கே.பாலசந்தரின் ’தண்ணீர் தண்ணீர்’ அருந்ததி.
பெரியகுளம் உஷா.
”மானத்தில மீன் இருக்க
மதுரையில நீ இருக்க
சேலத்தில நான் இருக்க
சேருவது எக்காலம் ”
தண்ணீர் தண்ணீர் படத்தில் இவர் நடித்த பாடல் காட்சி.
https://www.youtube.com/watch?v=NLBrluuwU2Q
மதுரையில நீ இருக்க
சேலத்தில நான் இருக்க
சேருவது எக்காலம் ”
தண்ணீர் தண்ணீர் படத்தில் இவர் நடித்த பாடல் காட்சி.
https://www.youtube.com/watch?v=NLBrluuwU2Q
இப்போது அருந்ததி எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? யாரேனும் தகவல் தெரிந்தால் சொல்ல வேண்டுகிறேன்.
பெரியகுளம் எல்.ஐ.சியில் ஸ்டாப் ஆக இருந்தவர் கோபாலன். அவருடைய மகள் தான் பின்னாளில் அருந்ததி என அறியப்பட்ட உஷா.
இந்த கோபாலன் நாடக நடிகரா?
எல்.ஐ.சி கோபாலன் மகள் அருந்ததி என்று சொல்வது தான் சரி.
.........................
கர்நாடக சங்கீதத்தை பக்தி பாடல்களோடு ஒப்பிட்டு பக்தி பாடல்கள் தான் சிறப்பானவை என்று ஒப்பிடும் மடத்தனம் எவ்வளவு அபத்தமானது.
கர்நாடக சங்கீதம் மலை என்றால் லைட் மியூசிக் பக்தி பாடல்கள் மடு. கர்நாடக சங்கீதம் கற்பூர வாசனை.
கர்நாடக சங்கீதம் ரசிக்க நல்ல பயிற்சி தேவை. பக்தி பாடல்களை சினிமா பாடல் கேட்கிற எவராயிருந்தாலும் ரசிக்க முடியும்.
மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.டி.ராமநாதன் போன்றவர்கள் புரியாமல் இருப்பதற்கும், டி.எம்.எஸ், சீர்காழி, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பக்தி பாடல்கள் பிடித்துப்போவதற்கும் இசை பற்றிய அறிவின்மை தான் காரணம்.
தியாகப்ரும்மம், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரி.
கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், அருணாச்சல கவி போன்ற கர்நாடக சங்கீத சிங்கங்களை பக்தி பாடல்கள் எழுதுகிறவர்களோடு ஒப்பிட்டு பக்தி பாடல்கள் சூப்பர் ஹிட் ஆவதாக புளகாங்கிதம் காணும் புண்ணாக்குகள்.
எல்லாம்தெரிஞ்சஏகாம்பரர்கள்பனங்கொட்டையைகரடிமுட்டைஎன்பார்கள்.
ஒருவர் சைகையால் வலதுகை கட்டை விரலை வாயருகில் வளைத்து வைத்து மற்ற விரல்களை மடக்கி, கண்ணியமாக
“ உங்களுக்கு இந்த பழக்கம் உண்டா?” என்றார்.
“ உங்களுக்கு இந்த பழக்கம் உண்டா?” என்றார்.
பதில் : “ விரல் சூப்பரதா? சின்ன வயசிலேயே விட்டுட்டேன். எங்கம்மா கட்டை விரல்ல வேப்பெண்ண தடவினாங்க..வேப்பெண்ண தடவிக்கிட்டே இருந்தாங்க…வேற வழியே இல்லாம விரல் சூப்பரத நிறுத்திட்டேன்.”
...............................