சிறைச்சாலை மனித மனத்தை வளப்படுத்துவதில்லை. சிறையில் குற்றத்திற்கு தண்டனை இல்லை. சிறையில் கைதிக்கு பாதுகாப்புமில்லை. எதற்கு தான் சிறைச்சாலை? கைதிகளை மனித குணத்திலிருந்து உடைத்தெடுக்கிற சிறை, ஒருவருக்கொருவர் அபாயகரமானவர்களாகவும் ஆக்கி விட சிறந்த இடம்.
மகாநதியில் கமல் ஹாசன் சிறையின் சிக்கலான இழைகளை மனதை பிசைகிற விதமாக காட்டி கலங்க வைத்ததுண்டு.
அதற்கு பிறகு வெற்றி மாறனின் வடசென்னையில் கோரமான சிறை முகத்தை இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது.
மனம் பதைபதைக்கும் விதமாக.
ரொம்ப திகைப்பாக, பயமாயிருக்கிறது.
இப்படியா? இவ்வளவிற்கா?
விலங்கு பூட்டப்பட்டவர்கள் சிறையில் மனித விலங்குகளாவது தான் யதார்த்தமா?
அதற்கு பிறகு வெற்றி மாறனின் வடசென்னையில் கோரமான சிறை முகத்தை இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது.
மனம் பதைபதைக்கும் விதமாக.
ரொம்ப திகைப்பாக, பயமாயிருக்கிறது.
இப்படியா? இவ்வளவிற்கா?
விலங்கு பூட்டப்பட்டவர்கள் சிறையில் மனித விலங்குகளாவது தான் யதார்த்தமா?
வட சென்னையில் உச்சமான விஷயம் சிறைச்சாலை சூழல் படமாக்கப்பட்டுள்ள விதம்.
யதார்த்தம் இது தான் எனும் போது வெளியே அரசியல், கட்சி, மீடியா எல்லாமே மிகப்பெரிய பகடி தான் என்றாகிறது.
மற்ற படி வடசென்னை படத்தில் எதுவுமே புதியதானதோ, புதிரானதோ இல்லை.
கதாநாயகி வசனத்தில் ’மக்கு கூதி’ அசத்தல்.காதில் தேன் வந்து பாய்கிறது.
One more feather in Dhanush’s cap.

