Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1863

தி. ஜானகிராமனும் கீழ விடயல் கருப்பூரும்

$
0
0

 தி. ஜானகிராமனும் கீழ விடயல் கருப்பூரும் 


தி. ஜானகிராமன் பிறந்த ஊர் தேவங்குடி தான்.        அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர். 

தஞ்சை ஜில்லா. 


அவருடைய அப்பா தஞ்சையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியிருக்கிறார்.

 அதனால் தி. ஜா.வின் பால்யமெல்லாம் தஞ்சையில் தான்.

 பள்ளிப்படிப்பு காலம். 

கல்லூரி படிப்பு கும்ப கோணத்தில். 


தஞ்சையில் தி. ஜா.வின் தகப்பனார் பிரவச்சனம் செய்தார். ஒரே டெக்ஸ்ட் வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து வரி, வரியா விளக்கி தமிழில் ஹரி கதா செய்வது தான் பிரவச்சனம். 


ஜானகிராமன் தகப்பனாரை ராமாயண பாகவதர் என்று க.நா.சுப்ரமண்யம் குறிப்பிடுவார். 


ஜானகிராமனுக்கு அண்ணன் பெயர் ராமச்சந்திரன். 

அவர் மாயவரம் ஸ்கூலில் தமிழ் பண்டிட். 

வேத பாடசாலையில் சம்ஸ்கிருதமும் படித்தவர் இந்த தமிழ் பண்டிட். 


ஜானகிராமனின் இரு சகோதரிகளுக்கு ஒரே கணவர். அவர் பெயரும் ராமச்சந்திரன் தான். 


'கமலம்'குறுநாவல் தொகுப்பை 

"இந்த குறுநாவல்களில் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக வரும் என் இரண்டு சகோதரிகளின் கணவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம் "என்று குறிப்பிட்டிருந்தார்.

 மீனாட்சி பதிப்பகம் வெளியிட்ட போது கமலம் தொகுப்பில் இந்த சமர்ப்பணம் இருந்தது. 


இந்த அத்திம்பேர் ராமச்சந்திரன் நிலபுலன்களுடன் 

வாழ்ந்த ஊர் தான் 'கீழவிடயல் கருப்பூர்'. 

அன்றைய தஞ்சை ஜில்லாவில் வலங்கைமானுக்கு அருகில் இருக்கிற ஊர். 


முதிய வயதில் ஜானகிராமனின் பெற்றோர் இந்த மருமகன் வீட்டில் தான் செட்டில் ஆனார்கள். 


ஜானகிராமன் டெல்லியில் இருந்த காலத்தில் இந்த கீழ விடயல் கருப்பூருக்குத் தான் பெற்றோரை காண்பதற்கு

 வர வேண்டியிருந்தது. 

ஜானகிராமன் பிள்ளைகள் சாகேத ராமனுக்கு, ரமணனுக்கு, உமா சங்கரி மூவருக்கும் தாத்தா, பாட்டி ஊர் என்றால் அத்தைகள் ஊர் தான். 


ஆனந்த விகடன் 5.8.20 இதழில் 

சி. ஏ. முத்து சொல்வது தகவல் பிழை. 

தி. ஜானகிராமன் பிறந்த ஊர் கீழவிடயல் கருப்பூர் என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறார்.

..


Viewing all articles
Browse latest Browse all 1863

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>