Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

No Resemblance without Strangeness

$
0
0

மேட்டூர் அருகே நெரிஞ்சிப்பேட்டையில் ராசுக்குட்டி ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது
மனோரமா ஒரு நடிகனை பார்த்து “இவன பாத்தா எனக்கு யாரோ ஒருத்தர் ஞாபகம் வர்றாரு. இவன் சாயல் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஞாபகம் வருது” என்று சொன்னார்.
நான் மட்டுமே இதை ஆர்வமாக கவனித்தேன்.

மறு நாள் காலையிலும் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே மனோரமா மீண்டும் சொன்னார் ”யாரோ ஒர்த்தர் இவன மாதிரியிருப்பாரே..ன்னு தோணுது”
நான் மனோரமாவிடம் “ யாருன்னு ஞாபகம் வரலியாம்மா?”
மனோரமா “ சொல்றேன். எப்படியும் ஞாபகம் வந்துடும்”
என்னுடைய இயல்பான ஆர்வம். மறு நாள் நானே கேட்டேன்.
சாயல் என்பதே ஒவ்வொருவர் கண்ணுக்கு ஒவ்வொரு விதமாக தோற்றம் கொள்ளும். இன்னொருவர் பொதுவாக அதை “சே..சே.. அவருக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்கும்படியாக இருக்கும்.
அடுத்த நாள் நான் “கண்டுபிடிச்சிட்டீங்களா?”
மனோரமா “ அவர் ஒரு நடிகர் தான்..எப்படியும் சொல்லிடுறேன்”

கொஞ்ச நேரத்தில் என்னிடம் மனோரமா “ ஞாபகம் வந்துடுச்சி..சுப்பையா அண்ணன்! சுப்பையா அண்ணன் சாயல் இவன் கிட்ட இருக்கு”

எஸ்.வி.சுப்பையாவை குறிப்பிடுகிறார்.
Strange!

எஸ்.வி.சுப்பையா எப்பேர்ப்பட்ட நடிகர். (அப்போது அவர் இறந்து  12 வருடங்கள் ஆகியிருந்தது.)
அவர் சாயல் இந்த செம்புலியிடம் மனோரமாவுக்கு தெரிந்திருக்கிறது.
செம்புலியாக நடித்தவனுக்கு சுட்டுப்போட்டாலும் நடிப்பே வராது.
ராசுக்குட்டி கேமராமேன் எம்.சி. சேகர் ( இயக்குனர் P.வாசுவின் சித்தப்பா) ரொம்ப மூட் அவுட் ஆகிக்கொண்டிருந்தார். ’இவன் நடிக்கிற ஷாட் ஓகே ஆக ரொம்ப டேக் ஆகி விடுவதால் களைப்பு அதிகமாகிறது. ஃபில்ம் ஏராளமா வேஸ்ட் ஆகிறது.”
இந்த செம்புலியை இப்போது நான் சாப்பிடும்போது டி.வியில் ஓடிய சீரியல் ஒன்றில் மீண்டும் பார்த்தேன்.






Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>