தர்மேந்திரா தன் தந்தை, குழந்தைகளோடு இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்தவுடன்
ஒரு பேட்டியில் தர்மேந்திரா சொல்லியிருந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
"நானும் என் அப்பாவும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரில் ஒரு மிக அழகான பெண் வந்து கொண்டிருந்தார். அப்பா அருகில் இருப்பதால் நான் கண்ணியமாக அந்தப் பெண்ணைப் பார்க்காமல் தவிர்த்து வேறு பக்கம் பார்த்தேன். ஆனால் அவரோ வைத்த கண் எடுக்காமல் மிகுந்த பரவசத்துடன் அந்தப் பெண்ணையே விழுங்கி விடுவது போல
பார்த்துக் கொண்டே தான் இருந்தார்."