Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

"மேகம் கொண்டு வீடொன்று மின்னல் கொண்டு விளக்கொன்று விண்மீனால் பூவொன்று.."

$
0
0


ஷாஜி இந்த 'நான்கு சுவர்கள்'பாடலை
வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறார்.

"நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்"

ஷாஜி : எம்.எஸ்.விஸ்வநாதனை நெருங்க முடியுமாய்யா?

நான்கு சுவர்கள் என்றாலே
"ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா"
தான் ஞாபகத்தில் வரும்.

இந்த பாடல் கவனம் பெற்றதில்லை.

பாலச்சந்தர் "நான்கு சுவர்கள்" 
கண்ணதாசன் பாடல். இசை எம்.எஸ். வி
எஸ்.பி.பி., சுசிலா பாடிய
"நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை.."காட்சியில் ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ.

ஜெய்சங்கர் நடித்த இரண்டாவது வண்ணப்படம்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ணப்படம்.
ரவிச்சந்திரன் தான் 
'கலர்'கதாநாயகனாயிற்றே.
ஸ்ரீவித்யா, ஒ.ஏ.கே. தேவர் 
படத்தில் உண்டு. 

பாலச்சந்தர் இயக்கியவற்றில்  தனக்கு பிடிக்காதவை என 'நான்கு சுவர்கள்'
'பத்தாம் பசலி'இரண்டை குறிப்பிட்டார்.

பத்தாம் பசலியில் நாகேஷுக்கு
 வி.குமார் இசையில் செளந்தர்ராஜன் பாடிய அருமையான பாடல் 

"வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

காற்றடிக்குது மழையும் கொட்டுது
ஓலைக்குடிசையிலே.."

உட்கார்ந்து பார்க்கவே முடியாத பழைய படங்களில் கூட
எப்போதுமே அற்புதமான பாடல்கள் இருக்கும்.
இசைத்துறை எப்போதும் பெர்ஃபெக்ட்.

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>