Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

விந்தைக்கலைஞன் சந்திரபாபு

$
0
0


”ஹிண்டு” ரங்கராஜன் ஒரு நாள் இதைச் சொன்னார்.
1960களில் சந்திரபாபு இவரைத் தேடி வந்திருக்கிறார். இருவரும் ‘வாடா போடா ‘ என்கிற அளவுக்கு நெருக்கம். 

“ ஒரு நூறு ரூபாய் கொடு” என்று ரங்கராஜனிடம் கேட்டிருக்கிறார். அந்த காலத்தில் நூறு ரூபாய் மதிப்பு மிகவும் அதிகம். ஹிண்டு ரங்கராஜன் “ போடா! தரமாட்டேன் “ என்றாராம். 

அதே சமயத்தில் அங்கே சந்திர பாபுவின் பின்னால் ஒருவர் கையில் சின்ன சூட்கேஸ் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்திருக்கிறார். சந்திரபாபு மீண்டும் “ டேய் ஒரு நூறு ரூபாய் குடுடா” என்று வற்புறுத்தியிருக்கிறார்.

 ஹிண்டு ரங்கராஜனுக்கு பணம் தர விருப்பமில்லை.” போடா. “ என்றவர் சந்திரபாபுவின் பின்னால் நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்து யாரென்று விசாரித்திருக்கிறார். 

விஜயா வாஹினி ஸ்டுடியோ அதிபர் நாகிரெட்டியின் புரொடக்சன் மானேஜர் அவர். நாகிரெட்டி அப்போது எடுக்கவிருந்த ஒரு பிரமாண்ட தயாரிப்பு ஒன்றில் சந்திரபாபுவை ’புக்’ செய்ய வந்திருக்கிறார். அட்வான்ஸ் தொகை பத்தாயிரம். படத்திற்கான ’முழு சம்பளத்தொகை’ சந்திரபாபுவுக்குத் திருப்தியில்லை. அதை விட பெரிய தொகை சம்பளமாகத் தந்தால் நடிக்கத் தயார். புரொடக்சன் மேனேஜர் சம்பளம் இவ்வளவு தான் என ரெட்டியார் சொன்ன விஷயத்தை சொல்லி அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்திப் பார்த்தும் பாபு மசியவில்லை. ஹிண்டு ரங்கராஜனைத் தேடி பார்த்தசாரதி கார்டனுக்கு பாபு வந்து விட்டார்.

 நாகிரெட்டியின் புரடக்சன் மேனேஜர் “ நீங்க சொல்லுங்க சார். பாருங்க இவர் பிடிவாதத்தை!“ என்று ஹிண்டு ரங்கராஜனிடம் சொல்கிறார். ரங்கராஜனுக்கு கோபம் வந்து விட்டது. சந்திரபாபுவிடம் “ இடியட்! மரியாதையா அந்த பணத்தை வாங்கிக்கடா. பைத்தியக்காரா. எங்கிட்ட வந்து நூறு ரூபாய் கேட்கிறியடா. பத்தாயிரத்தை வாங்கச் சொல்லி அந்த ஆள் கெஞ்சுறான்!” என்று அதட்டியிருக்கிறார். பாபுவின் அமைதியான பதில்: “That is none of your business. நான் கேட்ட நூறு ரூபாயை கொடு.”  
ரங்கராஜனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சரி. நாம் நூறு ரூபாயைத் தர உறுதியாக மறுத்துவிட்டால் சந்திரபாபு எப்படியும் நாகிரெட்டி தரும் பத்தாயிரத்தை வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று முடிவு செய்து “ தர மாட்டன்டா. போடா.” என்று எரிச்சலோடு சொல்லியிருக்கிறார்.
சந்திரபாபு திரும்பி விறு விறு என்று நடந்து வெளியேறிப் போய் விட்டார்.
ஹிண்டு ரங்கராஜனும் நாகிரெட்டியின் மேனேஜரும் ஸ்தம்பித்துப் போய் விட்டார்கள்.


இந்த நிகழ்வைச் சொல்லி விட்டு ஹிண்டு ரங்கராஜன் உடைந்த குரலில் சொன்னார். “ அவன்….. பாபு.. He is a man of principles! ” சந்திரபாபு இறந்து போய் அப்போது ஏழு வருடங்கள் ஆகியிருந்தது. அந்த வார்த்தையை ரங்கராஜன் சொன்னபோது அது வீரியமிக்கதாய் இருந்தது.
இந்த man of principles என்கிற வார்த்தை இப்போது தேய்ந்து போன cliché.பாபு அன்றைக்கு  ரங்கராஜனிடம் கேட்ட நூறு ரூபாய்க்கு கூட இன்று என்ன மதிப்பு?   

.... 

ஏற்கனவே திருமணமாகியிருந்த ‘ஹிண்டு’ ரங்கராஜனின் வாழ்க்கையில் ’செம்மீன்’ ஷீலா. நடிகை ஷீலாவுக்கும் ரங்கராஜனுக்கும் affairஏற்பட்டு திருமணம் நடந்தது. அந்த திருமணம் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு தான் நடிகர் ரவிச்சந்திரனின் இரண்டாவது மனைவியாக ஷீலா ஆனார். அவரிடமிருந்தும் பிரிந்தார்.
சந்திரபாபுவின் திருமணமும் தோல்வி தான் என்பது தெரிந்தது தான். பாபுவின் அந்த ஒரே மனைவி பெயர் கூட ஷீலா தான்.


