ஒரு கவிஞரு.
அப்ப அவரு புதுசா வெளியிட்டுள்ள
கவித தொகுப்ப குடுக்க பாக்க வரனும்னாரு.
வேல பாக்கற எடத்துக்கே வரச் சொன்னேன்.
பழசா நெறய்ய கவித ஏற்கனவே போட்டவரு தான்.
இப்ப இந்த புதுச குடுக்க வர்றேன்னு
சொல்றவர என்ன சொல்ல?
வந்தாரு. கவித பொத்தகத்த தந்தாரு.
ஒடனே நான் அந்த நூலுக்கான
வெலய குடுத்தேன்.
அவருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
பணம் அவரு எதிர்பார்க்கல. சும்மா அன்பளிப்பா குடுக்க வந்தா அதுக்கு
பணம் குடுக்குறேன்னா சந்தோஷம் தான.
வசதியில்லேன்னாலும் எங்கிட்ட ஒரு பழக்கம். யாரயாவது பாத்தா ஒடனே ஒரு சாக்லேட் கொடுப்பேன்.
இவருக்கும் ஒரு அம்பது ரூபா சாக்லேட் குடுத்தேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
அவரு கெளம்ப எழுந்திரிச்சி நின்னு நாக்குல சனிய காட்டுனாரு.
"படிங்க. படிச்சிட்டு எழுதுங்க"
எரிச்சலாகி வார்த்தய விட்டேன்.
"ஆடு புழுக்க போடற மாதிரி மொத்தமா போடுறீங்க. போட்டுக்கங்க.
அத என்னை எதுக்கு மோந்து பாக்க சொல்றீங்க "
கவிஞரு கோவமாகி ரோஷத்தோட
பணத்தயும் குடுக்காம,
சாக்லேட்டையும் குடுக்காம
போயிட்டாரு.
..