Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1854 articles
Browse latest View live

நுட்ப தொடர்பு

$
0
0

சரோஜா தேவி பல படங்களில் ஜெமினி கணேசனுடன் ஜோடியாக நடித்தவர். கல்யாண பரிசு, வாழ வைத்த தெய்வம், ஆடிப்பெருக்கு, பனித்திரை, வாழ்க்கை வாழ்வதற்கே, பணமா பாசமா, ஐந்து லட்சம், தங்கமலர், தாமரை நெஞ்சம், குலவிளக்கு, மாலதி என எத்தனையோ படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

சரோஜா தேவி எப்போதும் ஜெமினி கணேசனை அண்ணா என்று தான் அழைத்திருந்திருக்கிறார்.
கமல்ஹாசன் முதல் முதலாக ஸ்ரீதேவியை 15, 16 வயது பெண்ணாக சந்தித்ததாக சொல்கிறார். தினத்தந்தி செய்தி. மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவிக்கு 15,16 வயது.

27 படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. நிச்சயம் அவரே சொல்வது போல ஆயுளில் குறிப்பிட்ட ஒரு பகுதி.
ஆனந்த விகடனில் கமல் “ஸ்ரீதேவி என் தங்கச்சி” என்று சொல்கிறார்.’ அண்ணன் தங்கை போல தான் நானும் ஸ்ரீதேவியும்.’
“உங்களை அப்படி ஜோடியா கொண்டாடிட்டிருக்கிறப்ப இதெல்லாம் வெளியில போய்ச் சொல்லாதீங்க” என்பார்களாம்.
இது உண்மையென்றால் அபூர்வமான விஷயம்.
விரித்துப் பேச வேண்டியதில்லை.
............................................

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு மடாதிபதியும் இளைய மடாதிபதியும் காவிரிக்கரையை ஒட்டிய ஒரு ஊரில் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பூஜை, வியாக்யானம் என்று திவ்விய நிகழ்வில் உள்ளூர் ஆண்கள், பெண்கள் கலந்து பக்தியில் ஊறி கரைந்திருக்கிறார்கள்.
ஒரு பெண் இளைய மடாதிபதியிடம் வந்து “ நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறாள்.
மூத்த சுவாமி இளைய மடாதிபதியை பார்த்து 
” காவிரி நீரில் இறங்கி நில்” என்று தண்டனையாக சொன்னாராம்.
மணிக்கணக்கில் இளைய மடாதிபதி இடுப்பு நனைய நீரில் நின்றாராம்.
ஊரை விட்டு கிளம்பும் போது தான் நீரை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டார் இளைஞனாய் இருந்த அந்த இளைய மடாதிபதி.
மூத்த சுவாமிகள் சொன்னாராம் “ உன்னிடமிருந்து காதல் கசிய, விரக பார்வை, சமிக்ஞை வராமல் நிச்சயம் அந்தப் பெண் உன்னிடம் அப்படி கேட்டிருக்கவே மாட்டாள்.”
.....................................


Truce

$
0
0

There can be no truce between Humanity and Tyranny.
How can be a truce between children and monsters.

அமெரிக்கா சிரியாவை சீரழித்து விட்டது. Pray for Syria என கலங்குவது எவ்வளவு அபத்தம்.

Prayer என்றவுடன் எனக்கு இங்கே இந்தியாவுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வந்த போது அது பற்றி ஓஷோ சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது.
"Jimmy Carter came to India and he asked, first thing in India, three hours for prayer. Think of GOD also a little bit. Listening to Jimmy Carter for three hours. Poor GOD. What will you be saying for three hours? You will bore HIM to death!"


முஸ்லிம் 'சுன்னி''சியா'பிரிவு கலவரமாக காட்டி அமெரிக்கா செய்யும் நாச வேலை.
When one person suffers from delusion it is called insanity. When many people suffer from a delusion it is called religion.
- Robert M.Pirsig

சிரியாவில் போர் நிறுத்தம் என்ற செய்திக்கு இங்கே pray for Syria என்று சொன்னது தான் காரணம் என புளகாங்கிதப்படுவது கிணற்றுத் தவளைகள்.
ரஷ்யாவும் சம்மதிக்கிறதாம்.
போர் நிறுத்தம் என்பதே அமெரிக்க செய்தி தானே!
மழை விட்டு தூவானம் என்று இலங்கை யுத்தத்தின் போது கூட சால்ஜாப்பு சத்தம் இங்கேயே கேட்கலையா?
"அமெரிக்க ஜனாதிபதி எப்போதுமே ’உலகத்தின் நம்பர் ஒன் பேட்டை ரௌடி’ தான்.
டெமாக்ரடிக் பாட்டியா இருந்தா என்ன? ரிபப்ளிக் தாத்தாவா இருந்தா என்ன? எப்பவுமே அமெரிக்க அதிபருக்கு ஒரே முகம் தானே! பழைய கருப்பன் கருப்பனே!
உலக அரசியலுக்கு, வாழ்வுக்கு என்ன பெரிய மாற்றம், மறுமலர்ச்சி நிகழ்ந்து விடப்போகிறது."அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நான் சொன்னேன்.
.........................




மெட்டடர் வேன் ஓனர்

$
0
0

சென்ட்ரல் கவர்ன்மெண்ட் (postal dept) வேலையை “ I resign my job as the nature of work does’nt suit my temporament.” என்று ராஜினாமா செய்து விட்டு சினிமாவுக்கு வந்து அசிஸ்டெண்ட் டைரக்டராக “அழைத்தால் வருவேன்” படம் utter flap ஆனவுடன், மதுரையில் ஒரு மெட்டடர் வேன் ஒன்று வாங்கி சாமான்கள் ஏற்றி இறக்க வாடகைக்கு விட்டிருந்தேன்.
மதுரை கீழ மாரட் வீதியில் தான் வேன் நிறுத்தி ஏதாவது ட்ரிப் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். டிரிப் கொடுக்கும் பாக்கியத்திற்கு கமிஷன் கொடுக்க வேண்டும்.
டிரைவர்களால் பட்ட சிரமம் மிகவுண்டு. டிரைவர்கள் இல்லாவிடிலோ வேன் ஓட்டும் காரியம் நடப்பதில்லை.
ஒரு இரண்டு வருடத்தில் ஐம்பது டிரைவர்கள் மாறியிருப்பார்கள்.
தனியாக வேனை டிரைவர்கள் ஓட்டினால் வேன் வருமானத்தில் பெரும்பகுதியை திருடி விடுவார்கள். கிலோமீட்டர் பார்த்து வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்டைய போட்டுருவாங்கெ..
அதனால் நான் டிரைவரோடு வேனில் ஏறி விடுவேன். ஓனர் வேனில் வருவதை எந்த டிரைவரும் ரசிக்க மாட்டான்.
ஒரு டிரைவர் எரிச்சலாகி கொடைக்கானல் ட்ரிப்பில் “ நான் நெனச்சன்னா மலையில இருந்து வண்டிய உருட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்”னு சொன்னதுண்டு.
வீட்டில் வந்து வண்டியை நிறுத்தியதும் அன்னார் என்னால் அடி வெளுக்கப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அப்போதெல்லாம் டிரைவருக்கு வாரம் இருநூறு ரூபாய் சம்பளம். ஓவர் டைம் சம்பளமும் உண்டு.
ஒரு டிரைவரிடம் “ நான் மாதம் உனக்கு ஆயிரத்து ஐநாறு ரூபாய் சம்பளம் தருகிறேன். ஆனால் ஒன்று என் பணத்த நீ திங்கனும்னு நெனச்சா நீ வெளங்கவெ மாட்டே” என்றேன்.
அவன் என்னிடம் வண்டி சாவியை உடனே திருப்பிக் கொடுத்து விட்டு சொன்னான்: “ சார் நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.. நான் உங்க கிட்ட வேலை செய்றது நல்லதுல்ல. ஆனா ஒன்னு சொல்லுறேன். கேட்டுக்கங்க. நாங்க திருடறதுக்கு பதிலா டிரைவர் வேலைக்கு வர்றொம். எந்த டிரைவரும் வண்டி ஓனருக்கு தெரியாம திருடத்தான் செய்வான்.”
நான் வேனில் கூடவே வருவது பற்றி கீழ மாரட் வீதியில் ஒரு ஜோக் உண்டு. ” இந்த மெட்டடார் வேன்ல ஓனரே தான் கிளீனரா வர்றார்!”
இதை ’இப்படி பேச்சு சார்’ என்று இன்னொரு வேனின் டிரைவரே என்னிடம் சொன்னான்.
ஒரு முறை காலை ஆறு மணிக்கு டிரைவருடன் வேனில் ஏறினேன். மாலை ஆறு மணி துவங்கி துவரங்குறிச்சி ஒரு ட்ரிப், வத்ல குண்டு ஒரு ட்ரிப் முடிந்து ஒத்தக்கடைக்கு ஒரு ட்ரிப் முடித்து மதுரை வந்தவுடன் அந்த டிரைவர் கீழ மாரட் வீதியில் “ சார் என் அக்கா மாப்பிள்ளை கனரா பேங்க் மானேஜர். அவர் ஒட்டன் சத்திரம் ட்ரான்ஸ்பர் ஆகிறார். அதனால் அவர் வீட்டு ஜாமான்களுக்கு வேன் தேவைப்படுகிறது” என்று என்னிடம் வாடகை இவ்வளவு என ஒரு தொகையை சொன்னான்.
அப்போது இரவு பத்து மணி. சரி இந்த ட்ரிப்பையும் முடிப்போம் என்று சொல்லி விட்டு பேச்சியம்மன் படித்துறையில் இருந்த வீட்டுக்கு போனோம்.
சாமான்களை ஏற்றினார்கள்.
டிரைவரின் அக்கா கனரா பேங்க் மானேஜருக்கு முதல் மனைவி. அவர் பிள்ளையில்லாமல் இறந்து விட்டார். அதன் பின் இரண்டாவது திருமணம் செய்து இரண்டு குழந்தைகள்.
டிரைவர் சீட் அருகில் அவரது மனைவியும் குழந்தைகளையும் உட்கார வைத்து விட்டு நானும் மேனேஜரும் சாமான்கள் வைக்கப்பட்ட பகுதியில் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம். வேன் ஒட்டன்சத்திரம் கிளம்பியது. அப்போது இரவு ஒரு மணி.
பேங்க் மேனேஜர் என்னுடன் பேசிக்கொண்டே வந்தார். ஒட்டன்சத்திரம் வந்து பொருட்களை வீட்டில் இறக்கி முடிப்பதற்குள் பொலபொலவென்று விடிந்து விட்டது.
விடைபெறும் போது கனரா பேங்க் மேனேஜர் என்னிடம் சொன்ன விஷயம் அனேகமாக ஒரு confession. “சார் இருபத்து நாலு மணி நேரமா நீங்க வேனில் டிரைவர் கூடவே இருக்கிறீங்க.. இனிமே நீங்க மதுரைக்கு ஒங்க வீட்டுக்கு போகனும். ஒரு விசயம் தெரியுமா? என் மாப்பிள்ள தான் இந்த டிரைவர். இந்த டிரிப்லயே உங்கள மோசம் செஞ்சிருக்கான். என்னிடம் அவன் வாங்கிற தொகையில பாதி தான் உங்க கிட்ட வாடகையா சொல்லியிருக்கான். உங்கள நெனச்சா சங்கடமா இருக்கு..என்னால சொல்லாம இருக்க முடியல..”
இடுக்கண் வருங்கால் சிரிக்கச்சொன்னான் இனிமேல் வருவது நலமென்று.


