Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1854

சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்'சிறுகதை தொகுப்பு

$
0
0

 '2004 டிசம்பர் மாதம்

 'சௌந்தர சுகன்'பத்திரிகையில்

 R. P. ராஜநாயஹம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி' 


கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்.

 ஜெயகாந்தன் எழுத்தை முழுமையாக படித்திருந்தேன். ஜெயகாந்தனை விட

 பெரிய எழுத்தாளன் இருக்க முடியாது என்று நம்பியிருந்தேன். 


நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது 

என் தம்பியொருவன் அப்போது ‘பிரசாதம்’ என்று ஒரு புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். (இந்த தம்பி தான் சென்ற வருடம் கொராணாவிற்கு பலியான

 நாகை சன் டிவி ரிப்போர்ட்டர்) 


‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது.


 அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன்.

 முன்னுரையை வாசித்தேன்.

 ‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே 

என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’

 என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை 

என்னைச் செயலோயச் செய்துவிட்டது. 


முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது.

 ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் தான் கிணற்றுத் தவளை. என்னுடைய நம்பிக்கை உடைந்து விட்டது. 

அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். 

கிடாரி, 

ஒன்றும் புரியவில்லை,

வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை

அந்த வயதில் ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன.


 எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், 

சீதை மார்க் சீயக்காய்த் தூள்,

 மெய்+பொய்=மெய் எல்லாமே 

ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.


SERENDIPITIOUS HAPPY DISCOVERY!

 யார் இந்த சுந்தர ராமசாமி? 

ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை

 ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி.

 ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத 

LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக 

இவரிடம் தெரிகிறது. 


இப்போது நினைக்கிறேன். எனக்கு வாசகனாக       ஒரு TRANSFORMATION சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.


அப்புறம்  ஜானகிராமன் 'மோகமுள்''செம்பருத்தி'   'உயிர்த்தேன்',  'அம்மா வந்தாள்'என்று வாசிக்க ஆரம்பித்து

 ஒரு ரவுண்டு வந்தேன்.


Viewing all articles
Browse latest Browse all 1854

Trending Articles