சஹானா பாடினாலும் கேட்டாலும்
மனம் சாந்தமடையும்.
சாமா ராக ’சாந்தமுலேகா’ கேட்டால் சாந்தம் கிடைக்கும் என்று ’செய்தி’ கதையில் தி.ஜானகிராமன் சொல்கிறார். அது உண்மை தான்.
என் அனுபவத்தில் பிலஹரி போல சஹானா கூட கவலையைத்தீர்க்கும்.
காருக்குறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரத்தின்
சஹானா கேட்ட போது இந்த நிமிடத்தில் மரணம் வாய்த்திடாதா என்று எனக்கு தோண்றியதுண்டு.
கவலையில் இருக்கும் போது கதனகுதூகலம் ராகம் (ரகுவம்ச சுதா கீர்த்தனை)கேட்டால் எரிச்சலாயிருக்கும்.
சஹானா என்பதற்கு ’பெருமை காத்தல்’ என்று அர்த்தம்.
சஹானா கோபத்தை தணிக்கும் வல்லமை கொண்டது.சண்டை சச்சரவுகளையும் நீக்கும் என்று ’ராக சிகித்சா’வில் சொல்லப்பட்டுள்ளது.
தியாகப்ரும்மத்தின் ’கிரிபை’ ’வந்தனமு ரகுநந்தனா’ ஆகிய கீர்த்தனைகள் சஹானா ராகத்தில்.
’கிரிபை’ எம்.டி ராமநாதன் பாடியுள்ளதைக் கேட்கவேண்டும்.
’வந்தனமு ரகுநந்தனா’ உன்னி கிருஷ்ணன் பாட அவர் கச்சேரியில் எப்போதும் சீட்டு எழுதிக் கொடுக்கவேண்டும்.
சினிமாவில் சஹானா என்றால் உடனே நினைவுக்கு வருவது “ பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன்” என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்.
அவ்வை சண்முகியில் ‘ருக்கு ருக்கு ருக்கு’ சஹானா.
கருடத்வனி ராகம் திருமணத்தில் தாலி கட்டும் சமயம் பாடினால் பொன்னுமாப்பிள்ளைக்கு சீரான சுகங்கள் தருமாம். தியாகராஜ கீர்த்தனை’பரதத்ர மேருக’
பைரவி ராகம் மரணப்படுக்கையில் இருப்பவருக்கு சுகசாந்தி தரும்.
உபசாரமு ஜேஸே வாருன்னா ரனி மரவகுரா
உன்னை உபசரிப்பதற்கு சுற்றிலும் சிலர்(சீதை,அனுமன் மற்றும் சகோதரர்கள்) இருக்கிறார்கள் என்பதனால் என்னை மறந்து விடாதய்யா
சங்கராபரணம் மனநோய்க்கு சிறந்த சுகமருந்து.
’ஸ்வர ராக சுதா ரஸ யுத’
சங்கராபரண ராகத்தில்
’வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்’
பலே பாண்டியா படத்தில் கதாநாயகன் தற்கொலைக்கு முயற்சிக்கிற மன நோயாளி. இந்த ராகத்தில் தெரிந்தே தான் இசையமைப்பாளர் இந்தப்பாடலை அமைத்தாரா!
’வாடிக்கை மறந்ததும் ஏனோ’ கல்யாண பரிசு
’அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா’
’மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி’
’ஒரு மணியடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் தரிசனம்’
சங்கராபரண ராக மெட்டில் அமைந்த பாடல்கள் தான்.
ஆனந்த பைரவி ராகம் ரத்தக்கொதிப்புக்கு சுகம் தரும் இயல்பு கொண்டது.
தியாகய்யரின் ஆனந்த பைரவி கீர்த்தனை
” நீகே தெலியக போ தே
நே நேமி ஸேயுது ரா”
’உனக்கே தெரியாதென்றால் நான் என்ன தான் செய்ய முடியும்
என் நெஞ்சத்துயரம் உனக்கே தெரியவில்லை என்றால் நான் என்ன தான் செய்ய’
சினிமாவில் ஆனந்த பைரவி
‘போய் வா மகளே போய் வா’
’தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம்
வீசும் போது '
‘கொஞ்ச நாள் பொறு தலைவா’
....