.........................................................












டைம் மிஷின்ல ஏறுங்க...

$
0
0

1965
விக்ரம சிங்க புரம்
அகஸ்தியர் பட்டி
கிருஷ்ண பிள்ளை வீடு.
வீட்டின் முன் பகுதியிலேயே திருக்கை வால், அரிவாள், பட்டா கத்தியெல்லாம் தொங்கும்.
அவர் வீட்டின் வாசலில் ஒரு மூன்று வாட்ட சாட்டமான ஆட்கள் வந்து நிற்கிறார்கள்.
கிருஷ்ண பிள்ளை வெராண்டாவிற்கு வந்து திருக்கை வால் சவுக்கை எடுத்து ஒரு உதறு உதறி தொங்க விடுகிறார்.
வந்த ஆட்களில் ஒருவன் செருமுகிறான்.
கிருஷ்ண பிள்ளை நீளமான வீச்சரிவாளை எடுத்து விளிம்பை ஒரு உள்ளங்கையால் தடவி விட்டு அதை தொங்க விடுகிறார்.
இன்னொருவன் “ ஏலே என்ன மிரட்டுதியா?”
கிருஷ்ண பிள்ளை திரும்பியே பார்க்காமல் கத்தியை எடுத்து வீட்டுக்குள்ளேயே ஒரு முறை வீசுகிறார்.
மூன்றாமவன் “திரும்பியே பாக்காம என்னல எசளி பண்ணுத.”
இப்போது கிருஷ்ண பிள்ளை திரும்பி வீட்டின் முன் நடுத்தெருவில் நிற்பவர்களை பார்க்கிறார்.
மூவருக்கும் பெரிய மீசை. கெடா மீச. சொல்லி வைத்தாற் போல மூவரும் மீசையை தடவுகிறார்கள்.
மீசையை தடவிக்கொண்டே சிவந்த கண்களுடன் கிருஷ்ண பிள்ளையை முறைக்கிறார்கள்.
கிருஷ்ண பிள்ளை மீசை வைத்துக்கொள்பவரல்ல. ஆள் பார்க்க செவப்பா ஹாலிவுட் ஆக்டர் மாதிரியிருப்பார்.
புத்ர பாக்யம் கிடையாது.
வீட்டுக்குள்ளிருந்து அவருடைய அம்மை “ எல... வேண்டாம்ல.. உள்ள வந்துருல...”
கிருஷ்ண பிள்ளையின் மனைவி “யய்யா...பயமாயிருக்குய்யா...உள்ள வாங்கய்யா... கதவ பூட்டுங்க...”
“ செத்த மூதிகளா.. வாய மூடிக்கிட்டு கிடங்க.”
கிருஷ்ண பிள்ளை உள்ள பாத்து சத்தம் விட்டு, திரும்பி தெருவை பார்க்கிறார்.
நடுத்தெருவில் மீசைய தடவிக்கொண்டு அந்த மூவரும்.
கிருஷ்ண பிள்ளை “ எலே...ஏம்ல மயித்த தடவுறிங்க.. மயிரு தானல்ல அது.. எலெ... என் சாமான பாக்கிறியா... எவ்வளவு மசுறு என் சாமான்ல இருக்கு பாக்கிறியா” என்று வேட்டிய விலக்கி காமிக்கிறாரு.
” காடா இருக்குது லே...இந்த மசுத்த வந்து தடவுங்களேம்லே....சிறுக்கி மகன்களா...”
ஒரு கையில் திருக்கை வாலையும் மறு கையில் அரிவாளையும் எடுத்துக்கொண்டு தெருவில் வேகமாக இறங்குகிறார்.
மூன்று கெடாமீசக்காரனுங்க மீசைய தடவுறத நிறுத்தி விட்டு ”பண்ணயார் ஒன்ன கூட்டி வரச்சொன்னாரு... எங்களுக்கென்ன வேர்க்குதா..”ன்னு சொல்லிக்கொண்டே விறுன்னு வேகமா நடந்து தெருவை விட்டு நீங்குகிறார்கள்.
................................

1985
விக்ரம சிங்கபுரம் தாய் சினிஸ் ரோடு.
அதிகாலை ஐந்து மணி. ஒரு பெட்டிக்கடை.
ஒரு பால்காரர் சைக்கிளில் பால் கேனோடு நிற்கிறார்.
பெட்டிக்கடைக்காரர் கடையை திறந்து ஒழுங்கு வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த அதிகாலையில் கடை முன் அந்த விடிகாலையில் ஏற்கனவே ஒரு குடிகாரன் நின்று கொண்டிருக்கிறான்.
சிகரெட் வாங்கி அதைப் பற்ற வைக்கும் பால்காரரை பார்த்து “ ஏல..என்னல.. எம் முன்னாடி சிகரட்ட பத்த வக்க...”
பால்காரர் பதிலே சொல்லாமல் சிகரெட்டை இழுத்து ஊதுகிறார்.
குடிகாரன் “ என்னல பொகய ஊதுற....என்னல.. மொறக்க..”
கடைக்காரரை பார்த்து “ மொறக்கான்...”
கடைக்காரரருக்கு தர்ம சங்கடம். விடிய முன்ன ஒர்த்தன் ஊத்திட்டு வந்து சலம்புறானே..
பால்காரரை பார்த்து குடிகாரன் “ எல... ஈனப்புண்டழுத... என்னல முழிக்க...”
கடைக்காரரை திரும்பி பார்த்து “ முழிக்கான்”
மீண்டும் பால்காரரிடம் திரும்பி “ ஏல...குடிச்சிட்டு ஒளருதாம்னு பாக்கியோல்ல...? நாரப்புண்டழுத...ஒன் முழிய நோண்டிருவம்ல...என்னல முழிக்க... முழிக்கான்...ஏல..என்னல..குடிச்சிட்டு ஒளருதாம்னு பாக்கியோ...”
பால்காரர் இப்ப சிகரெட்ட கீழ போட்டுட்டு பெட்டிக்கடையில் இருந்து ஒரு சோடா பாட்டில எடுத்து தரையில் ஓங்கியடிக்கிறார்.
குடிகாரன் உடனே உயிரை வெறுத்து ஓட ஆரம்பிக்கிறான். ஓட ஆரம்பிக்கும் போதிருந்து
“ ஐய்யய்யோ... என்ன கொல்லப்பாக்குதானெ... காப்பாத்துங்க... காப்பாத்துங்க...காப்பாத்துங்க...என்ன காப்பாத்துங்க..” என்று நிறுத்தாமல் கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே அந்த நீளமான ரோட்டில் ஓடிக்கொண்டே போகிறான்.
........................................

பாப்ஜி

$
0
0

நடிகை புஷ்பவல்லியின் மூத்த மகன் பாப்ஜியை ஹிந்தி நடிகை ரேகாவின் சகோதரர் என்று சொன்னால் இன்று புரியும்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, குட்டி பத்மினி இருவரின் மூத்த சகோதரி விஜயலட்சுமி அவர்களின் கணவர்.
அழகானவர் பாப்ஜி என்று சொல்லத் தேவையில்லை. புஷ்பவல்லி தமிழ் திரை கண்ட அழகான நடிகைகளில் ஒருவர்.
பாப்ஜியின் அப்பா யார்? ஜெமினி ஸ்டுடியோவில் நட்சத்திரமாக ஜொலித்தவர் புஷ்பவல்லி. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தான் பாப்ஜியின் அப்பா என்ற சந்தேகம் கூட இன்றும் உண்டு.
ஒரு இயக்குனரின் மனைவியாக புஷ்பவல்லி இருந்திருக்கிறார். அவர் யார் என்று தெரியவில்லை.
பாப்ஜியின் பாஸ்போர்ட்டில் அவருடைய தந்தை பெயராக ஜெமினி கணேசன் பெயர் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஜெமினி கணேசன் முதல் மனைவி பெயர் கூட பாப்ஜி தானே!)
பாப்ஜியின் இளைய சகோதரிகள் ரேகா, ராதா என்ற இரு குழந்தைகள் ஜெமினி கணேசனுடன் வாழ்ந்த போது புஷ்பவல்லிக்கு பிறந்தவர்கள்.
ஜெமினி கணேசனை விட்டு பிரிந்த பின் புஷ்பவல்லிக்கு ஒரு மியூசிக் டைரக்டருடன் வாழும்படியான நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மியூசிக் டைரக்டருக்கும் புஷ்பவல்லிக்கும் தனலட்சுமி, ஷேசு என்று இரண்டு புத்ரங்கள்.
அந்த தெலுங்கு மியூசிக் டைரக்டர் பெயர் பிரகாஷ் ராவ் என்று கேள்வி.
இயக்குனர் வேதாந்தம் ராகவையாவின் மனைவி நடிகை சூரிய பிரபா தான் புஷ்பவல்லியின் உடன் பிறந்த தங்கை.
சூரிய பிரபாவின் மகள் சுபா தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்தவர் தான். பட்டிக்காடா பட்டணமாவில் சிவாஜி “ என்னடி ராக்கம்மா” என்று இவரை பார்த்து தான் பாடுவார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் கண்ணாடி போட்டு மூத்த சகோதரியாக சுபா நடித்திருக்கிறார்.
பாப்ஜி தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான்.
வியட்நாம் வீடு படத்தில் சைக்கிளில் வந்து சிவாஜி கணேசனின் மகளை காதலிப்பது பாப்ஜி தான்.
குல விளக்கு படத்தில் சரோஜாதேவியின் தம்பியாக மெடிக்கல் கல்லூரி மாணவராக நடித்திருப்பவர் பாப்ஜி.
பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜெயலலிதாவுக்கு Fix செய்யப்பட்ட மாப்பிள்ளையாக நடித்திருக்கிறார்.
கவனிக்கும்படியான நல்ல கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைக்கவில்லை.
பாப்ஜி ஒரு Multi-dimentional person.
பாப்ஜி கதாநாயகனாகவும் குட்டி பத்மினி கதாநாயகியாகவும் நடிக்க ஒரு படம் 1970களின் முன் பகுதியில் தயாரானதுண்டு.

“அவளில்லாமல் நானில்லை”
படத்தின் தயாரிப்பாளர் பாப்ஜியின் மாமனார் சக்ரவர்த்தி.
’அவளில்லாமல் நானில்லை’ படத்திற்கு கதை வசனம், பாடல்கள், இசை, இயக்கம் எல்லாமே பாப்ஜி தான்.
திரைப்படம் எடுப்பதே ஒரு Herculian Task. இந்த பெருமுயற்சியில் சக்ரவர்த்தியாலும் பாப்ஜியாலும் வெற்றி பெறவே முடியவில்லை.
விஜயலட்சுமியின் சொந்த சித்தி முன் முன். இவருடைய மகள் உஷாவின் கணவர்
டி.ராஜேந்தர் 1980களில் சாதிக்க முடிந்ததை ஒரு பத்து வருடம் முன் விஜயலட்சுமியின் கணவரால் சாதிக்க முடியவில்லை.

