Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1853 articles
Browse latest View live

பாம்பறியும்

$
0
0

நத்தம் ரோட்டிலிருந்த மதுரை எஸ்.பி. (நார்த்) ஆஃபிஸில் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்த என் நண்பன் சொன்ன சமாச்சாரம்.
தேனி மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ  கோர்ட் விஷயமாக மதுரை வந்திருக்கிறார். சொந்த வேலைக்காக பதினைந்தாயிரம் ரூபாய் பணம் யூனிபார்ம் சட்டைப்பையில் வைத்திருந்திருக்கிறார்.
மதுரையில் வேலையெல்லாம் முடித்து விட்டு, அப்போது ரிலீசாகி சென்ட்ரல் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த கமல் ஹாசன் “காக்கி சட்டை” படம் பார்த்து விட்டு ஊர் திரும்புவதாக திட்டம். But life is what happens when we make other plans.
மதுரை பஸ் ஸ்டாண்டில் இறங்கியவுடன் அதிர்ச்சி. பணம் காணவில்லை. யூனிஃபார்ம் பாக்கெட் கிழிந்திருக்கிறது. பஸ்ஸில் இறங்குவதற்கு கொஞ்ச நேரம் முன் கூட பணம் இருக்கிறதை செக் செய்து அறிந்திருக்கிறார். பணம் காணாமல் போய் விட்ட வேதனை. எஸ்.ஐக்கு அவமானம் தாங்க முடியவில்லை. யூனிஃபார்மில் இருக்கும்போது பிக் பாக்கெட் நடந்திருக்கிறது. தைரியமாய் செய்திருக்கிறான்.
Is it an honor for a police officer to be pickpocketed?  Disgrace.
கொஞ்ச நேரம் நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கிறார்.
பஸ் ஸ்டாண்ட் போலீஸ் பூத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளிடம் சென்றிருக்கிறார்.
கான்ஸ்டபிள் “ஐயா”
எஸ்.ஐ. தான் மொஃபசல் ஏரியாவில் போலீஸ் எஸ்.ஐ. என்பதை சொல்லி நடந்ததை சொல்லியிருக்கிறார்.
கான்ஸ்டபிள் எந்த ஊர் பஸ்ஸில் இருந்து அவர் இறங்கினார் என்பதை கேட்டு விட்டு அந்த பஸ் நிற்குமிடத்தை உற்று ஒரு பார்வை பார்த்திருக்கிறார். பின் எஸ்.ஐ.யிடம் சொல்லியிருக்கிறார். “ஐயா.. நீங்க இங்க பூத்திலயே இருங்க..நான் ஒரு பத்து நிமிஷத்தில் வந்திட்றேன்.”
கான்ஸ்டபிள் போய் அரை மணி நேரம் கடந்திருக்கிறது. எஸ்.ஐ நகத்தை கடித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார். இன்னும் ஒரு அரை மணி ஓடியிருக்கிறது.
கான்ஸ்டபிள் வேர்க்க விருவிருக்க வந்திருக்கிறார்.
’ஐயா, எவ்வளவு பணம்னு சொன்னீங்க..’
’பதினைந்தாயிரம்’
‘பத்தாயிரம் தான்னு சாதிக்கறானுங்க..’
’பதினைந்தாயிரம்டா’ அழாத குறையாக எஸ்.ஐ. பதில்.

முப்பது வருடங்களுக்கு முந்தைய ’பதினைந்தாயிரம்’ மதிப்பு மிக்க கணிசமான தொகை.

‘ஐயா இன்னக்கி பதினைந்தாயிரம் காணாம போயிடுச்சின்னு நினைக்காதிங்க.. லாட்டரியில உங்களுக்கு ஏழாயிரம் விழுந்திருக்குன்னு நெனச்சிக்கங்க.. காடைய காட்டில விட்டா பிடிக்க முடியுமா?’
’என்னய்யா சொல்ற’
’நான் போறதுக்குள்ள ஆறு பய கைக்கு அமௌண்ட் மாறிடுச்சி. கை மாறும் போது அமௌண்ட் கொறஞ்சி கிட்டே வரும். ஏழாவது பயல நான் பிடிச்சப்போ அவன் கிட்ட இவ்வளவு தான் இருந்திச்சி.’
ஏழாயிரம் ரூபாயை கான்ஸ்டபிளிடம் இருந்து பெற்றுக்கொண்ட எஸ்.ஐக்கு தெளிவாக புரிந்த விஷயம். கான்ஸ்டபிளுக்கும் பங்கு பிரிந்திருக்கிறது.
வேலியே வேலியை மேய்ந்த கதை.

