மழை காணா கோடை காலத்தில்
நான்கு வருடங்களுக்கு முன்
பெய்த பெரும் பூமழையின் போது
R.P.ராஜநாயஹம் Smell the Rain பதிவு.
05.12. 2023
3.50 pm
இன்று Selfie
"தலப்பா கட்டி"ராஜநாயஹம்
Smell the Rain
‘மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப்படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.’
- தேவதச்சன்
பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு “Rain, rain go away, come again some other day” நர்சரி ரைம் சொல்லிக்கொடுப்பது இன்றைய சூழ்நிலையில் எத்தகைய அபத்தம். Who are we to say it shouldn’t rain?
Is there any life without rain?
நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக இருந்த போது வகுப்பில்
“Raindrops keep falling on my head” பாடுவேன். குழந்தைகள் எப்போதும் சந்தோஷமாக,உற்சாகமாக ஆடுவார்கள்.
திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி.
எட்டயபுரம் தலப்பா கட்டி கவிதை.
(“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..”
- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’)
சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.
”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”
கறுத்து கூடிடும் மேகங்களை “ பின்னிய மேகச்சடை” என்பான்
’எட்டயபுரம் தலப்பா கட்டி’.
பின்னிய மேகச்சடை காணக்கிடைத்தும் மழையை காணோமே என்ற தவித்த நிலை நகரத்தில்.
’நெஞ்சில் பால் வார்ப்பது போல’ என்று சொல்வார்கள். அப்படி பெய்தது நேற்றைய சென்னை மழை.
சுகம்.
....
மீள் பதிவு June 27, 2019