கொண்டு கேட்டால் அது இருக்கும் "
Protestant = போராட்டம் + ஸ்டண்ட்.
எங்கள் வகுப்பில் ஒரு மாணவன் ரவீந்தர்நாத். ஜோப் டி. மோகன் அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது " Rabindernath not Tagore "என்பார்.
'நாளை மற்றுமொரு நாளே 'ஜி. நாகராஜனுடன்
நல்ல நட்பில் இருந்திருக்கிறார்.
ஜி. நாகராஜன் அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். கம்யூனிஸ்ட் என்பதால் நிர்வாகத்தால் நீக்கப்பட்டார்.
அதன் பிறகும் ஜோப் டி மோகனை சந்திக்க வருவாராம்.
My senior Prof. Fazlulla Khan 's comment on this post has been added below :
" Gabie, how are you? Nice to read your post, and happy to see your photos.
To add to our Prof. Job D. Mohan's pearls - in our class one day, he said 'tea and bun' together became 'teabun' , which eventually transformed into 'tiffin'."
...