...........................................................................

(சங்கர்) கணேஷ்

$
0
0

’நானே பனி நிலவு’  மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஜெயலலிதா மேடையில் ஆடிப்பாடும் பாடல். நாகேஷ் தங்கையாக ஜெயலலிதா. 
நாகேஷ் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவர் “ மிஸ்டர், குட்டி ரொம்ப ஷோக்காயிருக்குல்ல.யாரது?” என்று கேட்பார். அவர் (சங்கர்) கணேஷ்.

அப்போதெல்லாம் அவர் விஸ்வநாதனிடம் அஸிஸ்டண்ட். மேஜர் சந்திரகாந்த் படத்திற்கு இசையமைத்தவர் வி.குமார்.
சர்வர் சுந்தரம் படத்தில் ‘ அவளுக்கென்ன அழகிய முகம்’ பாட்டில் பேங்கோஸ் வாசிப்பார்.
கலாட்டா கல்யாணம் படத்தில் உறவினில் ஃபிப்டி ஃபிஃப்ட்டி பாடலில் ஒலிக்கும் ஆண் குரல் கணேஷ் தான்.
விஸ்வநாதன் குரூப்பில் இருக்கும்போது “ டேய் கணேஷ், அது யாருடா வயலின் கொஞ்சம் பிசிறு தட்டுதே” என்றால் கணேஷ் ஆர்க்கெஸ்ட்ரா பகுதிக்கு வந்து “ அண்ணே, என்னண்ணே’’ என்பார்.
அப்படியே விஸ்வநாதன் ட்ரூப்பில் conspicuous ஆக தெரியத்தொடங்கியவர்.
ஒருங்கிணைப்புத் திறன் மிகுந்த கணேஷ், இசைஞானமிக்க சங்கருடன் இணையும் தேவையிருந்தது. மகராசி படம் தேவர் தயவில் கண்ணதாசன் சிபாரிசில் கிடைத்து இசையமைப்பாளர்கள் ஆனார்கள்.
கணேஷுக்கு படங்களில் தலை காட்டுவதில் பிரியம் அதிகம்.
புகுந்த வீடு படத்தில் “ மாடி வீட்டுப்பொண்ணு மீனா, கோடி வீட்டு பக்கம் போனா’ பாட்டில் ரவிச்சந்திரன் இசையமைப்பாளர்களை ‘ சங்கர், கணேஷ் என்று அறிமுகப்படுத்துவார்.
’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் தலைப்பு பாட்டில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் ‘ வரவேற்பு, வரவேற்பு’ பாடலுக்கு நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக ரெண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
கணேஷ் வாழ்க்கை பரபரப்பானது.
ஜி.என்.வேலுமணியின் மகள் ரவிச்சந்திரிகாவை காதல் திருமணம் செய்தவர்.
பார்சலில் வந்த ரேடியோ வெடிகுண்டு இவர் கைவிரல்களை சிதைத்திருக்கிறது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது இவர் ஐம்பது அடி தூரத்தில் இருந்திருக்கிறார்.
சென்ற வருடம் எக்மோர் ஸ்டேசனில் இவரை பார்த்த போது பழைய நினைவு வந்தது.
ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஆர்.ஆர். ரிக்கார்டிங் தியேட்டரில் சங்கர் கணேஷ் இசையமைத்துக்கொண்டிருந்த போது ஸ்டுடியோவை பார்க்க வந்திருந்த என் தந்தையை அங்கே அழைத்துப்போயிருந்தேன்.
கணேஷ் என்னையும் அப்பாவையும் பார்த்தார். நான் வலது கையை தூக்கி ஒரு சல்யூட் விஷ் செய்தேன். பதிலுக்கு கணேஷ் மிக உற்சாகமாக நெற்றி தொட்டு பிரமாதமாக ரெஸ்பாண்ட் செய்தார்.
என் அப்பா கேட்டார். ‘உனக்கு இவர் தெரிந்தவரா?’
’அறிமுகம்,பழக்கமெல்லாம் இல்லை.இவர் இசையமைப்பாளர் கணேஷ்’ என்றேன்.
தினமும் ஸ்டுடியோவில் அவரையென்றில்லை. பெரியவர்கள் யாரென்றாலும் நான் விஷ் செய்வேன். சங்கர் கணேஷ் எப்போதும் வெறுமனே தலையாட்ட மாட்டார். அவரும் அதிக உற்சாகமாகவே விஷ் செய்வார்.
பல சினிமா பிரபலங்கள் ரொம்ப இறுக்கமாக தலையைக் கூட அசைக்க மாட்டார்கள்.
எக்மோர் ஸ்டேஷனில் அன்று ரயிலில் இருந்து மனைவியுடன் இறங்கிய கணேஷ் என்னை தாண்டி செல்லும் போது நான் ‘ நமஸ்காரம் சார்’ என்றேன்.
பதிலுக்கு “ நமஸ்காரம், நல்லாயிருக்கீங்கள்ள” என்றவாறு நடந்து சென்றார்.
அப்போது அங்கு அதைப்பார்த்துக்கொண்டிருந்த சிலர் கூட எனக்கும் கணேஷுக்கும் நல்ல அறிமுகம் போல என்று தான் நினைத்திருக்கக்கூடும்.
அதான் (சங்கர்) கணேஷ்.
உடை உடுத்துவதில் அவர் தனித்தன்மையுடன் இருப்பது கூட சரி, பரவாயில்லை. ஆனால் ஏன் கழுத்திலும், நெஞ்சிலும், கையிலும் இவ்வளவு தங்க நகைகள்?

