Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1858

கடல்

$
0
0

 கடல் தன் காதலை பூமிக்கு சொல்வதற்காக திரும்ப திரும்ப தழுவி செல்கிறது . பூமி அதை உதாசீனம் செய்து மறுக்கும்போது பெரும் சத்த இரைச்சலோடு கல் பாறைகள் மீது அறைந்து சொல்கிறது . சமாதானமாகாமல் சூறைக்காற்றாக வீசி தன் மனதை வெளிப்படுத்துகிறது . கடலின் அலைகள் காதலின் கைகள் !'

பாப்லோ நெருடா முக்கிய கதாப்பாத்திரமாக வரும் Il Postino ( The Postman) படத்தில் பாப்லோ நெருடா கடல் பற்றி சொல்வதாக இந்த வசனம் வரும். ஆஹா !
அருமையான படம் . 

யமுனா ராஜேந்திரன் இந்த 'போஸ்ட்மேன்'படம் பற்றி நல்ல கட்டுரை எழுதியுள்ளார்!
நேர் எதிர்மறையாக ஜோசப் கான்ராட் சொல்கிறார் .

சுனாமியை பார்த்து விட்டோம் .அனுபவித்தவர்கள் கான்ராட் சொல்வது சரி என்று தான் சொல்ல முடியும் .மனிதனின் 'நிம்மதியின்மை 'யின் கூட்டுக்களவானி தான் கடல் என்று கான்ராட் அபிப்பராயபடுகிறார் . கடல் மனிதனுடன் சிநேகமாக இருந்ததில்லை .
The sea has never been friendly to man.
At most it has been the accomplice of human restlessness.
தி.ஜானகிராமன் கடலையும் மௌனத்தையும் இணைத்து அலையோசையை விவரிக்கிறார் .

'நிசப்தமாய் இருந்தது . கடலலை மட்டும் அந்த மௌனத்தின் மீது மோதி ஏறி , கலைந்து விழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது '
'குழந்தை ஷேக்ஸ்பியர்'ஆர்தர் ரைம்போ வின் மிக பிரபலமான பிரஞ்சு கவிதை கடலை சூரியனுடன் இணைத்து 'சாசுவதம் 'என்பதை விளக்குகிறது .

It Has been found again! What?
Eternity.
It is the Sea mingled with the Sun.
…………………………………

எஸ்.வைதீஸ்வரன் பூமியின் இடுப்பை சுற்றி குலுங்கி ஆடும் நீலப்பாவாடை கடல்
என்பார்.
கடல்
பூமியின் இடுப்பை சுற்றிக்
குலுங்கி ஆடும்
நீலப்பாவாடைக்குள்
ஓயாமல் விளையாடும் மீன்களுக்கு
ஏன் சலிக்கப் போகிறது?
………………………………………………………………
மீன் கூடையில்
கடல் வாசனை வருகிறது
கடலுக்கு சென்றேன்
அது மீன் வாசனை என்றறிய…..
……
அலைகள் சமுத்திரமல்ல
அலைகளின்றி
சமுத்திரமில்லை.
…………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_22.html



Viewing all articles
Browse latest Browse all 1858

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>