பாப்ஜியின் மாமியார் ரூத் என்ற ராதாபாய் அவர்கள் சரோஜா தேவி, சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா ஆகியோரின் ஹேர் ட்ரஸ்ஸர் ஆக இருந்தவர். 
பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
ரேகா ’சாவன் பாதன்’ இந்தி படத்தின் மூலம் அகில இந்திய நடிகையாக உயர்ந்த பின் பாப்ஜியை உயர்த்த முயற்சித்திருந்தால் ஒருவேளை இவர் தன் திரை முயற்சிகளில் ஜெயித்திருக்கலாம். ஆனால் அப்படி தெரியவில்லை.
எத்துனை பின்புலம் இருந்தாலும், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் திரையுலகில் ஏன் ஜொலிக்க முடியவில்லை என்கிற புதிருக்கு விடையில்லை.
………………………………………………..
பாப்ஜி உணவு உண்ணும் போதே அவருக்கு உயிர் பிரிந்திருக்கிறது. விஜயலட்சுமி இன்று பெந்தகோஸ்ட் கிறிஸ்தவராக முதுமையில் வாழ்கிறார்.
பாப்ஜியின் புகைப்படம் கிடைக்கவில்லை.
இந்த Write up எழுத வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் உதவியும் கிடைத்தது. அவருக்கு என் நன்றி

……………………………………




குங்ரகு - குங்ரகு டிட்கு

$
0
0

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை சேர்த்தாச்சு.
’இ’ லட்சிய திமுக எப்போது 'மு.க.'வை பேனரில் சேர்க்கும்?
சித்ரகுப்தன் தான் கருணாநிதியின் ஏட்டை தொலைத்து விட்டானே. டி.ஆர். கட்சி பேனரில் இணையும் வாய்ப்பு மண்டைய போட்டால் தான் சாத்தியம்.

“என் மகன் சிலம்பரசன் கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடியவர்”
– டி.ஆர்.
பிரச்சாரத்திற்கு சிலம்பரசனை தயார்ப்படுத்துகிறார்.
எம்.ஜி.ஆர் முதல்வராய் இருந்த போது தேர்தல் காலங்களில் டி.ராஜேந்தர் தன் மகன் குட்டி சிம்புவையும் பிரச்சாரத்திற்கு கூடவே கூட்டிக்கொண்டு போவார். மிகக் கடுமையாக எம்.ஜி.ஆரை சாடுவார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் மந்திரிகளை விட இரண்டு எம்.எல்.ஏக்கள் அப்போதெல்லாம் ரொம்ப பிரபலமாயிருந்தார்கள். Infamous and Notarious M.L.As. ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரைக்கனி. இன்னொருவர் நெகமம் கந்தசாமி.
இந்த நெகமம் கந்தசாமி அப்போது “ டேய். குரங்கு தான்டா குட்டிய தூக்கிக்கிட்டே திரியும்”னு டி.ராஜேந்தரை கேட்டார்.


……………………………………………

ரொம்ப செல்லம்

$
0
0

ரொம்ப நாள் காணாத படி பல நண்பர்கள் வாழ்விலிருந்து மறைந்து போவார்கள். திடீரென்று அவர்கள் தோன்றுவதுண்டு.
திருச்சியில் அப்படி ஒரு நாள் ஒரு நண்பனிடம் இருந்து போன் வந்தது. “கேபி! நானும் என் மனைவியும் வருகிறோம்.”
“Believe me. இனி நம்ப காலம் தான்.”
இவன் என்ன எனக்கு வழி காட்டப்போகிறான். ஒளிமயமான எதிர்காலத்திற்கான வழி.
நல்ல இளமையில் எப்போதும் நான் தான் இவனுக்கு செலவழித்திருக்கிறேன். He was a taker and sponger I met in my life.
மதுரையில் இருக்கும் போதும் சரி, சென்னையில் இருந்த போதும் சரி, என்னோடு இருக்கும்போது பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் துவங்கி சாப்பிடுவது எல்லாம் என் செலவு தான்.

என்னை விளம்பர மாடல் ஆக்கப்போகிறானா? நிறைய விளம்பரப்படங்கள் நூற்றுக்கணக்கில் தயாரித்திருக்கிறேன் என்று போனில் சொல்கிறானே! ஆஹா! சினிமாவில் நடிகனாக முடியவில்லை என்றாலும் நான் விளம்பர மாடல் ஆகப்போகிறேன் போலுமா!

“என் மனைவியோட தம்பி மதுரையில் ஏற்பாடுகளை கவனிக்கிறான்.”
ஓ! மதுரையில் ஏதோ விளம்பரப் பட ஷூட்டிங் வேலைகள் நடக்கிறது போலுமோ?
“இது வரைக்கும் நடந்தத பத்தி ஒர்ரி பண்ணாத. இனி நம்ம காலம் ஆரம்பிக்குது!”
தனக்கு நல்ல காலம் என்று சொல்லாமல் நமக்கு என்று என்னையும் கூட சேத்துக்கிறானே! பரந்த மனசாயிருக்கும் போலும்.
நான் இப்படி யாராவது வாய்ப்பந்தல் போடும் போது சிலிர்க்கவே மாட்டேன்.

இது என்ன புஸ்வானமோ தெரியலையே?

சரி, ரொம்ப நாள் கழித்து ஒரு நண்பன் பார்க்க வருகிறான். அந்த அளவிற்கு மகிழ்ச்சி.
அவன் மீண்டும் போன் பண்ணி “கெக்ககெக்கக்கெக்கக்கே” என்று சிரித்தான்.
எனக்கு சட்டென்று ஒன்று தோன்றியது.
Amway ஆ இருக்குமோ? 

அந்த நேரம் இந்த Amway obsession பிடித்து பலர் சொக்கிப்போய் தேவராஜ்ஜியம் சமீபத்து விட்டது என்ற பிரமையில் இருந்ததை பார்த்திருக்கிறேன்.
திருச்சியில் ஆம்வே பேசிய சிலரை முகத்தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்திருக்கிறேன்.
தடுக்கி விழுந்தால் ஆம்வே. இன்னும் ரெண்டு மூணு வருசத்தில சர்வ நிச்சயமா காரு வாங்கணும், பங்களா வாங்கணும், எஸ்டேட் வாங்கணும்னு தவித்து தக்காளி வித்துக்கொண்டிருந்தான்கள்.
என் அப்பாவிடம் ஆம்வே சரக்குகளை சில ஆம்வே ஏஜண்ட்கள் தள்ளி விட்டு போயிருக்கிறான்கள்.
பெற்றோர் அப்போது வயலூர் ரோடு குமரன் நகரில். நான் என் குடும்பத்துடன் பிஷப் ஹீபர் காலேஜுக்கு எதிரே எம்.ஜி.ஆர் நகரில்.
மனைவியோடு வந்து சேர்ந்தான் நண்பன். தலை பெரும்பகுதி நரை.
எனக்கு நரையே இல்லை என்பதை பார்த்து டை அடித்திருக்கிறேனாக்கும் என்று அவன் மனைவி நினைத்து விட்டாள். இயற்கையாகவே அப்போது எனக்கு நரையில்லை.
இன்று வரை கூட நான் தலைக்கு டை அடித்ததேயில்லை. இப்போது எனக்கு நரை இருக்கிறது. முடி அடர்த்தி குறைந்து விட்டது.
அவன் மனைவியுடன் சாப்பிட்டு முடிக்கும் வரை நான் எதுவும் கேட்கவில்லை. அவன் ஆனால்
“ ஒளிமயமான எதிர்காலம்” பேசிக்கொண்டே தான் சாப்பிட்டான்.
“ ஆம்வே விஷயமா வந்திருக்கியா?”
“எப்படி கேபி கரெக்டா கண்டு பிடிச்சே”
நான் இதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேன் என்பதை மெதுவாக சொன்னேன். அவனுக்கும் அவன் மனைவிக்கும் சுதி இறங்கி விட்டது.
ஆனால் அவன் மனந்தளராமல் மீண்டும் முருங்கை மரம் ஏறினான். என்னை எப்படியாவது பேசி கன்வின்ஸ் செய்து விடலாம் என்ற நம்பிக்கை.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் அடுத்தவனுக்கு வேலை பார்க்க வேண்டியதில்லை. நாமே சகல பலன்களையும் கொள்முதல் செய்வோம். இன்னும் அஞ்சு வருஷத்தில வாழ்க்கையில வசதி வாய்ப்போடு கைய கட்டிக்கிட்டு உக்காந்து சாப்பிடலாம்.
மறு நாள் ஆம்வே மீட்டிங்குக்கு நான் வரவேண்டும் என்று வலியுறுத்தினான். அந்த மீட்டிங்கில் எனக்கான டிக்கெட் அவனை எடுக்க விடாமல் நானே பணம் கொடுத்து விட்டேன்.
சகிக்க முடியவில்லை. சரியான கூட்டம். எனக்கு எல்லாமே வேடிக்கை தானே.
தெலுங்கு நடிகர் மாதிரி மேக் அப்பில் மேடையில் ஒருவன் தோன்றி சொன்னான். “ ஆம்வேயினால் நான் இன்று பெருங்கோடீஸ்வரன். முன்பெல்லாம் என் மனைவிக்கு சல்மான்கானைத் தான் பிடிக்கும். இப்போது உன்னுடைய ஹீரோ யார் என்று என் மனைவியை கேளுங்கள். ‘என் புருஷன் தான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.”
இப்படி பெரிய ட்ராமா நடத்தினான் ஆம்வே கம்பெனிக்காரன். இதை நம்பி கூட்டம் பெரும் கரகோஷம்.
வீட்டிற்கு வந்தவுடன் நான் தீர்மானமாக நிராகரித்து சொன்னது அவனுக்கு ரசிக்கவில்லை.
தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் ஆம்வே பொருட்கள் நிரம்பிய 4500 ரூபாய் கிட் ஒன்றை விற்க வேண்டுமாம். Chain Circulationல் ஒரு வருடத்திலிருந்து பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். நான் கோணிக்குள்ள கட்டோ கட்டு என்று கட்டப்போகிறேன்.
அவனிடம் ஆம்வே பற்றி என் பதில் இப்படி சொன்னேன். “ நான் என் நண்பர்கள், சொந்தக்காரர்கள் யாரையும் சுரண்ட விரும்பவில்லை. ஏமாற்ற விரும்பவில்லை.”
” இன்னும் சில வருடங்கள்ல (நீ என்னப் பாத்து) ரொம்ப வருத்தப்படுவே.” என்று சாபம் கொடுத்தான்.
அவன் மனைவி என் தர்ம பத்தினியிடம் “ அண்ணி, நீங்க அண்ணனுக்கு ரொம்ப செல்லம் குடுக்கிறீங்க. செல்லம் கொடுத்தே கெடுத்து வச்சிட்டீங்க”
என் மனைவியின் விருந்தோம்பலுக்கு நன்றியாக இந்த Compliment.
மறு நாள் கிளம்பினார்கள்.
தனிப்பட்ட முறையில் நான் என் அப்பாவிடம் அவர் காரை என் உபயோகத்திற்கு ஒரு நாளும் கேட்டதேயில்லை.
இவனுக்காக காரை கேட்டேன். என் அப்பாவின் காரில் இவர்கள் இருவரையும் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தேன்.
மூன்று நாள் என் வீட்டில் விருந்துண்டவன் மீண்டும் எனக்கு அதன் பிறகு ஒரு போன் போடவேயில்லை.
சென்னையில் (15 வருடம் கழித்து) சென்ற வருடம் தற்செயலாக சந்தித்தேன். அவனுடைய Super Ego அப்படியே அவனிடம் இன்னும் எஞ்சியிருக்கிறது.
அப்படி ஒன்றும் பங்களா, கார், வசதியெல்லாம் இருக்கவில்லை. நண்பர்கள், உறவு யாரோடும் இணக்கமாகவும் அவன் இல்லை. ஏதோ தலைமறைவு வாழ்க்கை போல பிறர் அபிப்ராயப்பட்டார்கள்.
மனைவியையும் அவன் பிரிந்து விட்டதாக மற்ற ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். பாவம், பிரிவு தாற்காலிகமாக இருந்தால் நல்லது.

