ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .
ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.
டைகர் வரதாச்சாரியாரிடமும்
சங்கீத அத்யயனம்.
பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார்.
ரஞ்சன் - மயிலாப்பூர் ரமணி.
ரஞ்சன் நிஜமாகவே ஏரோப்ளேன் ஓட்டுவார்.
ஏரோப்ளேன் ஓட்டுவது போல
நடிக்கும் நடிகர்களைத் தான் பார்த்திருக்கிறோம்.
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில்
(வைஜயந்திமாலாவின் தாயார்) வசுந்திராதேவியுடன்.
அசோகமித்திரன் சொல்லி
வசுந்தரா தேவி பற்றி,
ரஞ்சன் பற்றி கேட்க வேண்டும்.
அவ்வளவு ரசனையோடு
வேறு யாராலும் பேசவே முடியாது.
சந்திரலேகா(1948) வில் வில்லன்.
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார்.
அந்த காலத்தில் ரஞ்சன்
தமிழ் நவீன இலக்கிய வாசகர்.
இதுவும் கூட அவரின் தனித்தன்மைக்கு உதாரணம்.
ஹிந்தி படங்களில் நடித்தார்.
பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார்.அஞ்சலி தேவி ஜோடி.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா,
தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா "
டி எம் எஸ் பாட்டு
குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.
இன்றைக்கு எழுபது வயதுடையவர்கள்
பள்ளியில் படிக்கும் காலத்தில்
சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சனுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்'
இது பற்றி எப்போதும் சூடான விவாதம்.
ஒரு எழுபது வயதுக்காரர் சொன்னார் இதை.
நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-
"நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?
நாக்கை அறுத்து போட்டுட்டு
பாயாசத்தை குடிச்சு பாருன்னு
சொல்ற மாதிரி இருக்கு!
மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"
காதல் வசனம் !!
...
ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.
டைகர் வரதாச்சாரியாரிடமும்
சங்கீத அத்யயனம்.
பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார்.
ரஞ்சன் - மயிலாப்பூர் ரமணி.
ரஞ்சன் நிஜமாகவே ஏரோப்ளேன் ஓட்டுவார்.
ஏரோப்ளேன் ஓட்டுவது போல
நடிக்கும் நடிகர்களைத் தான் பார்த்திருக்கிறோம்.
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில்
(வைஜயந்திமாலாவின் தாயார்) வசுந்திராதேவியுடன்.
அசோகமித்திரன் சொல்லி
வசுந்தரா தேவி பற்றி,
ரஞ்சன் பற்றி கேட்க வேண்டும்.
அவ்வளவு ரசனையோடு
வேறு யாராலும் பேசவே முடியாது.
சந்திரலேகா(1948) வில் வில்லன்.
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார்.
அந்த காலத்தில் ரஞ்சன்
தமிழ் நவீன இலக்கிய வாசகர்.
இதுவும் கூட அவரின் தனித்தன்மைக்கு உதாரணம்.
ஹிந்தி படங்களில் நடித்தார்.
பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார்.அஞ்சலி தேவி ஜோடி.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா,
தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா "
டி எம் எஸ் பாட்டு
குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.
இன்றைக்கு எழுபது வயதுடையவர்கள்
பள்ளியில் படிக்கும் காலத்தில்
சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சனுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்'
இது பற்றி எப்போதும் சூடான விவாதம்.
ஒரு எழுபது வயதுக்காரர் சொன்னார் இதை.
நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-
"நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?
நாக்கை அறுத்து போட்டுட்டு
பாயாசத்தை குடிச்சு பாருன்னு
சொல்ற மாதிரி இருக்கு!
மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"
காதல் வசனம் !!
...