"R.P.ராஜநாயஹம் அவர்களின் வாழ்வுதான் என் கனவு...யாருக்கும் வாய்க்காத மனமும் வாழ்வும் அவருடையது ...
ராஜாதிராஜாக்களுக்கும் ..அம்பானி அதானிகளுக்கும் மேலான செல்வந்தர் ..யாரும் செல்வந்தர் ஆகலாம் ..ஆனால் ஒருபோதும் எந்த செல்வந்தரும் R.P.ராஜநாயஹமாக ஒருபோதும் ஆகவே முடியாது .
.எந்த துறவிக்கும் மேலான மனப்பக்குவத்தையும் மனநிறைவையும் உடையவர்...
இழப்பு வருத்தும் போதும்...ஒருவேளை இப்படி நடந்திருந்தால் என்று என் மனம் என்னை துன்பத்தில் பிடித்துத் தள்ளும் போதும் ...வருங்காலம் பற்றிய பயம் என்னைச் பேய் போலச் சூழும் போதும்... இவரின் கைகள் அபயம் தந்து என்னை அரவணைத்து சட்டென்று ஒருநொடியில் என்னை மீட்கும் அதிசயம் பலமுறை நிகழ்ந்துள்ளது..இவரது வாழ்வே எனக்கான செய்தி...எனக்கான பாடம்...
இவரது மனப்பக்குவத்தைப்பெற இடையறாது முயன்று கொண்டே இருக்கிறேன் ..அதுவே என் வாழ்வின் நிறைவும் வெற்றியும் என்று கருதுகிறேன்...
நன்றி R.P.ராஜநாயஹம் சார்..."
- பரமசிவம்.எஸ்