Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1861

பரமசிவம் எஸ் பின்னூட்டம்

$
0
0

 பரமசிவம். எஸ் எழுதிய பின்னூட்டம் 


எனது 40 வருட ஆதர்சங்களை விட

 R.P. ராஜநாயஹம் ஏன் இவ்வளவு வசீகரிக்கிறார் என்பதை யோசிக்கிறேன்.


முதலாவது...விஷய ஞானம்.இது நல்ல எழுத்தாளர்களின் பொது அம்சம் எனினும், உலக இலக்கியம், தமிழ் இலக்கியம்,சினிமா, உலக சினிமா,இசை,அரசியல், உலக மற்றும் இந்திய வரலாறு,புராணம்,இதிகாசம், அறிவியல்,இவையெல்லாம் போதாது என்று மிக முக்கியமாக ஜோதிடம் என்று எல்லாத்  தளங்களிலும் சர்வ சகஜமாக நுண்ணிய புள்ளி விவரங்களையும் தேவையான இடத்தில்  எந்த நொடியிலும் சொல்லக்கூடிய  இவரது நினைவாற்றல் வேறு யா....................ருக்குமே அமைந்திடாத ஒன்று.


        கிரிக்கெட் ரசிகர், இசை ரசிகர்,திரைப்பட ரசிகர்களுக்கு நடுவே தம் வாழ்வையே தமக்கான விருந்தாக்கிய மிகச்சிறந்த ரசிகர் ..சலிப்பும் சோர்வும் இல்லை.


எல்லாம் தெரிந்த அகம்பாவம் இல்லை. 

எதுவுமே தெரியாதது போல பாவனை செய்து செயற்கையான அடக்கத்தை முகமூடி ஆக்கி அதையே தனது பிரபல்யத்திற்கான முக்கிய காரணி ஆக்கும் புத்திசாலித்தனமும் இல்லை.


அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரண்மனை உத்தியோகம் என்று இருக்கும் காலத்தில்..அரசு வேலைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யச் காத்திருப்போர் மத்தியில்  மிக நல்ல வேலையை மிகச் சாதாரணமாகக் கைகழுவியவர்...


பொருளாதார ரீதியான சமூக அந்தஸ்து,புகழ்,வசதியான வாழ்க்கை போன்ற மனிதனுக்குரிய ஆசைகள் எதுவும் இல்லாத வாழ்க்கையை அதன் போக்கில் ஒவ்வொரு நொடியும் ரசிக்கும் ரசனை மிகுந்த துறவி இவர் ..


சிலரைப் பார்த்து இவர் போல வாழ்க்கை அமைந்து இருக்கக் கூடாதா என்ற எண்ணம் எப்போதாவது வந்து போகும் ..ஆனால் இவரது மனோபாவம் நமக்கு அமைந்து இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்  ராஜநாயஹம் சாரைப் பார்த்து ஏற்பட்டது...

இந்த எளிய ரசனை மிகுந்த வாழ்க்கை யாருக்கும் அமையாது ..இப்படி எல்லோரும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உலகத்தில் ஆனந்த வெள்ளத்திற்குப் பஞ்சம் ஏது?


இவரது எழுத்துக்கள் எல்லாமே எவ்வகையிலும் அடங்காத புதுவித இலக்கியம் எனவே எனக்குப்படுகிறது..


மேலோட்டமாகப் பார்த்தால் பொழுது போக்குக்கான எழுத்து என்று தோன்றும் ..ஆனால் அந்த நான்கு வரிகளில் எவ்வளவு உழைப்பும் ஞாபக சக்தியும் ரசனையும் அடங்கிக் கிடக்கிறது என்பதை யோசித்தால் பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது ..


வலிந்து வெளிப்படுத்தப்படும் ஞானம் அதற்கான மதிப்பை இழக்கிறது ..தானாக வெளிப்படும் ஞானம் அதற்கான மதிப்பைப் பெறுகிறது ..ஆனால் தேடி வந்து புரிந்து கொள்ளப்படும் ஞானம் மிக உயரிய மதிப்பைப் பெறுகிறது ..நீங்கள் எந்த இடத்திலும் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. உங்களது ப்ளஸ் மைனஸ் இரண்டுமே இதுதான் ..


Paramasivam S




Viewing all articles
Browse latest Browse all 1861

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்