I see men's judgments are a parcel of their fortunes, and things outward
Do draw the inward quality after them
To suffer all alike.
- Shakespeare in 'Antony and Cleapatra'


………………………………………………

Chalte Chalte - R.P.Rajanayahem


Five Gundas

$
0
0

அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் ஒரு ’அளவான’ பெண் ஒருத்தி திடீரென்று நடந்து செல்வதை இளைய தலைமுறை பார்க்க நேர்ந்தது.
அளவான உயரம். அளவான கண், மூக்கு, முகம், இடுப்பு. ரொம்ப சிவப்பு கிடையாது. கறுப்பும் கிடையாது. மாநிறம்.
அளவான அவயவங்கள் ஒரு பெண்ணை அழகாக்கி விடுகிறது.
ஏரியாவுக்கு புது வரவு.
அங்கே நின்று கொண்டிருந்த எல்லோருக்குமே அவளை பிடித்தது. இப்படி ஒரு பெண் தான் காதலியாக வர வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
கிடார் எபி, கிடார் துரையென்று ரெண்டு பேர்.
கிடார் எபி ப்ளு பேர்ட்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவில் லீட் கிடாரிஸ்ட்.
நான் பாடப் பாட இவர்கள் இருவரும் கிடார் பழகினார்கள்.
அப்படி பழகியதில் கிடார் எபி மதுரையில் முக்கியமான கிடாரிஸ்ட் ஆன பின் “ நீ பாட, பாட தானே நான் கிடார் வாசிக்க பழகினேன்” என்று நன்றியுடன் என்னிடம் சொன்னான்.

இவன் அளவுக்கு கிடார் துரையால் வாத்தியத்தில் பாண்டித்யம் பெற முடியாமல் போனது.
ஆனால் இந்த ’அளவான’ பெண் விஷயத்தில் எல்லாம் கிடார் துரையால் பின் வாங்க முடியுமா?
கிட்டத்தட்ட பத்து, பன்னிரண்டு பேர் பார்த்த விநாடியில் களத்தில் இறங்க தயாராகி விட்டார்கள்.
கிடார் துரை அதன் பின் அந்தப் பெண் பார்க்க நேரும்போதெல்லாம் ரோட்டில் கிதாரில் ரிதம் வாசிக்க ஆரம்பித்தான். லீட் வாசிப்பதில் தான் அவனுக்கு சிக்கல்.
அவளை பின் தொடர்ந்து கோமஸ் பாளையத்தில் அவள் வீட்டை கண்டு பிடித்து விட்டான்.
நல்ல மார்கழி மாதம் அது.
விடிவதற்கு கொஞ்ச நேரம் முன் ’மசை கிளப்பல்’. தலைக்கு மஃப்ளர் கட்டிக்கொண்டு ஸ்வெட்டரை சட்டை மேல் போட்டுக்கொண்டு சைக்கிளில் தாட்டி வீட்டை நோக்கி ஒரு வெள்ளோட்டம் விட்டான் கிடார் துரை. பனியில் இவனுக்கு பல்லெல்லாம் தந்தி அடிக்க ஆரம்பித்து விட்டது. சரியான குளிர். வெட வெடன்னு வாடையில உடம்பு நடுங்க, நடுங்க அந்த மசை வீட்டின் வாசலில் சைக்கிளை செக் பண்ணுவது போல நிறுத்தியிருக்கிறான்.

வீட்டின் வெளி வராண்டாவில் ஐந்து கட்டிளங்காளைகள் கட்டாந்தரையில் பாய் கூட விரிக்காமல் படுத்துறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அழகொட்ட அஞ்சு பயல்கள்.

லேசான விடியலில் இவன் மீண்டும் எண்ணிப்பார்த்திருக்கிறான். ஆமா…அஞ்சு குண்டர்கள்.. பார்த்தாலே சகோதரர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் சாயலில் தெரிகிறது.
இந்தக் கடுங்குளிரில் வெளி வராண்டா கட்டாந்தரையில் ஒரு சட்டை, ஒரு பனியன் கூட போட்டுக்கொள்ளாமல் வெறும் உடம்புடன் படுத்துறங்கும் ஐந்து குண்டர்கள்.
ஸ்வெட்டரும், தலைக்கு மஃப்ளரும் கட்டிக்கொண்டிருந்த கிடார் துரைக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது.
வீட்டிற்குள் இருந்து அந்த பெண்ணின் அம்மா சமையல் கட்டிலிருந்து “ அண்ணன்கள எழுப்பி விடும்மா. விடிஞ்சிடுச்சு“ என்று சத்தமாக, வெராண்டாவை ஒட்டியிருந்த ஹாலில் தூங்கி எழுந்து நின்று கொண்டிருந்த அந்த அழகான பெண்ணிடம் சொல்லியது இவன் காதில் விழுந்திருக்கிறது. வெராண்டா, ஒரு ஹால், அடுத்து சமையல் கட்டுள்ள வீடு.
இவன் அங்கிருந்து விட்டான் ஜூட்.
டேய், Five Gundas. அஞ்சு கட்டழகர்கள் கடும்பனியில்
கட்டாந்தரையில் படுத்துத் தூங்குறாங்கெ… அவளுக்கு அஞ்சு அண்ணன்கள்.
காதல் களத்தில் இறங்க ஆசைப்பட்ட பலரும், அப்படி அதற்காக ’களப்பலி’ ஆக வேண்டுமா? என்று விவேகமாக யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்தப்பெண்ணின் பெயரே அதன் பிறகு அந்த ஏரியாவில் ’ஃபைவ் குண்டாஸ்’ தான். அவள் பெயர் என்னவோ? ஆனால் அவளைப் பார்த்தால், அவளை பற்றி பேசினால், அவளை அடையாளமிட ’ஃபைவ் குண்டாஸ்’.

...................................................................................

இது ரஜினி சமாச்சாரமில்ல

$
0
0

முதல் மனைவி முத்துக்கண்ணு. அப்படியிருந்தும் ஒரு strong affair. அதுவும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியோடு. ”ஏப்பா கேள்விப்பட்டனே.. மஞ்சுளாவோட சேர்க்கையா..உண்மையா” என கேட்ட சாண்டோ சின்னப்ப தேவரிடம் “என்னண்ணே! நீங்களுமா இதை நம்புறீங்க. அப்படியெல்லாம் நான் செய்வேனா? நம்ம ஜாதியென்ன? அப்படியெல்லாம் ஜாதிய தூக்கி போடுகிற ஆள் நான் இல்லண்ணே.” என்று சொன்ன விஜயகுமார்.
மஞ்சுளாவுக்கு எல்லா திரைப்பட நடிகைகளுக்குமுள்ள சிக்கல்கள் இருந்தது. கதாநாயகியாக நடித்த எங்கள் தங்கராஜா, உத்தமன் படங்களின் தயாரிப்பாளர் வி.பி.ராஜேந்திர பிரசாத்தை திருமணம் செய்யவிருப்பதாகக் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் ஊட்டியில் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த போது ரிஸப்சனிஸ்ட்டிடம் கூட அப்படி மஞ்சுளா சொல்லியிருக்கிறார்.
ஆனால் இப்படி ஸ்டேட்மெண்ட் எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்தாக மாறும். மன்மத பாணம் மாறி மாறி வெவ்வேறு விதமாக வீசப்படும் போது எப்படியெப்படியெல்லாமோ திசை மாறி விடும் காட்சிகள்.
An ever-shifting kaleidoscope ...............all patterns alter!

எம்.ஜி.ஆர் காதிற்கு விஜயகுமார் மஞ்சுளா காதல் விஷயம் தெரிய வந்த போது எது அவரை கோபப்படுத்தியதோ?
வாஹினி ஸ்டுடியோவில் மேக் அப் ரூமில் இருந்த எம்.ஜி.ஆர் உத்தரவுப்படி அந்த ஸ்டுடியோவில் நடித்துக்கொண்டிருந்த விஜயகுமார் அவரை பார்க்க பதட்டத்துடன் வருகிறார்.
மேக் அப் ரூமில் விஜயகுமார் நுழையு முன் அவருடைய தலைமுடியை பிடித்து உள்ளே எம்.ஜி.ஆரின் கை அவரை உள்ளே இழுப்பதை ஸ்டுடியோவில் இருந்த பலரும் பார்க்கிறார்கள்.
கவனிப்பு உள்ளே எப்படியிருந்திருக்கும் என்பதைப்பற்றி யூகிக்க அதிக சிரமமில்லை.
மண்டகப்படி முடிந்த பின் விஜயகுமாரிடம் சீப்பை கொடுத்து “தலை சீவிக்கொண்டு வெளியே போ” என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். விஜயகுமார் ரோஷத்துடன் சீப்பை அலட்சியப்படுத்தி விட்டு கலைந்த தலையுடனே மேக் அப் அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
There is no wound that time cannot heal!
”அண்ணா நீங்க நினைச்சபடி நடந்துருக்கு
புரட்சி தலைவர் கையில் நாடிருக்கு” என்ற பாடலுக்கு பின்னால் ஒரு படத்தில் அதிமுக கொடி பிடித்து விஜயகுமார் நடித்தார்.
உற்சாகமாக “கொடுக்கின்ற கை, துன்பம் துடைக்கின்ற கை, மக்கள் நம்பிக்கை கொண்டிங்கு இப்போ அரசாளுது” என்று அடித்த கையை புகழ்ந்து லாலி பாடினார்.
எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்களெல்லாம் அவரை தூக்கி பிடிப்பது புதிதல்ல. அதிசயமுமல்ல.

