பங்களாதேஷில் இந்திய லெப்டினன்ட் ஜெனரல் அரோராவிடம்
பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் நியாஸி படையுடன் சரண் அடைந்தார்.
அரோராவும் நியாஸியும் வெள்ளையர் காலத்தில் ஒருங்கிணைந்திருந்த இந்திய ராணுவத்தில் இணைந்து இருந்தவர்கள்.
டேராடூன் ராணுவ பயிற்சி மாணவர்கள்.
இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.
பழைய நினைவுகளில் மூழ்கினர். பரஸ்பரம் குடும்பம், பிள்ளைகள் ஷேம லாப விசாரணை செய்து கொண்டனர்.
இந்திரா காந்தி உடனடியாக பேசியதை
ஆல் இண்டியா ரேடியோ ஒலி பரப்பியது.
She declared
"Now, Dhaka is a free Capital of a free country "
அப்போது ரேடியோவில் ஜன கரகோஷத்தை கேட்க முடிந்திருக்கிறது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் போராட்டம்
இப்படி இந்திய உதவியுடன் வெற்றி பெற முடிந்தது. இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.
மானேக் ஷா ஃபீல்ட் மார்ஷல் ஆனார்.
..