Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

நெஞ்சமே வெந்து பெத்தடின் ஊசி

$
0
0

 Pethidine Injection

- R.P.ராஜநாயஹம்


இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் 

மிகுந்த பரவசத்துடன் 

“சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று 

ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.


சந்திரபாபு பெத்தடின் இஞ்சக்ஸன் போதையில் மூழ்கியிருந்தவர்.

கவிஞர் கண்ணதாசனும் பெத்தடின் அடிக்ஸனில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்.


Addiction is a destructivie disease.

 Simply devastating.


சந்திரபாபு தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் ரயில்வே ஸ்டேசனில் ஏதோ தகராறில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார். 

He was a trouble maker.


கவனியுங்கள். அவருடைய சொந்த ஊரில்.


 அவருடைய ஃபெர்ணான்டோ சமூகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் அதிகம். அப்படியிருந்தும் தாக்கப்பட்டார். 


சந்திரபாபு ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்று தெரிந்து தான் அவரை அடித்தார்கள். 

’ஏன்டா நீ பெரிய நடிகன்னா என்னா வேண்ணாலும் செய்வியா?’ என்று 

சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். Disgrace.


முகமெல்லாம் வீங்கிப்போய். உதட்டில் கூட காயத்தோடு வந்த சந்திரபாபுவை சென்னையில் பார்த்து விட்டுத் தான், மிகவும் அதிர்ந்து போய் கண்ணதாசன் தன் பெத்தடின் போதைப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டார்.


"சத்தியம் தவறும் கூட்டம்

தருமத்தை மறந்த கூட்டம்

வித்தைகள் காட்டும் கூட்டம்

வேதனை வளர்க்கும் கூட்டம்

நித்தியம் பார்த்துப் பார்த்து

நெஞ்சமே வெந்து வெந்து

பெத்தடின் ஊசி போட்டேன்

பிறிதென்னைக் காப்பவர் யார்


சந்திக்கும் மனித ரெல்லாம்

தலையையே தின்கின்றார்

வந்தித்து வாழ்த்துச் சொல்ல

வழியிலே ஒருவ ரில்லை

நிந்தித்தே பழகிப் போன

நீசரைத் தினமும் கண்டேன்

சிந்தித்தே ஊசி போட்டேன்

சிறிதென்னைக் காக்க வேண்டி"


              -  கவியரசு கண்ணதாசன்


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>