Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

நாதஸ்வர பெருங்கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம்

$
0
0

நாதஸ்வர பெருங்கலைஞர்
காருக்குறிச்சி அருணாசலம்
தன் மூன்று மனைவியருடன் இருக்கும்
அபூர்வ புகைப்படம் இது.
முதல் மனைவி ராஜலட்சுமி அம்மாள்.
இவர் தனக்கு குழந்தையில்லாததால் உறவிலேயே
ஒரு பெண்ணை கணவருக்கு
திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
அந்த பெண் உயிருடன் இருக்கவில்லை.
உடனே இறந்து விட்டார். அதனால் மற்றொரு உறவுப்பெண் பாக்யலட்சுமியை தன் கணவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
பாக்யலட்சுமி அம்மாள் மூலம் புத்ர பாக்யம்.
ஒரு மகன் சரவணபவன்.
மற்றும் ஐந்து பெண் புத்திரங்கள்.
காருக்குறிச்சி அருணாசலம் அடுத்து
மணம் புரிந்த ராஜலட்சுமி அவர்கள்
பழம்பெரும் நடிகை ஈ. வி. சரோஜாவின்
ஒன்று விட்ட சகோதரியாவார்.
இவர் மூலம் மூன்று ஆண் குழந்தைகளும்
மூன்று பெண் குழந்தைகளும்.
ஆக மொத்தம் காருக்குறிச்சிக்கு
பன்னிரெண்டு குழந்தைகள்.
நாற்பத்திரண்டு வயதில் பெருங்கலைஞர்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்பது பெருந்துயரம்.
ராஜலட்சுமியின் ஒரு மகளை பழம் பெரும் நடிகர்
எம். கே. ராதாவின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
மற்றொரு மகளை பழம்பெரும் நடிகை குசல குமாரியின் மகன் மணந்தார்.
பாக்யலட்சுமியின் மகள் சுப்புத்தாயின் கணவர் அக்ரிகல்சுரல் ஜாயிண்ட் டைரக்டர்.
இந்த சுப்புத்தாய் அம்மாளின் மகன் சதீஷ், சதீஷின் மகன் தீபக் இருவரோடும் நான் மொபைலில் பேசும் பேறு கிடைத்தது.
காருக்குறிச்சியின் மகள் சுப்புத்தாய் அம்மாளும்
என்னிடம் பேசினார் என்பது என் பாக்யம்.
காருக்குறிச்சியின் பேரன் சதீஷும்,
கொள்ளுப் பேரன் தீபக்கும் கொடுத்த அபூர்வ புகைப்படங்கள், தகவல்கள் விசேஷமானவை.
இதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
....

Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>