அம்ஜத் குமார்

$
0
0

கை கொடுத்த தெய்வம் படத்தின் அவுட் டோர் ஷூட்டிங். டச் அப் பாய் எம்.ஆர்.கணேசன் ஒரு காரில் கதவை திறந்து வைத்து விட்டு அமர்ந்திருக்கிறான். அவனை சுற்றி ஷூட்டிங் பார்க்க வந்த சிலர்.
கார் சிவாஜி கணேசனின் கார். “டேய், யார்ரா இது.”
கார் பார்க்க நின்றவர்கள் காரின் உள்ளே உட்கார்ந்திருந்த டச் அப் பாயை பார்த்து தங்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள்.
அதில் ஒருவன் “ சிவாஜியோட மகனா இருக்கும்டா”.
இன்னொருவன் “ சிவாஜி மகனா நீ” என்று எம்.ஆர்.கணேசனைப் பார்த்தே கேட்கிறார்.
பெருமை பொங்க பந்தாவாக எம்.ஆர்.கணேசன் ஆம் என்பதாக தலையசைக்கிறான்.
கொஞ்சம் சிவாஜியைப் போல சின்ன சின்ன மேனரிசங்களை செய்து கொள்கிறான். ஒரு சிகரெட்டை பற்ற வைத்து சிவாஜி ஸ்டைலில் ஊதுகிறான்.
சிவாஜி கணேசன் ஷாட் ப்ரேக்கில் தற்செயலாக கவனிக்கிறார். டச் அப் கொஞ்சம் தேவையும் கூட.
“ அவன் என்னடா என் கார்ல ஒக்காந்துட்டு பந்தாவா சிகரெட் ஊதுறான். அவனை கூப்பிடுறா”
“ டேய் டச் அப், வாடா இங்கே” என்று ப்ரொடக்சன் அஸிஸ்டண்ட் ஒருவன் ஓடி வந்து கூப்பிடுகிறான்.
“ என்னடா சிவாஜி சார் கார்ல ஒக்காந்துகிட்டு பந்தாவா சிகரெட் ஊதுற. வாடா வந்து டச் அப் பண்ணு.”
காரை சுற்றியிருந்த கும்பலில் ஒருவன், பதட்டத்துடன் காரை விட்டு இறங்கும் எம்.ஆர் கணேசனைப்பார்த்து
“ ச்சீ.. இவன் எடுபிடிடா!” என்று கத்துகிறான். இன்னும் ஒருவன் “ என்னா பந்தாவா சிவாஜி மகன்னு தலையாட்டினான்டா”
இன்னும் ரெண்டு மூணு பேர் கோபத்துடன் “ த்தூ “
டச் அப் பாய் ஓடி வந்து சிவாஜி முன் கை கட்டி நிற்கிறான். “ ஏண்டா என் கார்ல என்னடா பந்தா பண்ணிக்கிட்டிருந்தே”
“ ஒன்னும் இல்லண்ணே, கார் புது கார வேடிக்க பாத்தேன்”
சிவாஜி “ என்னமோ ஓனர் மாதிரில்லடா பந்தாவா ஒக்காந்திருந்தே. அவனுங்க ஏன் ஒன்ன காறி துப்புனானுங்க, திருட்டுப்பயலே”
அசடு வழிய எம்.ஆர் கணேசன் குழைகிறான்.
பல வருடங்களுக்குப் பின் என்னிடம் இந்த சம்பவத்தை ”என் மேல காறி துப்புனதை சிவாஜி சாரே பாத்துட்டாரு’’ன்னு ரசித்து சிரித்து சொன்னது யார் தெரியுமா? அதே எம்.ஆர் கணேசன் தான்.
நான் ’அழைத்தால் வருவேன்’ படத்தில் சந்திக்கும்போது எம்.ஆர்.கணேசனின் பெயர் அம்ஜத்குமார். அந்தப்படத்தில் வில்லன் ரோல்.
ஷோலே படத்தின் பாதிப்பில் தான் அம்ஜத்குமாராக மாறியது.
அம்ஜத்துக்கு. டச் அப் பாய் வாழ்க்கை, ப்ரொடக்சன் அஸிஸ்டண்ட், அது, இது என்று மாறி வில்லன் நடிகராக அம்ஜத்குமார்.
’அழைத்தால் வருவேன்’ கேமராமேன் ‘விக்கோ டர்மரிக்’ விளம்பரமெல்லாம் எடுத்திருந்த அசோக் குன்சால். வட நாட்டுக்காரர்.
பெங்களூரில் ஒரு நாள் அதிகாலை. மெஜஸ்டிக் சர்க்கிளில் உள்ள ஹோட்டல் நடராஜில் இருந்து ஷூட்டிங்கிற்காக ஒரு லெப்டினண்ட் கர்னல் வீட்டிற்கு போக காருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த போது அசோக் குன்சால் அப்போது இளவயதில் திரையில் மிக நல்ல சாதனை செய்திருந்த ஒரு நடிகரை பற்றி பரவசமாக என்னிடம் “ A fantastic actor. Wonderful actor” என்று சிலாகித்து சொன்னார்.
எங்கள் அருகில் நின்று கொண்டிருந்த அம்ஜத்குமார் என்னிடம் உடனே ஒரு சம்பவத்தை விவரித்தான்.
“ அப்போது பால நடிகர்களாக ஒரு நாடக கம்பெனியில் இருந்தோம். குளிக்கும் போது ஒரு வினோதம். சிறுவனாக இருந்த அந்த பிரபல கதாநாயக நடிகரை குளிக்கும்போது நான், தசரதன், பக்கோடா காதர் எல்லோரும் சேர்ந்து கைகளை விரித்து, கால்களையும் விரித்து கட்டிப்போட்டோம். சோப் நுரையால் அவன் சாமானை உருவினோம். அவன் முதலில் “ டேய், என்ன விடுங்கடா..விடுங்கடா, சாமான விடுங்கடா” என்று கத்தினான்”
சோப் நுரை கைங்கரியம் தொடர்ந்து நடந்திருக்கிறது. கொஞ்ச நேரத்தில் சிறுவனாயிருந்து இன்று மிக பிரபலமாகி விட்ட கதாநாயகன் “ டேய் பிடிங்கடா, பிடிங்கடா, தயவு செய்து சாமான பிடிங்கடா” என்று கெஞ்சும் போது சோப் கைங்கரியம் நிறுத்தப்பட்டு விட்டது.
“ டேய், பிடிங்கடா, பிடிங்கடா” - துடித்து அப்போது அந்த பையன் கெஞ்சினானாம்.
இதை என்னிடம் சொல்லி விட்டு அம்ஜத் குமார்
“ இதை அசோக் குன்சாலிடம் இங்கிலீஷில் சொல்லு” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.
இது தான் அம்ஜத்குமார். இப்படி கொஞ்சமும் ஈகோ இல்லாத நடிகனை சினிமாவில் பார்ப்பது அரிதான விஷயம். குழந்தைத்தனமான ஆள்.
Childlike and Childish.
A trouble maker.
ஷூட்டிங் போது ஒரு சமயம் ’ட்ரெஸ் கண்டினியூட்டி’ உள்ள சீனில் என் டீ சர்ட் கேட்டு கெஞ்சினான்.
அது அழகான ஃபாரின் டீ சர்ட். அப்போது அதை நான் போடும்போது நின்று பார்ப்பார்கள். கண்டினியூட்டி சீன் என்பதால் இந்த டீ சர்ட் போடக்கூடாது என்று அவனுக்கு புரியவைக்க வேண்டியிருந்தது.
அவனைப் பற்றி சினிஃபீல்டில் பலவாறு அவ்வப்போது காதில் வந்து விழும்.
ஜெமினி ரங்கநாதன் என்ற மீடியேட்டர் அப்போது ஒரு எடிட்டர் டைரக்டருக்காக ஒரு படம் பண்ணச்சொல்லி பிரபல நடிகர் ஒருவரிடம் பேசியிருந்தார். முதலில் தலையாட்டி விட்டு அந்த நடிகர் பின்னர் சுதாரித்து நிராகரித்து விட்டார்.
’கமிஷன் போச்சே’ என்ற என்ற கோபத்தில் அப்போது அவர் பெருமாள் நாயுடு என்ற மீடியேட்டரிடம் சொன்னார். “ இவன் என்ன மார்க்கெட்ல நிப்பானா? எவன் எவனோ காணாம போயிட்டான் ஃபீல்டில. இவன் பொண்டாட்டிய அம்ஜத்குமார் எவ்வளவு பேருட்ட அப்ப அனுப்பியிருக்கான். அம்ஜத்குமார கேட்டா சொல்வான் இவன் பொண்டாட்டி வண்டவாளத்த...”
நான் இது பற்றி கேட்ட போது “ நண்பனோட மனைவியாயிட்டா இப்ப. அதெல்லாம் இனிமே பேசக்கூடாது”
ஒரு தடவை பிரமாதமான அழகியொருத்தியுடன் கழுத்தில் பெரிய செயினுடன், கைவிரல்களில் மூன்று மோதிரத்துடன் அழகான காரில் வந்து இறங்கியிருக்கிறான்.
சரி அம்ஜத் சூப்பரா செட்டிலாயிட்டான். புடிச்சாலும் புடிச்சான் புளியங்கொம்ப பிடிச்சிட்டான் என எல்லோருக்கும் சந்தோசம்.
ஆனா கொஞ்ச நாள்ள அவளையும் லைன்ல விட ஆரம்பிச்சிருக்கான். அவள் மிரண்டு ஓடி விட்டாள்.
அம்ஜத்குமார் பணம் கேட்டு அவன் நடிக்கும் ப்ரொடக்சன் கம்பெனிகளை ரொம்ப அரிப்பான். அதனால் சலித்துப்போவார்கள்.
அவனுக்கு தேவைகள் மிக அதிகமாயிருந்தது.
 பணம் கேட்டு எப்போதும் கெஞ்சுவான்.
ஷுட்டிங் இல்லாத நாட்களில் ஒரு ஆட்டோ பிடித்து என் போல் பலரையும் தேடி வருவான். “கண்ணு, ஆட்டோவுக்கு குடுக்கணும். ஒரு முப்பது ரூபா கொடு.”
ஒரு பத்து பேர இப்படி பார்த்து காசு தேத்தி ஆட்டோவுக்கு சின்ன தொகை கொடுத்துட்டு அன்னக்கி ’வசதி’கள தேடிக்குவான்.
Always a taker and sponger.
ஒரு கட்டத்தில் நான் அவனிடம் “ நீ தூரத்தில வரும்போதே என் கையப் பார். நான் விரித்து வைத்திருப்பேன். அதில் பணம் இருந்தா வா, பணம் இல்லன்னா அப்படியே திரும்பி போயிரு. பக்கத்தில வந்து கெஞ்சாத” என்று சொல்லும்படியானது.
சினிமாவில் பல ரேப் சீன்களில் நடித்தவன். எப்போதும் அவன் சொல்வது “ கே.ஆர் விஜயா துவங்கி எத்தன பேர படத்தில ரேப் பண்ணியிருக்கேன் தெரியுமா? எண்பது பேர் இருக்கும்!”
ஒரு நாள் சீரியஸா “ அவங்க பேரல்லாம் சொல்லு” என்றேன்.
ஒரு பதினைஞ்சு பேர் பெயரை சொல்லி விட்டு “டயர்டா இருக்கு கண்ணு. போதும்”
……………..
ராசுக்குட்டி டப்பிங்குக்காக ஏ.பி.என் டப்பிங் தியேட்டருக்கு போகும்போது ஒரு நாள் கவிஞர் முத்துலிங்கம் வீட்டு பக்கத்தில் எதிரே வந்த ஆள் அம்ஜத்குமார் என்பதை உடனே கண்டு கொண்டேன். முடி, தாடியெல்லாம் நரைந்துப்போய் வழுக்கை விழுந்து கண் குழி விழுந்து……
“அம்ஜத்…. என்ன தெரியுதா”
”தெரியலண்ணே”
”ராஜநாயஹம்”
“ஞாபகமில்லண்ணே..”
“ இப்ப பாக்யராஜ் கிட்ட ராசுகுட்டியில ஒர்க் பண்றேன்”
அம்ஜத் “அண்ணே... ஏதாவது வேஷம் எனக்கு இருந்தா சொல்லுங்கண்ணே..”


…………………………………………..