................................................



அசோகமித்திரனின் கடைசி நாவல் ’யுத்தங்களுக்கிடையில்’

$
0
0

”நான் கடைசியாக எழுதி முடித்த நாவல் யுத்தங்களுக்கிடையில்’ நர்மதா பதிப்பாக வந்து பல மாதங்கள் ஆகின்றன. அது வெளிவந்ததாகவே உலகுக்குத் தெரியாது. இந்தப் பத்திரிக்கைகள் அந்த நூலைப் பார்த்து ஒரு குறிப்பு எழுதலாம்.” அசோகமித்திரன் இப்படி தவிக்க வேண்டி இருந்தது.
நாவல் வெளி வரும் முன்னர் திலகவதியின் ’அம்ருதா’ பத்திரிக்கையில் சின்ன ட்ரெய்லர் போல அந்த நாவலின் ஒரு அத்தியாயம் ’ஆற்றில் குளிப்பது எப்படி?’ (முதல்வரி ’செப்டம்பர் 3,1939. யுத்தம் வந்து விட்டது’) பிரசுரமாகியிருந்தது.
நாவல் முதல் உலக யுத்தத்திற்கும் இரண்டாம் உலகயுத்தத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கே மாயவரம் துவங்கி செகண்ட்ராபாட் வரை ஒரு குடும்ப நிகழ்வுகளை உள்ளடக்கியது.
நாவல் நடக்கிற காலம் இப்படியென்றால் இதை எழுதிய காலம் “ Sorrows never come singly”யை நினைவுபடுத்தும் விதமாக இருந்திருக்கிறது. அசோகமித்திரன் ஐம்பது வருடங்களாக குடியிருந்த தி.நகர் தாமோதரன் ரெட்டி தெரு வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அந்த 2000 மாவது ஆண்டில் அவருடைய குடும்பத்தில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு, வாரக்கணக்கில் மருத்துவமனை சிகிச்சை. மூவருக்கும் நிரந்தரமாக நினைவு படுத்தும் வகையில் காயங்கள். அந்த நெருக்கடியான காலத்தில் தான் இந்த கடைசி நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர்.
அசோகமித்திரனின் அப்பா முதல் உலகயுத்த காலத்தில் ஒரு வெள்ளைக்கார துரையிடம் நிஜாம் சமஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்து அந்த வேலை யுத்தம் முடிந்தவுடன் முடிவுக்கு வந்த பின் அந்த துரை உதவியுடனேயே ரயில்வேயில் தனக்கும் தன் தம்பிகள் இருவருக்கும் கூட வேலை வாங்கி அங்கே செட்டிலாகி இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் ஒரு ஐந்து வருடங்களில் சகோதர்கள் தங்கள் மனைவிகளையும், படிப்பை முடிக்காத குழந்தைகளையும் விட்டு விட்டு செத்துப்போகிறார்கள்.
நாவல் மிக கனமான உருக்கமான, இறுக்கமான தளங்களை உள்ளடக்கியது.
இன்று நான்கு முறைக்கு மேல் நான் 2010லிருந்து நாவலை மறு வாசிப்பு செய்து விட்டேன். இன்னும் என் காலம் முடியும் வரை எத்தனை முறை வாசிப்பேனோ?
மாயவரத்தை ஒட்டிய ஒரு கிராமத்திலிருந்து நிஜாம் சமஸ்தானத்திற்கு அந்த சகோதரர்களை எது கொண்டு சேர்த்தது. முற்றிலுமாக வேறு கலாச்சார சூழலில் நடுத்தர வயதில் அன்னியப் பிரதேசத்திலே உயிரையும் விட வைத்தது. இதற்கெல்லாம் சில வரி பதில் சொல்வது அபத்தம்.
18வது அட்சக்கோடு நாவல், எத்தனை சிறுகதைகள், கட்டுரைகள் அந்த ஹைத்ராபாத், செகண்ட்ராபாத் பற்றி எழுதித் தீர்த்திருக்கிறார்.
