சச்சிக்கு எழுதிய tribute ல்
அவருடைய வீட்டில் கலைஞர் குடியிருந்தார் என்பதை குறிப்பிட்டிருந்தேன்.
உதய சூரியன் சின்னம் பற்றி சச்சி சொன்னதையும் பதிந்திருந்தேன்.
நான் இதை 2016லேயே என் Facebook, Blog இரண்டிலும் எழுதியிருக்கிறேன்.
சச்சியை அவ்வமயம் கூத்துப்பட்டறைக்கு
லோர்க்கா நாடகம் 'Play without a title'மொழிபெயர்ப்பு செய்து தரச்சொல்லி சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது நான் எழுதியிருந்த அந்த பதிவின் மூன்று பிரிண்ட் - அவுட் காப்பி அவருக்கு கொடுத்தேன்.
அதை சச்சி உடனடியாக படிக்கவும் செய்தார். அதில் நான் எழுதியுள்ளதை மறுக்கவேயில்லை.
இந்த விஷயத்தை சச்சி தான் முத்துசாமி உள்ளிட்ட அவருடைய நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் சொன்னவர்.
உதய சூரியன் சின்னம் பற்றி
திராவிட முன்னேற்றக் கழகம் வேறு வரலாற்றுக்குறிப்பு வைத்திருக்கலாம்.
நானே அதனால் தான்
'Don’t be too surprised by what you hear.
One can’t be sure about anything these days.
Just giving it to you as I hear it.'
என்று சொல்லியிருக்கிறேன்.
ஆனால் சச்சியின் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் கருணாநிதி குடியிருந்ததை கேள்விக்குள்ளாக்க முடியாது. அந்த மாடி போர்ஷன் கட்சி சார்பாக பிடிக்கப்பட்டதாய் கூட இருந்திருக்கலாம்.
இன்று இந்து தமிழ் திசையில்
"திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் முதலில் வாடகைக்கு இருந்த இல்லம் இவருடையது "
என்று எழுதப்பட்டுள்ளது.
ஒரு வேளை முரசொலி மாறன் வாடகைக்குப் பிடித்த வீட்டில் அவருடைய மாமா வந்து குடியிருந்தாரா?
கலைஞர் வசித்தார் என்று தானே எல்லோரிடமும் சொன்னார்.
என் பதிவில் தகவல் பிழை இருப்பதை படித்தவுடன் அன்று
தெளிவுபடுத்தியிருப்பார் தானே.
மாமா வசித்த வாடகை வீட்டில் மருமகன் தங்கியிருந்திருக்கலாம். ஏன் மு. க. முத்து கூட அப்பாவுடன் அங்கு இருந்திருக்கலாம். அதுவா முக்கியம்?
அது கலைஞர் வாழ்ந்த வீடு.
இந்து தமிழ் திசை
சச்சி வீட்டு மாடியில்
கலைஞர் வசித்தார் என்பதை
முழுக்க மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
https://m.facebook.com/story.php?story_fbid=2849832728563508&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=2851095851770529&id=100006104256328