Panorama

$
0
0

மண்டய போட்டுட்டா மகான்னு கொண்டாடி கொடமொடைச்சி
டுறானுங்க.
எல்லா கட்சி 
மேல் மூடிகளும் அந்தாளு கிட்ட நல்லா வாங்கி சாப்பிட்டிருக்கானுங்க...              



ரஜினி : என் பின்னால் கடவுளும் மக்களும்.




விஜயகாந்து: என் டயலாக் ஆச்சே இது.. இப்படித்தான் ’ஆண்டவனோடயும் மக்களோடயும் மட்டும் கூட்டணி’ன்னு நானும் சொல்லிட்டு அப்புறமா பா.ஜ.க வோட சேந்திருந்திருக்கேனே.....


ரத யாத்திரை ஒரு ஏழர ரோதன என்பது சரி தான...


கமல் பேச்சு ‘வெளக்கெண்ணய எடுத்து குண்டி கழுவுன மாதிரி’ வழ,வழன்னு... 
’ஓலப்பாயுல நாய் மோண்ட மாதிரி’ சல,சலன்னு...


அண்ணா அம்மா ஆட்டுக்குட்டி முன்னேற்ற திராவிட கழகம்

$
0
0

மட்டன் கடை பாய் ரொம்ப வருத்தத்துடன் “ ஏதாவது கட்சியில் என்னை சேத்தா இந்த கசாயு வேலைய விட்டிடுவேன்”ன்னு சொன்னார். 

நான் “ ஒரு கட்சி நான் ஆரம்பிக்கிறேன். அண்ணா அம்மா ஆட்டுக்குட்டி முன்னேற்ற திராவிடகழகம். நீங்க தான் பொதுச் செயலாளர்”
“ஏதாவது வேலை எனக்கு இருக்குமா?”

“ பொதுச்செயலாளருக்கு எந்த வேலையும் கிடையாது. நீங்க மட்டன் கடைய மூடவும் வேணாம்.
அரசியல்வாதின்னாலே பார்ட் டைம் தொழில் தான்.
முழுநேர அரசியல்னு ஒன்னு இல்லவே இல்லை. எல்லோருமே பல தொழில் செய்பவர்கள் தான்.
கட்சி பேர பாத்தீங்களா.. அண்ணா பேர் இல்ல, திராவிடம் இல்லன்னு எவனும் சலிக்கவும் முடியாது. அதோட உங்க தொழில் சமாச்சாரம். ஆட்டுக்குட்டி முன்னேறுனா ஆடு. ஆடு இருந்தா தான மட்டன் கடை.”

பாய் “ உங்களுக்கு நம்ம கட்சில என்ன வேல.”

“ என்ன பாய், கட்சிக்கு தூணே தொண்டன் தானே.வேட்டி சட்டை ரெண்டு செட் வச்சிருக்கேன்.”

.............................

The relentless march of time

$
0
0

பாலாவின் "நாச்சியார்"படத்தின் கடைசி காட்சி ஒரு பழைய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.
நானும் என் மனைவியும் பாண்டிச்சேரி போவதற்காக திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ட்ரையினில் பயணம். கீர்த்தி பழனியில் எல்.கே.ஜி முடித்திருந்தான். அப்போது அஷ்வத் பிறந்திருக்கவில்லை.
விழுப்புரத்தில் இறங்கி புதுவைக்கு போக வேண்டும்.
ஏசி கோச்சில் எங்கள் எதிரில் ஒரு வயதான தம்பதியர். ஒரு ஓய்வு பெற்ற பஞ்சாயத்து கமிஷனர், அவருடைய மனைவி இருவரும் சென்னை செல்கிறார்கள்.
அந்த அம்மையார் சுகவீனமான நிலையில். எங்களை பார்த்ததில் கொஞ்சம் உடல் உபாதை மறந்திருந்தார். எங்களை பற்றி தன் கணவரிடம் சொன்னார்: ”என்னங்க... இதுங்க ரெண்டுமே கொழந்தைகள். இதுங்களுக்கு ஒரு மூணு வயசு கொழந்தை.”

பஞ்சாயத்து கமிஷனர் என்னிடம் கேட்டார் :” இப்பவே சின்னப்பையனா இருக்கியேப்பா...கல்யாணத்தப்ப எப்படி இருந்திருப்ப. டவுசர் போட்டிருக்கும்போதே கல்யாணம் பண்ணிட்டியா?”

The relentless march of time.
காலம் தான் எப்படி ரயில் மாதிரி யாருக்கும் காத்திராமல் ஓடி விடுகிறது.

“ You can't do very much about old age. It creeps up on you at a snail's pace to start with, then gathers speed in your middle age, and before you know it, you are an old man."
- Khushwant Singh

”இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்”
- கவிஞர் கண்ணதாசன்
...........................................


I always avoid compulsive talkers.
I do not appreciate rhetorical comments. In fact I do not expect or await any comment for my write-ups.
...................................

"I get easily bored with people and would rather read a book or listen to music than converse with anyone for too long.
I do not have many friends because I do not set much store by friendship.
I have found that friends, however nice and friendly they may be, demand more time than I am willing to spare.
I have had a few very close friends in my time. When some of them dropped me, instead of being upset, I felt relieved."
- Khushwant Singh

கபாலி என்ற ஒரு ’மகேசன்’ தீர்ப்பு

$
0
0
டெலிபதி.. பேங்களூரிலிருக்கும் நெருங்கிய நண்பன் எம்.சரவணன் பற்றி காலையில் எழுந்ததிலிருந்து நினைத்துக்கொண்டிருக்கிறேன். 

சரவணனிடம் இருந்து
போன்.
’சென்னை வந்திருக்கிறேன். எக்மோர் ஃபோர்டெல் ஓட்டலில் தங்கியிருக்கிறேன்.’
சரவணன் பற்றி ஒரு தனி பதிவு எழுத வேண்டும்.
ஃபோர்டெல் ஓட்டலில் எட்டாவது மாடியில். கண்ணாடி ஜன்னல் வழியே ஆல்பட் தியேட்டர் தெரிகிறது. ’நாடோடி மன்னன்’ எம்.ஜி.ஆர் படம்.
சரவணனுடன் மதியம் அங்கே உள்ள ரெஸ்ட்ரண்ட்டில் மதியம் புல்கா, மட்டன் க்ரேவி, காஃபி.
பாருங்க...Restaurant. உச்சரிப்பு ரெஸ்ட்ரண்ட் தான். ரெஸ்’டா’ரண்ட் தவறு. Spoken English teacher ஆக இருந்த போது குழந்தைகளிடம் இதை நன்கு வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன்.
இருட்டிய பின் டாக்ஸியில் சரவணன் வழியனுப்பி வைத்த பின் டிரைவர் அரசியல் பேசும்படி திரிய கொளுத்தி போட்டேன்.
கவனமாக அவருடைய அரசியல் அபிப்ராயங்களை கேட்டேன்.
டிரைவர் பெயர் கபாலி. அந்த காலத்தில் பிறந்த குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் பெயரை உடனே,உடனே கபாலி என்று மாற்றி வைத்து மயிலாப்பூர், மந்தவெளி ஏரியாவில் உள்ள ஏழைகள் கபாலீஸ்வரரை “காப்பாத்து, கொழந்தய காப்பாத்து” என்று வேண்டுதல் செய்வார்கள். பொழச்ச கொழந்த அதற்கு பின் ஆயுசுக்கும் கபாலி தான்.
டிரைவர் கபாலி குடும்பமே ரஜினி ரசிகர்கள்.
’கமலுக்கு அய்யர்ங்க ஓட்டு தான் கெடைக்கும்...’
நான் ’கமல் கடவுளே இல்லங்கறாரெ. பிராமின் ஓட்டு கூட கெடைக்குமா? ப்ராமின் ஓட்ட வச்சு தமிழ் நாட்டில குப்ப கொட்ட முடியுமா? ’
டிரைவர் கபாலி டாக்ஸியில் வெங்கடாஜலபதி, முருகன், சிர்டி பாபாவெல்லாம் இருந்தார்கள்.
கபாலி ‘ கமல் சொல்றத விடுங்க.. எனக்கு இப்ப ரஜினி புரியல சார். இப்ப டிவியில பேச்ச கேட்டேன். அவரு மேல வருத்தமாயிருச்சி...என்னமோ ஒரு வார்த்த விட்டாரு...ஞானமா...எனக்கு அந்த வார்த்த வாயில வரமாட்டேங்குது... ஞானமா? என்ன வார்த்த...இந்த மாதிரி..’
நான் எடுத்து கொடுத்தேன்.” ஆன்மீக அரசியல்”
கபாலி “ ஆங்...அது தான்....எனக்கு பிடிக்கல...இன்னாது அது. இவரு பி.ஜே.பி சொல்ற மாதிரில்ல ஏதோ சொல்றாரு... இது நியாயமே இல்ல. பி.ஜே.பி மாதிரி இன்னொரு கட்சிங்கறாரா?...”
”தமிழ் நாட்டில தான் சார் முஸ்லீம்களோட, கிரிஸ்டீன்களோட நல்லது கெட்டதுல்லலாம் நாம கலந்துக்கிறோம். சொந்தக்காரங்க மாதிரி அவங்க இருக்காங்க... பி.ஜே.பி அதுல கொழப்பம் பண்ண பாக்கிறாங்க.. ரஜினியும் அவங்களுக்கு டப்பிங் பேசறாரேன்னு கோபம் வருது சார்.. ரஜினி படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் அரசியல் பேசறது கொஞ்சமும் இஷ்டப்படல எனக்கு..”
நான் “அதிமுக அரசியல்ல உங்களுக்கு யார பிடிக்கும்”
”எடப்பாடி- பன்னீர பிடிக்கல சார். தினகரன் சுயேச்சையா நின்னு ஜெயிச்சாரே சார். பன்னீர் குரூப் எடப்பாடிய எதித்து ஓட்டு போடலியா...அது சபாநாயகர் கண்ணுக்கு தெரியல... தினகரனோட பதினெட்டு எம்.எல்.ஏ மேல கை வக்கிறாரு... இன்னா அரசியல் சார்.. இவனுங்களுக்கு தினகரன் மேல் சார்.. தினகரன் பணம் கொடுத்தாரு சரி.. எடப்பாடி கொடுக்கலன்னு சத்தியம் பண்ண முடியுமா? ”
நான் ”ஏங்க... மன்னார்குடி கும்பல ஒதுக்குனது எடப்பாடி சாதன தானே?”
டிரைவர் கபாலி “ ஒரு லட்சம் கோடியா சசிகலா, தெனகரன் ட்ட இருக்கு. அம்புட்டு பணத்த என்ன பண்ண மிடியும்”
நான் “ முன்னூறு பங்கா பிரிச்சிப்பாங்க. கருணாநிதி குடும்பங்கள் முப்பதுன்னா மன்னார்குடி குடும்பங்க, சொந்த பந்தங்க முன்னூறு தலைக்கட்டு.”
எடிரைவர் கபாலி : ஆங்.. சரி எப்படியோ ஓட்டுக்கு எத்தன தொகுதின்னாலும் பணம் கொடுக்கற வசதி.....
நான் “ சரி! எலக்‌ஷன் வந்தா யாருக்கு ஓட்டு போடுவீங்க..? உங்க பேரெ கபாலி.”
“ என் ஃபேமிலியே ரஜினி ஃபேன்ஸ் சார்... அவரு பேச்சி புடிக்கல...அரசியல் அவருக்கு எதுக்கு சார்.. கலைங்கர் கட்சிக்கு போட்டா போடுவோம். ஸ்டாலின் பாவம். வரட்டுமே..நான் சொன்னா என் ஃபேமிலி சரின்னு சொல்வாங்க... இது வர ரெட்ட எலக்கு தான் போட்டோம்.. எடப்பாடி பன்னீர் கிட்ட ரெட்ட எல இருக்குன்னா எப்படி போடுறது. கலைங்கர் இல்லாட்டி தினகரனுக்கு தான் ஓட்டு. இப்ப சொல்ல மிடில.. பணம் கையில கிடைக்கும்போது அப்ப மனசு எப்டி மாறுமோ?”
........................................
புகைப்படம்
எம்.சரவணனும் நானும்