ஐந்நூறு கோப்பைத்தட்டுகள், மாறுதல் (சாய்னா), சுந்தர், நடனத்துக்குப் பின், பங்கஜ் மல்லிக், தந்தைக்காக, கதர், அபவாதம், அவள் ஒருத்தி தான், உத்தர ராமாயணம், அப்பாவின் சிநேகிதர், சாயம், முனீரின் ஸ்பானர்கள், சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், திருநீலகண்டர், சகோதரர்கள், மண வாழ்க்கை, இரு முடிவுகள் உடையது, அழகு, பைசா, விடுமுறை, பாதாளம், பாண்டி விளையாட்டு, ஹரிகோபாலின் கார்பன் பிரதி, சேர்ந்து படித்தவர்கள், அலைகள் ஓய்ந்து.., அடுத்த மாதம், கொடியேற்றம், மறதி, ஆறாம் வகுப்பு, 1946ல் இப்படியெல்லாம் இருந்தது, தோஸ்த், கல்யாணி குட்டியம்மா, பரிட்சை, பாலாமணி குழந்தை மண்ணை தின்கிறது, மீரா- தான்சேன் சந்திப்பு, பார்த்த ஞாபகம் இல்லாது போதல், கோபம் ஆகிய சிறுகதைகளெல்லாம் நினைவில் நிழலாடி நிற்கிறது.
அசோகமித்திரனின் பாத்திரங்கள் காலகாலமாக திரும்பத் திரும்ப அவருடைய எழுத்தில் பயணிப்பவர்கள்.
’ஒற்றன்’ நாவல் களத்தில் அமெரிக்க அயோவா சிடி கதைகள் ‘அம்மாவின் பொய்கள்’ (1986), இப்போது நேரமில்லை (1985), ஒரு நாள் அதிகாலைப் போதில் (1975), அழிவற்றது (2004)
‘நான் ஒரு முறை ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தது. அங்கு கூட வெகு விசித்திரமாக ஒரு கொரியாக்காரன், ஓர் இந்தோனேஷியாக்காரன், ஒரு ஜப்பானிய மாது, ஓர் அமெரிக்கப்பெண், ஒரு ஹங்கேரிய அம்மாள்- இவ்வளவு பேர்கள் அவர்களுடைய துக்கங்களை என் தோள் மீது கசிய விட்டிருக்கிறார்கள். ஆனால் என் உடம்பெல்லாம் நிறைந்திருக்கும் துக்கத்தை நான் தணித்துக்கொள்ள எனக்கு இன்னும் ஒரு தோள் கிடைக்கவில்லை.” ஒற்றன் நாவல் சூழலைப் பற்றி இப்படி ‘ நானும் ஜே.ராமகிருஷ்ணராஜூம் சேர்ந்து எடுத்த சினிமாப்படம்’ கதையில் சொல்லியிருக்கிறார்.
18வது அட்சக்கோடு நாவலில் வருகிற ஜாபர் அலியை 2002ல் எழுதிய ’சகோதர்கள்’ களத்தில் காணலாம். நாகரத்தினத்தை 1982ல் எழுதிய ‘அப வாதம்’ காட்டுவதுண்டு. 2010ல் எழுதப்பட்ட கதை ’தோஸ்த்’ ரெய்னால்ட்ஸ் காரில் வரும், பளபள ஷேர்வாணி அணிந்த பையன்.
சில்வியா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், அப்பாவின் சினேகிதர் சையது மாமா. டாக்டருக்கு மருந்து புருஷோத்தம் டாக்டர்.
18வது அட்சக்கோடின் இறுதி அத்தியாயமாக இருந்திருக்க வேண்டியது ‘ஒரு நாள் நூலகத்திற்குப் போகும் வழியில் நின்று பார்த்த கிரிக்கெட் ஆட்டம்’ என்ற சிறுகதையென்று அசோகமித்திரன் சொன்னார்.
யுத்தங்களுக்கிடையில் அசோகமித்திரனின் அத்தை பணக்கார விதவை சீதா. இவளை மையம் கொண்டு எத்தனை கிளை கதைகள்.
யுத்தங்களுக்கிடையில் ராமசுப்பு ’மானசரோவர்’ நாவலில் ஜபர்தஸ்து பண்ணிய சாமா.
’கோபம்’ சிறுகதை மன்னி யுத்தங்களுக்கிடையில்.
’லீவு லெட்டர்’ குறு நாவல் கேசவராவ் யுத்தங்களுக்கிடையில்.
இந்த நாவலை படிப்பவர்கள் ஆசிரியர் 2010ல் எழுதிய குறு நாவல் ’பம்பாய் 1944’ அவசியம் உடனே படிக்க வேண்டும். சிவப்பு அண்ணா தான் சுந்தரம். பம்பாய் அண்ணா. யுத்தங்களுக்கிடையில் பம்பாய் அண்ணா பெயர் ராகவன். மூத்த மகன் தான் பம்பாய் அண்ணாவாக மாறினான்.
இளையவன் மணி தான் தத்து எடுக்கப்படுவதை இழந்தான்.
யுத்தங்களுக்கிடையில் கடைசி பாரா ‘ ஒரு தலைமுறை முடிந்தது’ (1988) சிறுகதையை நினைவு படுத்தும்.
“அவங்க அண்ணன் தம்பி ஒருத்தர் கூட அறுபது வயசைத் தாண்டலை. எங்கப்பா போறப்போ ஐம்பத்து மூணு. உங்கப்பாவுக்கென்ன ஐம்பத்தஞ்சு இருக்குமா?’
‘ஐம்பத்தாறு.”
பல வருடங்களாக நாவல் எழுதப்பட்டிருப்பதால் அசோகமித்திரனின் நினைவுக்குழப்பம் ராமேசனை இரண்டொரு இடங்களில் சபேசன் என குறிப்பிட்டிருப்பது பெரிய தவறல்ல.
………..

