1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில்
எம். ஜி.ஆர் அமோக வெற்றி பெற்ற போது,
காமராஜர் வெறுத்துப்போய்
தனிப்பட்ட பேச்சில் இப்படி சொன்னாரா?
“ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட கொடுங்க...
அவன் கூத்தியா கிட்ட கொடுத்துட்டு போவான்"
எம். ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி நடந்து விட்ட விஷயம்.
1996 ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டார்.
நடந்த விஷயத்தை வைத்து அதன் பின்னர்
காமராஜர் மேல் இப்படி இட்டுக் கட்டப்பட்ட வசனமாய் இருக்கலாம்.
காமராஜர் இப்படி சொன்னார் என்று கட்டி விட முடியும் தானே?
இப்படி நிறைய கதை நெல்லை கண்ணன்
கட்டி விட்டதாக கூறப்படுகிறது.
நானே இன்னொரு விஷயத்தில் நெல்லை கண்ணன் பேச்சை நம்பி எழுத நேர்ந்து விட்டது.
தகவல் பிழை ஏற்படவே கூடாது என்பதில்
நான் மிகவும் பிரமாணிக்கமாக இருப்பேன். But..
Even Homer nods.
..