Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

நேர்த்திக்கடன், அடகு

$
0
0

 விளாத்திகுளம் சாமிகளின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி. 


இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று 

கிட்டப்பா பாடினார்.

அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா. 

கே. பி. சுந்தராம்பாளின் கணவர். 


இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி 

ஒரு முக்கிய தகவல். 

வயிற்று வலி வேதனையால் 

சொல்லொணா துன்பத்தை

 மாரியப்ப சுவாமிகள் 

அனுபவித்து துடித்திருக்கிறார்.


கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார். வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார்.

தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார். 

தன் சங்கீதத்தை, பாடும் திறனை 

தியாகம் செய்திருக்கிறார். 


தோடி சீத்தாராமையர் என்று ஒருவர். 

விளக்கம் தேவையில்லை.

தோடியை அடகு வைத்து 

தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று 

குடும்பம் நடத்தியிருக்கிறார். 

அடகில் தோடி இருக்கும்போது 

கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார்.


 சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான். சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார்.


அப்படி ஒரு காலம். அப்படிப்பட்ட பிறவிகள். 

……………


Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>