உலகத்தில் தான் ஒருவரைச் சுற்றி எவ்வளவு கதைகள்! கதைகளுக்கு முடிவே இல்லை. மேலும் எந்தக்கதையும் பூரணமான கதையல்ல.
- அசோகமித்திரன்.

...........................................



NAM VIRUNDHINAR 18-04-2018

சமயக்கார பாய்

$
0
0

சமயக்கார பாய் தென்காசியில் இருந்து மதுரை சவ்வாஸில் சமையல் செய்ய வந்தவர். சவ்வாஸ் ரெடிமேட் கடை முதலாளிகள், வேலை பார்ப்பவர்களுக்கு சமையல் செய்வது தான் இவருடைய வேலை. தென்காசியில் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.
சவ்வாஸ் கடை ஒரு ஜாலியான வருத்தமில்லா வாலிபர் சங்கமாக இருந்தது. நண்பர்கள் சங்கமமாகும் கலகலப்பான இடம்.
நான் சினிமாவில் இருந்து ஒரு விலகல் நேரத்தில் இங்கே பொழுதை போக்கியிருக்கிறேன். என் நண்பர்களான சவ்வாஸ் சகோதரர்கள் அங்கே நான் போனால் “ இங்கே இருங்கள். வீட்டுக்கு நாளைக்கு போகலாம்” என்பார்கள்.
அப்போதெல்லாம் நான் குறுந்தாடியுடன் தான் இருப்பேன். சமயக்கார பாய் எப்போதும் என்னை தாடிக்கார பாய் என விளிப்பார்.
நான் சினிமாவில் அஸிஸ்டண்ட் டைரக்டராய் இருந்தவன் என்பது சமயக்கார பாய்க்கு ஒரு பெரிய அட்ராக்ஷன்.
ஒரு நாள் சமயக்கார பாய் “ தாடிக்கார பாய், சினிமாவில என்னயும் சேத்துக்குவாங்களா?” என்று கேட்டார்.
என்னை கை காண்பித்து சமயக்கார பாயை பிச்சையப்பா, அக்பர், அன்பு, நிஜாம், சின்னாரத்தா சித்திக் கூட்டாக வேப்பிலையடித்திருக்கிறார்கள்.
சரி, சினிமாவில் ப்ரொடக்சனில் சமையல் வேலை எதிர் பார்க்கிறாரோ என்று நினைத்தால் அது இல்லை இல்லை என்று தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி மறுத்தார். சினிமாவில் நடிக்க ஆசையாம்.
என்ன ரோலில் உங்களால் நடிக்க முடியும்?
சமயக்கார பாய் “ கதாநாயகனாக”
வில்லன் ரோல்?
சமயக்கார பாய் “ நம்பியார், அசோகன் மாதிரியெல்லாம் எனக்கு நடிக்க வராதே..”
சரி. காமெடி?
சமயக்கார பாய் “ எனக்கு சிரிப்பு நடிகரா நடிக்கத்தெரியாது. ஹீரோவா தான் நடிக்கத்தெரியும்”
பாய் குட்டையாக பொதுக்கையாக தட்டான் போல் இருப்பார்.
சமயக்கார பாய் தீர்மானமாக வேறு எந்த கதாபாத்திரமும் ஏற்கத் தயாரில்லை என்பதை தெளிவு படுத்தினார்.
இது சீரியஸ் என்பது அவர் நச்சரிப்பு ரொம்ப அதிகமான போது தெரிய வந்தது.
கொஞ்ச நாள் விளையாட வேண்டியது தான். வேறு வழியில்லை.
உடனடியாக ஒரு ’இன்லெண்ட் லட்டர்’ என் இயக்கத்தில் ஜே.பி மாமா பெயரில் எழுதப்பட்டது.
“ அன்பு மிக்க சமயக்கார பாய்
நான் சினிமாவிலிருந்து ஜே.பி மாமா எழுதுகிறேன்.