சுப்புவும் வைத்தியும்

$
0
0

கலைக் கோவில் 1964ம் வருடம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளி வந்த படம்.
இதற்கு முன் ‘காதலிக்க நேரமில்லை’ அதே வருடம் சக்கை போடு போட்ட படம்.
கலைக் கோவில் படுதோல்வியடைந்த படம்.
இருபத்தி ஆறு நாளில் எடுக்கப்பட்டதாம்.
பாலமுரளி கிருஷ்ணாவின் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பி.பி.எஸ் “ முள்ளில் ரோஜா” “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடல்கள்.
”தேவியர் இருவர் முருகனுக்கு”
இன்ஸ்பெக்டர் சாந்தாவுக்கு ’வரவேண்டும் ஒரு பொழுது, வராமலிருந்தால் சுவை தெரியாது’ கிளப் டான்ஸ். நாகேஷுடன் சர்வர் சுந்தரம் படத்தில் ’அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் கலக்கிய இன்ஸ்பெக்டர் சாந்தா.
சிட்டிபாபுவின் வீணை.
முத்துராமன் ரோலை செய்ய வீணை பாலசந்தர் ஆசைப்பட்டிருக்கிறார். ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சிட்டிபாபுவின் வீணை படத்தில் இசை பொழிந்தது.
கலைக் கோவில் சுப்பு பாத்திரம் நாகேஷுக்கு.

”லோகம்னு இருந்தா துரோகம்னு இருக்கத்தான் இருக்கும். ஏன்டாப்பா முதல் முதல்ல உங்கிட்ட அவள அறிமுகப் படுத்தும் போது நளாயினின்னா சொன்னேன்”
நாகேஷின் கலைக் கோவில் சுப்பு பாத்திரம் அதன் பின்னர் நான்கு வருடங்களில் ஏ.பி.நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் செய்த வைத்தி மாஸ்டர்பீஸ் ரோலுக்கு அண்ணன்.

இரண்டு கதாபாத்திரமும் ஒன்றே எனும் அளவுக்கு ஒற்றுமை.
எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா, வி.கோபாலகிருஷ்ணன் யாரும் ஜொலிக்கவில்லை.
நாகேஷ் மட்டும் அமர்க்களம். என்ன ஒரு Form! இந்த படம் ஓடியிருந்தால் வைத்தி பாத்திரம் சுப்புவின் காப்பி என்று கூட சொல்லியிருந்திருப்பார்கள்.
“இந்த வைத்தி இல்லன்னா இந்த லோகத்தில நல்லதும் நடக்காது..கெட்டதும் நடக்காது.”
’கலைக் கோவில்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி இசை பிரமாதம். அந்த அளவுக்கு ஸ்ரீதர் அவ்வளவாக மெனக்கிடவில்லை. தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட மாதிரி இயக்கம்.
....................................................








எஸ்.எஸ்.வாசன் மீதான அசோகமித்திரனின் கசந்த நினைவுகள்

$
0
0

ஜெமினி ஸ்டுடியோ பற்றி எஸ்.எஸ்.வாசன் பற்றி எத்தனை சிறுகதைகளில், நாவல்களில், கட்டுரைகளில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். ’மானசரோவர்’ ஸ்டுயோ முதலாளியும் வாசனே.
மிகக் கடுமையான வார்த்தைகளால் ’வண்ணங்கள்’ கதையில் ஜெமினி முதலாளியைப் பற்றி “தேவடியாளுக்கெல்லாம் கொட்டி அளந்தாங்க. வீடு வீடாக் கட்டிக் கொடுத்தாங்க. காரு வாங்கிக்கொடுத்தாங்க. எங்களுக்குப் பத்தணா கொடுக்க பிசிநாறித்தனம்..”
”எத்தினி தொழிலாளிங்க வயத்தெரிச்சலையும் வேதனையையும் வாங்கிக் கட்டிட்டாங்க. அந்த படுபாவிங்க! அவுங்க வம்சமே உருப்படாமத் தெருத் தெருவா நாறும்.”
ஜெமினி ஸ்டுடியோவில் ஆஃபிஸ் பாய் அந்தோணியின் சாபம்.

”பதினெஞ்சு வருஷம் என் பொண்டாட்டி பிள்ளையைச் சாகக் கொடுத்து உழைச்சேன், வெளியில போறப்போ கையிலே ஆயிரம் ரூபா கூடத் தரலே..எட்டு நூறு ரூபா கொடுத்தான் அந்த முதலாளி”
”லிங்கிச்செட்டி தெருவிலே, பதினாறு வருஷம்.. அந்த மார்வாடி எவ்வளவு கொடுத்தான் தெரியுமா? இருபத்தைந்தாயிரம்!”
அசோகமித்திரனின் கதைகளில் நூறு கதைகள் படித்து விட்டு ஒரு கதையைக்கூட மறக்கத்தான் முடியுமா?
‘.
ஜெமினி ஸ்டுடியோவில் தன் மனமும், உடலும் அனுபவித்த தாள முடியாத வியாகுல துயரங்களைப் பற்றி எவ்வளவு கதைகளில் கோடிட்டிருக்கிறார்.

பழைய நினைவுகள் மனதைக் குதறிப் போடாமலிருக்க காலம் தேவைப்படுகிறது.’ என்பார் அசோகமித்திரன்.
காலத்தையும் மீறித்தான் அசோகமித்திரனின் மனம் பழைய நினைவுகளால் குதறிப்போடப்பட்டிருக்கிறது.
சும்மா யாருன்னாலும் “ There is no wound that time cannot heal” என்று சொல்லிக்கொள்ளலாம் தான். புண் உமிழ் குருதி. சீழ் கோர்க்கும் புண்களாய் கடந்த கால கசந்த நினைவுகள்.
’வண்ணங்கள்’ கதையில் எஸ்.எஸ்.வாசன், ஜெமினி ஸ்டுடியோ மீதான தன் தீராத கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வண்ணங்கள் தொடும் பரிமாணங்கள் தான் எத்தனை?
அந்தோணிக்கு சென்னையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பேய், பிசாசு இருக்கிறது என்பதைப்பற்றி தீர்மானமான அபிப்ராயம்.
அசோகமித்திரன் “ நிஜமான பிசாசு எது தெரியுமா? இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் எஜமானன், இவன் வேலைக்காரன், இவன் சம்பளம் தர்றவன்னு இருக்கே. இந்த அமைப்பு. இது தான் நிஜமான பிசாசு. இந்தப் பிசாசு இல்லேன்னா அரை வயத்துக்குச் சாப்பிட்டாக்கூட நீயும் நானும் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். இந்தப் பிசாசுக்கு ஆயிரக்கணக்கான வருஷம் வயசாயிருக்கு. அது பெரிசாயிண்டே போறது. இந்தப் பிசாசை ஒழிச்சுட்டா நீ சொல்ற பிசாசெல்லாம் தானாகவே செத்துப்போயிடும்..”
‘அப்போதெல்லாம் எங்கள் முதலாளி தொழிற்சங்கம், அரசு அமல்படுத்த விரும்பிய தொழிற்சட்டங்கள் மீது மிகுந்த சந்தேகம் உடையவராக இருந்தார். யூனியன், கம்யூனிஸ்ட் இதெல்லாம் அங்கு தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமானால் அபாயகரமான சொற்கள், சிந்தனைகள்.’
அந்தோணி, மாணிக்கராஜ், மாணிக்க வாசகம், முனுசாமி, நாயர்…
“ இவர்கள் எல்லோருக்கும் நான் அதிகாரி என்று தோன்றினாலும், நடைமுறையில் நாங்கள் எல்லாரும் ஒரே மாதிரி வேலை, ஒரே அளவு வேலை பார்த்தோம்” என்று போட்டு உடைக்கிறார் அசோகமித்திரன்.
தவிர பத்து டிரைவர்கள், இரண்டு கிளீனர்கள், பெருக்குபவர்கள், தோட்டிகள், வாச்சுமென்கள், தோட்டவேலைக்காரர்கள் என்று ஒரு சைன்யம்.
இவர்களுக்காக கடன் விண்ணப்பங்கள், சம்பள அட்வான்ஸ் விண்ணப்பங்கள், பதினைந்து நாட்கள் காணாமல் போய் விட்டதற்கு மனமுருகும் மன்னிப்பு கடிதம்...என் பேனாவில் மையூற்றி எழுதவில்லை. கண்ணீரையூற்றி எழுதினேன். கண்ணீரை வரவழைக்க வெங்காயச்சாறு நிரப்பி எழுதினேன் என்று அசோகமித்திரன் எத்தனை கதைகளில் எழுதி விட்டிருக்கிறார்.
ஜெமினி ஸ்டுடியோவின் Sister concern ஆனந்த விகடனில் இவர் வேலை பார்த்திருந்தால் நன்றாயிருந்திருக்குமா? ஒரு மகத்தான இலக்கியவாதியாக கணையாழியில் தன் எழுத்துக்கு மேடை கண்ட அசோகமித்திரன்.
சினிமா ஸ்டுடியோவில் இளமை கழிவதற்கு பதிலாக பத்திரிக்கையில் தானே ஒரு எழுத்தாளன் சேர்ந்திருந்திருக்க முடியும்.
ஆனால் பின்னால் தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய ஜெமினி வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்திருக்காதே.

Golden Chance?

$
0
0

காதலிக்க நேரமில்லை (1964) படத்திலேயே வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி பின் ரொம்ப சின்னப்பெண்ணாக இருப்பதாக தீர்மானித்து ’கேன்சல்’ ஆனதாக நிர்மலா பேட்டிகளில் சொல்வார்.
வெண்ணிற ஆடை படத்தில் ஹேமாமாலினி புக் ஆகி பின் ஸ்ரீதர் திருப்தியில்லாமல் உதட்டை பிதுக்கி ஜெயலலிதாவை புக் செய்தார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் நடித்து பெயர் பெற்ற விஷயம் எல்லோரும் அறிந்தது.
அவர் நடிப்பதற்கு முன் என் பெரிய மாமனார் எஸ்.எம்.டி. அங்குராஜ் நடித்து “ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா? உதவிக்கு வரலாமா?” பாடல் ஷூட் செய்யப்பட்டது.
அந்த படத்தில் அந்த ரோலுக்கு முதலில் புக் செய்யப்பட்டவர் எஸ்.எம்.டி. அங்குராஜ். என் மாமனாரின் அண்ணன். ஆனால் தாத்தா எஸ்.எம். தங்கமுடியாபிள்ளைக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.


