2018 அக்டோபர் 24 தேதியில் ந.முத்துசாமி மறைந்த போது ஏற்பட்ட துக்கம் வாழ்நாளில் இன்று வரை காணாதது.
நொறுங்கிய நிலை.
வேறெந்த சாவும் இன்று வரை
அந்த அளவுக்கு என்னைப் பாதித்ததில்லை
வேப்பிலை சாறு குடித்தால் இழப்பின் பெருந்துக்கம் குறையும் என்று
பலமுறை குடிக்க வேண்டியிருந்தது.
ஒரு பெரியவர் ”இப்படி தாங்க முடியாத துயரம் ஆறு மாதம் வரை மனதை ரொம்ப வருத்தும். அதற்கு பிறகு நிவாரணம் உண்டு” என்றார்.
துக்கம் கொஞ்சமும் நீங்கிய பாடில்லை.
இழப்பின் துயரம் அகலவில்லை.
உதாரணப்படுத்திக்காட்டவே முடியாத அளவிற்கு, எவரோடுமே ஒப்பிட்டு காட்ட முடியாத
ஒரு அற்புத மனிதர்.
Muthuswamy's death leaves a heartache no one can heal.
His special face, his special smile ...
https://rprajanayahem.blogspot.com/2018/11/blog-post.html