சின்னாரத் சித்திக், சவ்வாஸ் அக்பர் உங்களைப்பற்றி சொன்னார்கள்.
தாங்கள் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க விரும்புவதை அறிந்து மகிழ்கிறோம்.
நான் தான் இந்தி ஹேமா மாலினி, ரஜினி காந்த், ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவன். அவர்கள் நடிக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் சம்பளத்தில் எனக்கு கமிசன் பத்து பெர்சண்ட் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.
உங்களிடமிருந்தும் அந்த கமிசனை நான் ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து வருடங்கள் வாங்கி விடுவேன் என்பதை பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐந்து வருடங்களுக்கு பின் நீங்கள் நடிக்கப்போகும் படங்களுக்கு எனக்கு கமிசன் தர தேவையில்லை.
கீழே சில ஷரத்துகளை கவனமாக படிக்கவும். கடுமையான ஷரத்துக்கள் என்பதால் நீங்கள் மனம் புண் பட்டு விடக்கூடாது.
1. வருடத்திற்கு ஐந்து படங்கள் தான் உங்களுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தரப்படும்.
2. ஒரு படத்திற்கு இருபது லட்சம் ரூபாய் தான் தரப்படும். இதற்கு மேல் நீங்கள் சம்பளம் கேட்டு தகராறு செய்யக்கூடாது.
3. ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா, மற்றும் மாதவி ஆகியோர் தான் உங்களுடன் கதாநாயகியாக நடிப்பார்கள். மற்ற நடிகைகளை கதாநாயகியாக படத்தில் போடச்சொல்லி நீங்கள் வற்புறுத்தவே கூடாது.
4. இப்படி ஐந்து வருடங்களுக்கு மட்டும் தான் உங்களுக்கு கதாநாயகன் வாய்ப்பு தரப்படும். பின்னர் நீங்களே தான் உங்களுக்கான பட வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். இதற்காக தாங்கள் அதிர்ச்சியடையவோ, வருத்தப்படவோ கூடாது.
5. எல்லா படங்களுமே கலர் படங்கள் தான். மாறுதலுக்காக ஒரு கறுப்பு வெள்ளை படத்தில் நடிக்கிறேனே என்று நீங்கள் போர்க்கொடி உயர்த்தினால் அது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.
6. நீங்கள் வருடத்திற்கு நடிக்கும் ஐந்து படங்களில் ஒன்றிரண்டை கே.பாலச்சந்தரோ, மகேந்திரனோ, பாலு மகேந்திராவோ, அல்லது பாரதிராஜாவோ இயக்க வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் ஒப்புதல் அளித்து ஒத்துழைக்க வேண்டும். எந்த காரணத்தைக்கொண்டும் ‘மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிக்கவே கூடாது என்பதை கறாராக தெரிவித்துக்கொள்கிறோம். மற்ற படங்களை தான் எஸ்.பி. முத்துராமன், ஐ.வி.சசி, ஏ.ஜெகன்னாதன் ஆகிய இயக்குனர்கள் இயக்குவார்கள்.
