Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

மன்மதக் கலை

$
0
0

 ’கல’

R.P.ராஜநாயஹம்


வேதங்களில் இருந்து ஏதாவது ஒரு கதை பற்றி சொன்னால் உடனே பலரும் “ அது அப்படியில்லை. இது எப்படின்னா…’’ என்று ஆரம்பித்து வேறு கதை சொல்வார்கள். 


மகாபாரதம் செவிவழியாக பல கதைகளாக பெருகியிருப்பதால் 

“ அது அப்படியில்ல, இப்படித்தான்..’’ என மறுத்து வேறு மாதிரி சொல்வார்கள்.


தொன்மங்களை எவ்வளவோ எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளால் நிரப்புவதுண்டு தான். 

ப்ரதீபா ரே என்ற ஒரிய எழுத்தாளரின் ‘யக்ஞசேனி’  நூலில் மகாபாரதத்தை 

ஒரு மாறுபட்ட கோணத்தில்

 திரௌபதி கர்ணன் மேல் மட்டுமல்ல, 

கண்ணன் மீதே காதல் கொண்டதாக எழுதியிருக்கிறார் என 

சிற்பி பாலசுப்ரமண்யம் ‘தி இந்து’வில் 

ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

இங்கே உள்ள மகாபாரத பண்டிதர்கள் “ ச்சீ..ச்சீ.. என்ன இது முறைகெட்டத்தனம்” என்று

 முகம் சுழிக்க வேண்டியது தான்.


இப்போது இங்கே ஜெயமோகன் தலையணை, தலையணை, தலையணகளாக மகாபாரதத்தை ’விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல’ எழுதுவது பற்றி

 நான் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.


“ இது கலி காலம். கலிகாலத்தில் வியாசர், பரந்தாமன், பீமன், அர்ஜுனன், திரௌபதி, துரியோதனன் ஆகியவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்.”


நான் சிறுவனாக இருக்கும்போது 

கரூரில் ’டாக்கி டாக்கிஸ்’ தாண்டி மார்க்கெட் அருகில் திராவிட கழகக்கூட்டம் ஒன்று நடந்தது. கறுப்புச் சட்டை அணிந்து பெரியார் ஒரு கட்டிலில் அமர்ந்தவாறு பேசிய போது பிள்ளையார் பிறந்த கதை பற்றி கீழ்கண்டவாறு சொன்னார்.


“ பரமசிவனும் பார்வதியும் ஒரு காட்டில் 

சரசமாக பேசிக்கொண்டு இருந்திருக்காங்க. கொஞ்ச தூரத்தில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் ‘கல’  பண்ணிக்கிட்டு இருந்திருக்குதுக. இதப்பார்த்த பரமசிவன் பார்வதியிடம் 

அந்தக் காட்சியைக் காமிச்சிருக்காரு. 

ரெண்டு பேருக்கும் உடனெ நாமளும் ‘கல’  பண்ணுவோமேன்னு ஆசை வந்திருச்சி.

 அந்த யானைங்களப் பார்த்துக்கிட்டே 

‘கல’  பண்ணதால 

குழந்தை யானை முகத்தோட பிறந்திருக்கு”


கலை என்பதை அய்யா ‘கல’ என்று உச்சரித்தார்.

பெரியார் உடலுறவைப் பற்றி ‘கலை’ என்ற வார்த்தையாலேயே அன்று பேசும்போது குறிப்பிட்டார்.


 உடல் உறவு கூட கலை தானே. 

மன்மதக் கலை எல்லோருக்குமே 

தெரிந்த வார்த்தை. 

'சொல்லித்தெரிவதில்லை மன்மதக் கலை'

 என்பது பழமொழி. 


அதனால் ஐயா கலை என்று சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. 


…………………………………….


மீள் பதிவு


Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>