Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

பழைய கணக்கு

$
0
0

ராஜாஜிக்கு 1930களில் காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தைப்பொருத்தவரை தீரர் சத்தியமூர்த்தி தான் rival. சத்தியமூர்த்தியின் சீடர் தான் காமராஜர் என்பதால் 1950,60களில் எப்போதும் இருவருக்கும் ஏழாம்பொருத்தம் தான்.


காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராயிருந்த போது
ராஜாஜி "காமராஜர் ஆட்சி ஊழல் ஆட்சி"என்றார்.
காமராஜர் அப்போது சொன்னார் "இவர் என்ன பெரிய பரசுராமரா?"
"காமராஜர் திட்டம்"பக்தவத்சலத்தை பின் தமிழக முதல்வராக்கியது.
.................

1967 ல் காங்கிரசை எதிர்த்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.கவுடன் கூட்டு.
ராஜாஜி சொன்னார் : "பிராமணர்கள் ஒரு கையால் பூணூலை பிடித்து கொண்டு மறுகையால் தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்கள். "

காமராஜர் பற்றி ராஜாஜியின் கடுமையான தாக்குதல்
”அந்த கறுப்பு காக்காயை வீழ்த்துங்கள்!”

பெரியார் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்தார். காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் : 'பச்சை தமிழன் காமராஜ்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த பூமியில் தோண்றியிராத அதிசய மனிதர் காமராஜ்! '

தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. (ஹிந்தி எதிர்ப்பு , காங்கிரஸ் வெறுப்பு என்று காரணம் யாரும் இங்கே தயவு செய்து சுட்டி காட்ட கிளம்பி விட வேண்டாம்.)

கொஞ்ச நாளில் ராஜாஜி சொன்னார்
"திமுக வுடன் தேனிலவு முடிந்து விட்டது."
அண்ணாதுரை விடவில்லை "ஆம். தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது!"

1971ல் அண்ணா இல்லாத திமுகவை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இணைந்து கருணாநிதியை எதிர்த்து மிக மோசமான படு தோல்வியை தழுவினர்.( பங்களா தேஷ் வெற்றி என்று காரணங்களை அடுக்குவது இரண்டாவது பட்சம்.)


எம்ஜியாரின் எழுச்சியில் ஸ்தாபன காங்கிரசும் சுதந்திரா கட்சியும் காணாமல் போனது.


எம்ஜியார் இருக்கும் வரை கருணாநிதி பருப்பு வேகவில்லை. எம்ஜியாரின் மரணம் மீண்டும் கருணாநிதிக்கு ஆட்சி கிடைத்து கொஞ்ச நாளில் மீண்டும் இழப்பு.

மூதறிஞர் ராஜாஜி , காலா காந்திகாமராஜர் இருவரையும் தோற்கடித்த கருணாநிதிக்கு 20 வருடத்தில் ஜெயலலிதாவிடம் 1991ல் மிக மோசமான தோல்வி ஏற்பட்டது .(ராஜீவ் கொலை தான் என்ற காரணம் இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை.அது உள்ளங்கை நெல்லிக்கனி.)

கருணாநிதியிடம் ராஜாஜி, காமராஜர் தோல்வி மகத்தான சோகம். ஜெயலலிதாவிடம் கருணாநிதி தோற்றது கேலி கூத்து.

வரலாற்றின் குரங்குத்தனம்!
“Hegal remarks somewhere that history tends to repeat itself. He forgot to add: the first time as tragedy, the second time as farce”
-Karl Marx
............................................
http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_3740.html

Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>