7. ஒரு படத்தில் கதாநாயகியோடு ஐந்து பாடல்கள் மட்டுமே டூயட் பாடல்கள்.  கதாநாயகியோடு ஆடிப்பாட  கூடுதலாக பாடல்கள் வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படக்கூடாது. அதோடு பாடல் காட்சிகள் ஊட்டி, கொடைக்கானலில் படம்பிடிக்க வேண்டியிருக்கும். ’எனக்கு குளிரும். என்னால் வரமுடியாது’ என்று நீங்கள் சொல்லவே கூடாது.
8. எனக்கு ஐந்து வருடங்கள் கமிசன் பத்து பெர்சண்ட் தரவேண்டும் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன்.
மேற்கண்ட சட்டதிட்டங்கள் உங்களுக்கு சம்மதமா?இவ்வளவு கடுமையாக இருக்கிறதே என்று நீங்கள் மலைக்கவே கூடாது.
இப்போதே கதாநாயகிகள் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா, மற்றும் மாதவி தங்களுடன் சமயக்கார பாய் கதாநாயகனாக நடிக்க இருப்பதறிந்து உங்களுக்கு தங்கள் அன்பை தெரிவிக்க சொன்னார்கள். உங்களை நேரில் பார்க்க ஆவலாயிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல் இருவரும் சமயக்கார பாய் நடிக்க வந்தால் தங்களுக்கு வேலைப்பளு குறையும் என்று நிம்மதி பெரு மூச்சு விட்டார்கள். சென்னை வரும் தங்கள் சக கதாநாயகனை சந்திக்க ஆர்வமாயிருக்கிறார்கள்.
இப்படிக்கு அன்புள்ள ஜே.பி. மாமா
பின் குறிப்பு : நீங்கள் தரப்போகும் கமிசன் தான் எனக்கு மிகவும் முக்கியம். வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு கிடைக்கும் மொத்த பணம் ஒரு கோடியில் பத்து லட்சம் எனக்கு அவசியம் தரவேண்டும்.
....................
கடிதத்தை சமயக்கார பாய்க்கு வாசித்து காண்பிக்க வேண்டியிருந்தது. பாய் ஒவ்வொரு ஷரத்துக்கும் ரொம்ப விளக்கங்கள் கேட்டு தீவிர சிந்தனையிலாழ்ந்தார்.
கடிதத்தை வாங்கி கவனமாக உஷார் பண்ணிக்கொண்டார். பத்திரப்படுத்திக்கொண்டார்.
…………………………
சமயக்கார பாய்க்கு அன்றிரவே கடை மூடியதுமே சாப்பாட்டுக்குப் பின் நடிப்பு பயிற்சி தரப்பட்டது.
கடையில் வேலை பார்க்கும் காதர், ரஹமத்துல்லா இருவரும் supporting actors.
“சமயக்கார பாய், ரஹமத்துல்லா தான் உங்க அம்மா. அவங்க செத்துட்டாங்க. நீங்க அழுது நடிங்க.’
ஸ்டார்ட் கேமரா, க்ளாப், பை ஃபைவ் டேக் ஒன், ஆக்ஷன்.
சமயக்கார பாய் ஓடிப்போய் ரஹமத்துல்லா மேல் விழுந்து கூப்பாடு போட்டார் “என்னை ஆறு மாசம் செமந்து பெத்த தாயே”
’கட்..கட்.. சமயக்கார பாய், பத்து மாசம் பாய், நீங்க கொற மாசத்திலயா பொறந்தீங்க…’
சமயக்கார பாய் விரல் விட்டு எண்ணி வசனத்தை மனப்பாடம் செய்தார்.
அடுத்த சீன்.