என் மாமனார் தன் தகப்பனாரை சகல விஷயத்திலும் எதிர்த்து நின்றவர். ஆனால் அங்குராஜ் மாமா அப்படிப்பட்டவரல்ல. சினிமா மீது மிகுந்த பிடிப்பு உள்ளவராயினும் தகப்பனாருக்கு பணிந்தார்.
He has lost a golden chance என்று தான் நினைப்பார்கள். அவருக்கு சினிமா மூலம் நடிகராக பிரபலம் கிடைக்கவில்லை.
ஆனால் வசதி, வாய்ப்பு, அந்தஸ்து விஷயத்தில் அங்குராஜ் நிச்சயம் ரவிச்சந்திரனை விட மிகப்பெரிய கோடீஸ்வராக வாழ்ந்தவர்.

ஜெமினி கணேசனின் நண்பர். ஜெமினி இவரைப்பற்றி எல்லோரிடமும் நண்பர் என்று சொல்ல மாட்டார்.
“ Anguraj is my relative” என்பார்.
என்னிடமே ஒரு கல்லூரி முதல்வர் “ ஜெமினி கணேசன் உங்க மாமாவை ’Anguraj is my relative’ னு சொல்றாரே”ன்னு ஆச்சரியப்பட்டு கேட்டார்.
ஜெமினி கணேசன் 1987ல் ஒரு செய்திப்பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில்
“காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரனுக்கு முன் எஸ்.எம்.டி. அங்குராஜ் தான் ஒப்பந்தமானார்.ஆனால் பெரியவர் தங்கமுடியாபிள்ளை அதற்கு மறுத்து விட்டார். அதன் பின் தான் ரவிச்சந்திரன் நடித்தார்” என குறிப்பிட்டு சொன்னார்.
..........................................................
புகைப்படங்கள்
ஜெமினியுடன் ராஜநாயஹம்
எஸ்.எம்.டி.அங்குராஜ் (1972)
எஸ்.எம்.டி.அங்குராஜ் (1980)

வி. நாகையா - வித்யாவதி

$
0
0

வித்யாவதி சினிமாவில் நடிகையாக அக்கா சந்தியாவுக்கு முன்னதாகவே நுழைந்தவர். அவர் தான் பின் அக்காவையும் சினிமா நடிகையாக உதவியவர். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா.
கல்யாண்குமார் என்னிடம் சொன்ன ஒரு தகவல். 1954ல் கல்யாண்குமார் கதாநாயகனாக கன்னடப்படத்தில் அறிமுகமான போது அவருக்கு முதல் படத்தில் ஜோடி வித்யாவதி தான். ஜெயலலிதாவுடனும் கல்யாண்குமார் பின்னால் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
1953ம் ஆண்டு நடிகர் வி.நாகையா தயாரித்த ’என் வீடு’ படத்தில் வில்லியாக வித்யாவதி நடித்தார்.

வாழ்க்கையிலும் இருவரும் இணைந்தனர். நாகையாவின் அபிமான தாரமாக வித்யாவதி ஆகிப்போனார்.
வி. நாகையா கண்ணியமான பாத்திரங்களில் படங்களில் வருபவர்.
1956ம் ஆண்டு ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.சக்ரபாணிக்கு ஜோடியாக நடித்தார். விசிறியால் விசிறிக்கொண்டு வரும் வில்லி.
ஃபியட் கார் செல்ஃப் ட்ரைவிங். சிகரெட் புகைத்த நடிகை வித்யாவதி.
சந்தியாவும் வித்யாவதியும் கூட இணைந்து நடித்திருக்கிறார்கள்.
நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாகய்யா.
நாகய்யா பற்றி ... எம். எஸ் . சுப்புலக்ஷ்மிக்கு ஜோடியாக 'மீரா 'படத்தில் நடித்தவர்.
புஷ்பவல்லிக்கும் ஒரு படத்தில்(கோரகும்பர் ) ஜோடியாக நடித்தவர். அந்த புஷ்பவல்லி -நாகய்யா படத்தில் ஒரு சின்ன ரோல் ஜெமினி கணேசன் செய்திருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் சிறந்த நடிகராக நாகையா அறியப்பட்டிருந்தார். நல்ல உயரமான நடிகர்.
சொந்தப்படம் எடுக்கிற ஆசை இவரை நஷ்டப்படுத்தி பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பும் நிலைக்கு ஆளாக்கியது.

பின்னால் 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அப்பா ரோல்,மாமனார் ரோல்களிலும் சாமியார் ரோல்களிலும் தமிழ் படங்களில் வந்து இடைவேளைக்கு முன் அல்லது படம் முடியுமுன் பெரும்பாலும் செத்துப்போவார், பாவம்.
எத்தனையோ நல்ல பாடல் காட்சிகள்.
’சின்ன சின்ன ரோஜா, சிங்கார ரோஜா, அன்ன நடை நடந்து அழகாய் ஆடி வரும் ரோஜா’ குழந்தையாக குட்டி பத்மினி. பி.பி.எஸ். பாடல்.
’நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு’
’அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்பான் கீதையிலே கண்ணன்’

ஒரு பெரியவர் சொன்னார். ஒரு படம் செகண்ட் ஷோ போயிருக்கிறார்.
அந்த படத்தில் நாகய்யா இடைவேளையின் போதோ, அதன் பின்னரோ,என்ன எழவோ நாகய்யா இருமி அழுது கண்ணீர் விட்டு,நடுங்கும் குரலில் உருக்கமாக பேசிவிட்டு வழக்கம்போல செத்துப்போயிருக்கிறார்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டரை மணி போல இந்த பெரியவர் தூங்கிவிட்டு காலை ஏழு மணிக்கு எழுந்து தினசரியைப் பிரித்தால் மூன்றாம் பக்கம் சின்ன புகைப்படத்துடன் "பத்மஸ்ரீ வி.நாகய்யா மரணம் "என்று செய்தி சின்ன அளவில்.
செய்தி படித்த பெரியவருக்கு அதிர்ச்சி கிஞ்சித்தும் இல்லை. வருத்தமும் கொஞ்சம் கூட இல்லை.
ஒரு ஐம்பது படத்திலாவது நாகய்யாவின் மரணத்தைப் பார்த்து சலித்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு யாருக்குமே இது செய்தியாக அப்போது சலனமேதும் ஏற்படுத்தவே இல்லை.
ஆனால் நாகய்யா பன்முக ஆற்றல் நிறைந்தவர். திரை இசைப் பாடல்களில் கூட இவர் சொந்தக்குரலில் பாடிய "திருமுருகா என ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் "இன்றும் கேட்கக்கிடைக்கும்.
இப்போது தி நகர் பனகல் பார்க்கில் சிலையாக இன்று நிற்கிறார்!
அசோகமித்திரன் கடைசி கால கதையொன்று ஆனந்த விகடனில் வெளியானது.
நான் அவருக்கு போன் பண்ணி சொன்னேன்.
இதில் முக்கிய கதாபாத்திரம் சித்தூர் வி. நாகையா.
”அடேடே..ஆமாம்” என்றார்.
அந்தக் கதை ‘பாண்டி பஜார் பீடா’
தன்னை சிலாகித்து புகழ்ந்து பேசும் ரசிகனிடம் “இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறைய கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது” என்று சொல்லும் நடிகர் வெங்கையா தான் நாகையா.
’பாண்டி பஜார் பீடா’ கதையில் வரும் சி.எஸ்.ஆர் என்ற ஸ்டார் நடிகன் யாரென்று என்னால் கண்டு பிடிக்க முடியவேயில்லை. யாராவது தெலுங்கு நடிகராய்த் தான் இருக்கும்.
..........................................................

கெட்ட பொம்மன்

$
0
0

தின்னவேலி பாஷையில தான கட்ட பொம்மன் பேசியிருப்பான்.. எப்படி பேசியிருப்பான் என்பதை இன்று கூத்துப்பட்டறையில்
பேசிக்காட்டினேன்.
இது ஒரு பயிற்சி. வட்டார வழக்கில வசனம் பேசுவது.


மதுரை அமெரிக்கன் காலேஜ் மரத்தடியில அற்றைத்திங்கள் பட்டப்பகலில் நான் அடித்த லூட்டி தான் இதெல்லாம்.
”ஏல, ஜாக்சன், என்னல எசளி? செத்த மூதி...
ஏம்ல எங்க வயக்காட்டுக்கு வந்தியா?
நாத்து நட்டியா? கள புடுங்குனன்னு சொல்வியோடேய்?
உங்க அம்ம தாலி... என்னத்துக்குலே ஒனக்கு வரி, வட்டி...
சவத்துக்கூதி வியாபாரமால்ல இருக்கு...ஓஞ்சோலி மயித்த பாத்துட்டு போயம்ல..
ஏல என்னல முழிக்க... மொறக்க.. செத்த சவமே...
ஒளருதாம்னு பாக்கியோலே...ஈனப்புண்டழுத...
எல...எந்தம்பி ஊமத்தொர
ஒன்ன வகுந்துருவாம்ல..
நாரப்புண்டழுத...
எங்கருந்து வந்து எங்கள ஆழம் பாக்கற...
வெள்ள பன்னிகளா...பானர்மென், ஜாக்சன்னு எவனையும் சட்ட பண்ண மாட்டோம்ல.. மோதிப்பாக்கணும்னு நெனச்சன்னா.. அரிப்பெடுத்து அருவாமனல்ல ஏறுனா ஒனக்குத் தாம்ல நஷ்டம். ஒக்கா புண்ட..”

ஒரு வேளை கட்டபொம்மன் மதுரைக்காரனாயிருந்தா எப்படி பேசியிருப்பான்.
“ அப்பு..டேய்....ஜாக்சன்.. நாங்கள்ளாம் மதுரக்காரங்கடா... கொண்டே போடுவோம்டா..எங்களுக்கெல்லாம் எந்திரிச்சிச்சின்னு வச்சிக்க..அப்றம் மடக்க ஆளே இல்லடா..
டேய் வெள்ளயத்தேவா...ஏன்டா சில்றய எடுத்த இப்ப... நாந்தான் வெள்ளக்காரன்ட பேசிக்கிட்டு தான இருக்கேன்.
டேய் ஊமத்தொர. இப்ப ஏன் கத்திய படக்கிண்டு..மடக்கிண்டு...இர்றா...
டே ஜாக்சன்... நம்ப பயல்க ரொம்ப அசிங்கமானவனுங்கடா.. ரொம்ப மோசமான பிக்காலிக.. சட்டுன்னு சொருகிடுவானுங்க..சூதானமா இருந்துக்க...
ஒங்கொம்மாட்ட குடிச்ச சினப்பால கக்க வச்சிருவம்டா... நாங்களாம் ஆளயும் வோத்து நெழலயும் வோத்துட்டு போறவங்கடா.. எனக்கு நீ குடுறா வட்டி... என்ன சீட்டிங்கா? கொம்மாலோக்க..
சும்மா நட்டுத் தாழங்கள்ளாமாடா எங்கள அடிச்சிப்பாக்கறது. எங்க தாட்டிங்களுக்கு மஞ்ச அரச்சீங்களாடா ...ஏன்டா..
வாய உடாம போடா டேய்..
செவனேன்னு எங்கள இருக்க விடுங்கடா..எனக்கு கண்ணு செவேல்னு ஆயிடுச்சி.... ஏன்டா வாயக்குடுத்து சூத்தப்புண்ணாக்கிக்கிறீங்க. ”
............................
Viewing all 1854 articles
Browse latest View live