…………………………………………………………………..


சந்திரபாபு

பெங்களுர்ராஜா பாலஸில்ஒருபாடல்சூட்டிங் .
 சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும். அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்.”
இந்தரெண்டுநாள்ஷூட்டிங்வீண்தான் . இதெல்லாம்Development Hell. இப்படிபலமாற்றங்கள்நடக்கும் . ஏனென்றால்அந்தபாடல்பின்னர்வீஜிபிகோல்டன்பீச்சில்வேறுநடிகர்  நடிகைநடிக்கபடமாக்கப்பட்டுதிரையில்வந்தது.  நான்உதவிஇயக்குனர் .
இந்தபாட்டுரெகார்டிங்ஆனபோதுநடந்தவிஷயம் இன்னும்சுவாரசியம் .

பாட்டுஷூட்டிங்போதுடான்ஸ்மாஸ்டர்சுந்தரம்சொன்னவிஷயம்எல்லோரையும்ஆச்சரியபடவைத்தது . சுந்தரம்மாஸ்டர்தான்பின்னால்பிரபலமாகபோகும்பிரபுதேவாவின்அப்பா.
"சந்திரபாபுவுக்குநடனம்ஆடதெரியாது . நடனம்பற்றிஎந்தஅடிப்படைஅறிவும்கிடையாது ." --
"சும்மாஎல்லாம்பாவ்லாதான்செஞ்சான் . ஆனாஜனங்கஅதைஅந்தகாலத்தில்டான்ஸ்னு  நம்பினாங்க .  பெரியடான்சர்சந்திரபாபுன்னுஇன்னைக்கும்எல்லாரும்நினைக்கிறாங்க .  அவன்சும்மாடான்ஸ்ஆடுறமாதிரிபாவ்லாதான்பண்ணான் ".
இதில்அபத்தம்என்னவென்றால்சுந்தரம்மாஸ்டர்நடிகர்நடிகைகளுக்குடான்ஸ்ஆடபயிற்சி தரும்போதுஅவர் ஆடுவதைகாணசகிக்காது . ஒவ்வொருவரிக்கும்அவர்முதலில்ஆடிக்காட்டுவார் . கொஞ்சம்கூடடான்சில்GRACE இருக்காது . மூவ்மென்ட்ஆரம்பிக்கும்போது செயற்கையாகவினோதமாகஇருக்கும் .
'இவன்ஆடிபார்க்கவா' . டைரக்டர்அவர் காதில்விழாதவாறுகமெண்ட்அடிப்பார் . எல்லோரும் கண்ணை மூடிகொள்வார்கள்.

சந்திரபாபுக்குஎன்னதான்தெரியும். தமிழேஎழுதபடிக்கதெரியாதவர். ஆனால் AMERICAN ACCENT ல்இங்கிலீஷ்பேசுவார். நடிப்புபாட்டுடான்ஸ்இசை,இயக்கம் .. ஆல்ரௌண்டர் ..

கேலிகூத்துஇப்பவும்ஒருஆல்ரௌண்டர் ..டண்டனக்கா ... டண்டனக்காகுரங்குபயல்எல்லாம்க்கொடிகட்டி'தட்டிப்பாத்தேன்கொட்டாங்குச்சி' - அபத்தம் . வீராச்சாமி !

சந்திரபாபுஜெயிக்கமுடியவில்லை.

சந்திரபாபுஆடியதுடான்ஸ்இல்லைஎன்றால்அதுபோலஆடாமல்சுந்தரம்மாஸ்டர்  ஆடுவதாடான்ஸ் ? பிரபுதேவாகூடசந்திரபாபுவைகாப்பியடிக்கவில்லையா ? பாபுவைஇமிட்டேட்செய்துதானேஆடினார் .

ஒருநாள்வீட்டில்டிவியில்ஒருசேனல்லில்'கண்ணேபாப்பா ' ஓடிகொண்டிருந்தது . ஒருநிமிஷம்பார்த்தேன் .சந்திரபாபுநடிக்கும்போதுகேசுவலாஒருசின்னஹம்மிங்செய்கிறார் .
ஹிந்துஸ்தானி ! ஹிந்துஸ்தானிக்ளாசிகல் !
பண்டிட்ஜஸ்ராஜ்ஜோக்ராகஆலாபனைஆரம்பிப்பதுபோலிருந்தது .

மெஹ்தி ஹசன் கஜல்பாடல்  “ZINDAGI MERE SAFI PYAARU KIYAA KARUTHEGU..”என்னஒருசௌஜென்யம் . என்னஒருஅற்புதகுரல் .
மெஹ்தி ஹசனின் இந்தபாடலைகேட்கும்போது  ஏனோஎப்போதும்சந்திரபாபுஞாபகம்வரும் .
சரியானசூழல்மட்டும்இருந்திருந்தால்பாபுபெரியகஜல்பாடகர்ஆகிஇருப்பார் .

அசோகமித்திரன்என்னிடம்ஒருமுறைசொன்னார். "சந்திரபாபுவுக்குஆன்மீகதேடல்இருந்தது. அதற்கானவழிகாட்ட, அவரைநெறிப்படுத்தசரியானகுருநாதர்கிடைக்கவில்லை"


...................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html

 

Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>