"என்ன செய்தென்ன?
காசை கண்ணால் பார்க்க முடியவில்லை.
இண்டெலக்சுவல் என்று
இறக்கை முளைத்த இலவ விதை போல
ஒரு பட்டம் தான் மிஞ்சிற்று"
இறக்கை முளைத்த இலவ விதை!
என்ன ஒரு keen observation.
தி. ஜானகிராமன்
'மாடியும் தாடியும்'சிறுகதையில்.
"முயற்சி இருக்கிற புருஷ சிம்மத்தை
லட்சுமி வலிய வலிய வந்து
இறுகத் தழுவிக்கத்தான் செய்வா.
எத்தனை சக்தி வந்து
அவளைப் பிடிச்சு இழுத்தாலும்
அவ பிடிச்ச பிடியை விடுவாளோ! "
....