Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1854

புலி வால்

$
0
0

 

ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி ஒன்றேகால் வருடமாகிறது. (ஜூன் 2019). 


யோசிக்காம  கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. 

களையெடுக்கும் போது பயிரும் அடி வாங்குவது நடக்காமலிருக்குமா? 


ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது. 


போன வாரம் அன்ஃப்ரண்ட் செய்யும் போது  Stress. 


ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே. 


கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது. 


மீண்டும் மீண்டும் ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.


 ஃப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் பலர் 

என்னை வாசிக்கிறார்கள். சிலர் கமெண்ட் போடவும் செய்கிறார்கள். 


ஃப்ரண்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும்

 லைக் கொடுக்காமல்,

 கமெண்ட் போடாமல் 

வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 

படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள் கூட. 


 ஃபேஸ்புக்கில் என்னை மட்டுமே படிக்கும்

 சிலர் உண்டு.  ஒவ்வொரு பதிவு பற்றியும் சொல்வார்கள். லைக் கொடுப்பதில்லை. 

ஏன் லைக் கொடுக்கவில்லை, கமெண்ட் போடுவதில்லை என்று நான் கேட்டதேயில்லை.

என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலர் கமெண்ட், லைக் ஒரு தடவை கூட போட்டதேயில்லை தெரியுமா? 

என் ஃப்ரண்ட் லிஸ்டிலும் அவர்கள் கிடையாது. 

 சிலர் இங்கே படித்து விட்டு வாட்ஸ் அப்பில் கமெண்ட் போடுவார்கள். 

பதிவு போட்ட அந்த சில நிமிடங்களில் படிப்பவர்களை அறிவேன்.


எனக்கு லைக், கமெண்ட் தேவையில்லை என்று   இரண்டு ஸ்டேட்டஸாக 

கடந்த நான்கு வருடங்களில் போட்டிருக்கிறேன். 


ராஜநாயஹம் blog hit முப்பத்திரெண்டு லட்சத்தை நெருங்குகிறது . Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில். 


ட்விட்டரில் படிக்கிறார்கள்.


ஃபேஸ்புக் என்பதே 


புலி வால புடிச்ச கத.


தினமும் என் மொபைல் நம்பர் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பாக்ஸில் கேட்கிறார்கள். 

ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக கால் போட முயற்சிக்கிறார்கள். 


போன் போட்டவர்கள் ரெண்டு மணி நேரம் 

பேசி விட்டு 'சாரி சார், போன்ல சார்ஜ் போயிடுச்சி' 


தன் வலைத்தளத்தை படிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேட்கிறார்கள். 


வீடீயோ தினமும் அனுப்பி, அதை பார்க்கச் சொல்கிறார்கள். அபிப்ராயம் சொல்லவில்லை என்று சடைக்கிறார்கள். 


எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் புத்தகங்கள் 

அனுப்ப வேண்டி, விலாசம் கேட்கிறார்கள். 


'ராஜநாயஹம் நீங்க நல்லா எழுதுறீங்க. 

உங்க விலாசம் கொடுங்க. என்னோட அஞ்சு புத்தகங்கள அனுப்புறேன்.. '


புத்தகங்கள் அனுப்பியவர்கள் 'இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே'என்று 'ஏன் இன்னும் விமர்சனம் செய்யவில்லை'என்ற எரிச்சலில். 


ஏதோ நான் கடன் வாங்கி விட்டாற் போல. 


Internet magazines : 'எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியனுப்பவும். நீங்கள் புதிதாக எழுதியதாக இருக்க வேண்டும்.' 


தங்களின் எதிர்பார்ப்பை நான் ஈடேற்றாததால் 

வருத்தத்திலும் கோபத்திலும் வேறுவிதமாக வினையாற்றுகிறார்கள். 

எதிரிகளாகிறார்கள். 


'ராஜநாயஹம் தலக்கனம் பிடிச்ச ஆளு.' 


என் போராட்டமான வாழ்க்கை முறை, 

மற்றவர்கள் எதிர் பார்ப்புக்கு ஈடு கொடுக்கும் 

நிலையிலெல்லாம் இல்லை. 


இவர்கள் யாரையுமே'என்னை படியுங்கள் 'என்று நான் கேட்டதேயில்லை. 


எல்லோருமே என்னை படித்தவர்கள். 

பரஸ்பரம் வேண்டுகிறார்கள்.


ம்ஹூம். மாட்டேன், போ. 


..


Viewing all articles
Browse latest Browse all 1854

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>