"எனக்குக் கடவுள் பத்தித் தெரியாது.
அதனாலே நம்பிக்கையுமில்லே.
ஆனா இந்தக் கோவில் என்ன பாவம் செய்தது?
நம்ம முன்னோரோட நம்பிக்கை மட்டுந்தான்
அது காட்டற விஷயம்.
அதை ஏன் உதாசீனம் செய்யனும்?
அப்படிச் செய்வது வால்யூவா?
சொல்லப் போனா
பிளவு படாம தடுக்கிற ஒரு அம்சம்
இந்தக் கோவில் எல்லாத்திலும் இருக்கு.
சில காரியங்கள் பிளவை நீக்குமென்றால்,
அது மகோன்னதமானது தான்.
கடவுள் இதற்கு மாற்றானால்,
அந்த நம்பிக்கை இருந்து விட்டுப் போகட்டுமே. "
- மா. அரங்கநாதன் 'திரிசூலம்'சிறுகதையில்
அரங்கநாதன் கதைகளின் தனித்துவம் பற்றி நினைத்துப் பார்க்கும் போது,
வாசகனுக்கு அவர் காட்டும் கதையின்
பூடகத் தன்மை.
இந்த படைப்புக் கலைஞன் எதையோ மறைக்கிறாராரோ என்ற தவிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தும் கதை கூறல் பாணி விசேஷத்துவமானது.
இத்தனைக்கும் எழுது முறை
அற்புதமான எளிமை கூடியது.
வாசிப்பவரை மிக Comfortable ஆக Driver's seat ல் உட்கார வைக்கும் நேர்த்தியான form அரங்கநாதனின் craftsmanship.
இலக்கிய சுவை, இலக்கிய சுகமாக விரியும் வினோத விசித்திரம்.
நான் முன்னரே சொல்லியிருக்கிறேன்.
முத்துக்கறுப்பன் பிரம்மாஸ்திரம்.
பிரம்மாஸ்திரம் அபூர்வமாக பயன்படுத்த வேண்டியது என்பது தான் பொதுப் புத்தியில் பதிந்த விஷயம்.
அதெல்லாம் அப்படி இல்லை என்பது
அரங்கநாதன் படைத்த சாகச புனைவுகள் சொல்லும் சாதனை செய்தி.