அர்ஜுனனுக்கும் பாஞ்சாலிக்கும்
திருமணம் செய்வது பற்றி
துருபதன் ஆலோசிக்கிறான்.
தர்மரை கேட்கிறான்.
தர்மர் "பாஞ்சாலியை
நாங்கள் ஐந்து சகோதரர்களுமே
திருமணம் செய்துகொள்ள வேண்டும்
என்று தாயார் குந்தி உத்தரவு "என்கிறார்.
பாஞ்சாலியின் தகப்பன் துருபதன்
பதட்டமடைந்து வேதனையுடன்
"அது எப்படி சாத்தியம் ?''என்று கேட்கிறான்.
வியாசரிடம் "இது முறை கெட்ட செயல் அல்லவா?"புகாராக துருபதன் முன் வைக்கிறான்.
வியாசர் தேற்றுகிறார் "ஐந்து பேரை
பாஞ்சாலி மணப்பது தவறே அல்ல.
இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஜடிலை என்ற பெண்,
சப்த ரிஷிக்களையும் மணந்திருக்கிறாள்.
வார்க்ஷி என்ற பெண்
'பிரதேசுக்கள்'என்ற பத்து சகோதரர்களை
கல்யாணம் செய்திருக்கிறாள் "
ஜடிலைக்கு ஏழுபேர்,
வார்க்ஷிக்கு பத்து பேர் என்று
பாஞ்சாலி கணவர்களை விட அதிகமாக
பாஞ்சாலி காலத்திற்கு முன்
அந்த இரு ஸ்த்ரிகள்
வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.