11ம் வகுப்பில் க்ளாஸ் எடுத்து விட்டு பீரியட் முடிந்தவுடன் கீழே இறங்கி 1ம் வகுப்பு கிளம்புகிறேன். இரண்டு 1ம் வகுப்பு சிறுவர்கள் ஓடி வருகிறார்கள். ஜெய் ப்ரசீத், அகில் வேந்தன்.
naughty boys!
“Sir! Sir!”
“Jai Prasith,Akhil Vendhan! How are you children! Where were you?”
“We went for IMO sir.. I helped him in all the questions, sir!” அகில்! கண்ணாடி போட்டிருப்பான்.
“very good..” குழந்தைகளுடன் பேசிக்கொண்டே காரிடார் படியேறும்போது வழுக்கி விழுந்து விட்டேன். நான் சிரமப்பட்டு எழுகிறேன். இருபுறமும் வந்து கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் என் இரு கைகளையும் பிடித்து இயல்பாக தூக்க முயல்கிறார்கள்.அவர்களால் நிச்சயமாக என்னைத் தூக்கி விடமுடியாது தான். நான் எழுவது என் முயற்சியால் தான். நான் எழுவதும் குழந்தைகள் இருவரும் இரு கைகளை பிடித்துத்தூக்குவதும்! கவிதை!
நான் எழுந்தவுடன் ப்ரசீத் ஏதோ தமிழில் சொல்வது தெரிகிறது.கை விரலில் அடி பட்டு லேசாக ரத்தம்.
நான் குழந்தைகளைப்பார்த்து “ Children! You go to your class..I’ll come in a few minutes..” குழந்தைகள் ஓடுகிறார்கள்.
ஆஃபிஸில் விரலுக்கு மருந்து போட்டுக்கொண்டு ஒன்றாம் வகுப்புக்கு வருகிறேன்.
பதற்றத்துடன் குழந்தைகள் “Did you fall down, Sir?”
“When you fell down, I lifted you sir! I and Akhil!” ஜெய் ப்ரசீத்
“Thank you! You said something in Tamil then. What did you say?”
ஜெய் ப்ரசித் பூரிப்புடன் சொல்கிறான் “ ‘நடக்கும்போது பாத்து நடக்கனும் சார்’ சொன்னேன்.”
......................................
“We went for IMO sir.. I helped him in all the questions, sir!” அகில்! கண்ணாடி போட்டிருப்பான்.
“very good..” குழந்தைகளுடன் பேசிக்கொண்டே காரிடார் படியேறும்போது வழுக்கி விழுந்து விட்டேன். நான் சிரமப்பட்டு எழுகிறேன். இருபுறமும் வந்து கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் என் இரு கைகளையும் பிடித்து இயல்பாக தூக்க முயல்கிறார்கள்.அவர்களால் நிச்சயமாக என்னைத் தூக்கி விடமுடியாது தான். நான் எழுவது என் முயற்சியால் தான். நான் எழுவதும் குழந்தைகள் இருவரும் இரு கைகளை பிடித்துத்தூக்குவதும்! கவிதை!
நான் எழுந்தவுடன் ப்ரசீத் ஏதோ தமிழில் சொல்வது தெரிகிறது.கை விரலில் அடி பட்டு லேசாக ரத்தம்.
நான் குழந்தைகளைப்பார்த்து “ Children! You go to your class..I’ll come in a few minutes..” குழந்தைகள் ஓடுகிறார்கள்.
ஆஃபிஸில் விரலுக்கு மருந்து போட்டுக்கொண்டு ஒன்றாம் வகுப்புக்கு வருகிறேன்.
பதற்றத்துடன் குழந்தைகள் “Did you fall down, Sir?”
“When you fell down, I lifted you sir! I and Akhil!” ஜெய் ப்ரசீத்
“Thank you! You said something in Tamil then. What did you say?”
ஜெய் ப்ரசித் பூரிப்புடன் சொல்கிறான் “ ‘நடக்கும்போது பாத்து நடக்கனும் சார்’ சொன்னேன்.”
......................................