சமயக்கார பாய் நம்ம காதர் ஒரு பொண்ணு. நீங்க கற்பழிக்கிற சீன் இது.”
சமயக்கார பாய் “ தாடிக்கார பாய், என்ன சொல்லுதியோ… எனக்கு வில்லனா நடிக்கத்தெரியாதெ… எம்.ஜி.ஆர் ஒரு படத்திலும் பொம்பளை கிட்ட தப்பா நடிக்க மாட்டாரே…”
’இல்ல பாய், குடிகார அப்பாவ திருத்த மகள கற்பழிக்கிற மாதிரி எம்.ஜி.ஆர் நடிச்சிருக்கார். நடிப்புன்னா எது சொன்னாலும் செய்யனும்”
’ஸ்டார்ட் கேமரா, க்ளாப், பை சிக்ஸ், டேக் ஒன், ஆக்ஷன்.’
சமயக்கார பாய் “ என்னடி, என்ன நெனச்சிக்கொண்டு இருக்கிறாய்.. நான் கூப்பிட்டால் வர மாட்டாயோ?” என்று காதர் மேல் பாய்ந்தார்.
காதர் அவரை உடனே கீழே போட்டு மேலே ஏறி படுத்தான்.
சமயக்கார பாய் “ ஏலெ காதரு… நடிப்பு தாம்ல இது. ஏலே எந்தில…எந்தில…
காதரோ லாக் போட்டு அவரை நெருக்கினான்.
“ தாடிக்கார பாய்.. இவன எந்திக்க சொல்லுங்க பாய்.. எல காதரு நடிப்பு தானல…ஏம்ல இப்படி செய்த..”
காதர் பின்னி படர்ந்துட்டான்.
“ ஏல, காதரு..எந்தில… எல எனக்கு மூச்சு முட்டுதுல.. செத்த மூதி…. என்னல செய்த.. ஏல எனக்கு இந்த சோலியே பிடிக்காதுல.. இந்த ஒரு சோலி மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காதுல..”
………………..
ஒரு நாள் ஜே.பி. மாமா சென்னையிலிருந்து வந்தவர் சாவகாசமாக சவ்வாஸுக்கு வந்து விட்டார். அவருக்கு ஓடிக்கொண்டிருந்த ரீல் பற்றி விவரிக்கப்பட்டது. ரீல் அந்து விடாமல் மேலே ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த சமயக்கார பாய்க்கு தகவல் போய் உடனே கீழே இறங்கி வந்து விட்டார்.
கைலியை மடித்துக்கட்டியிருந்தார். விஸ்பர் வாய்ஸில் “சமயக்கார பாய், கைலிய இறக்கி விடுங்க…”
ஜே.பி. மாமா: என்னய்யா.. கண்டிஷன்லா சரி தான…
சமயக்கார பாய்: நாங்க பெரிய குடும்பம்..அண்ணந்தம்பி ஏழு பேரு….கொஞ்சம் கமிசன கொறச்சா நல்லது..
ஜே.பி. மாமா: போய்யா..என்ன ஆளுய்யா…ஏய்யா இந்த மாதிரி ஆள ஏங்கிட்ட சிபாரிசு பண்றீங்க..
சமயக்கார பாய்: நல்லா நடிப்பேன் நான்.. அதுக்கு நான் கியாரண்டி…கமிசன மட்டும் கொஞ்சம் கம்மி…
ஜே.பி.: ஓடிப்போயிடு.. நான் செம காண்ட்டாயிடுவேன்.
ஜே.பி மாமுவை அக்பர் சமாதானப்படுத்த செய்த முயற்சி விழலுக்கு இறைத்த நீராகி விடுமோ என்று எல்லோரும் அஞ்ச வேண்டியிருந்தது.
சமயக்கார பாய் உடனே சரணாகதியடைந்து ஜே.பி. மாமா காலில் விழ செய்த முயற்சியும் கூட வீணாகும் அளவுக்கு ஜே.பி. கொப்பில் ஏறினார்.
சமயக்கார பாய் : ஜேப்பி மாமா.. என்ன மன்னிச்சிக்கங்கங்க… நீங்க என்னென்ன சொன்னாலும் கவிதை… நான் தட்ட மாட்டேன்.
ஜே.பி. ”சரி…சரி….பொழச்சுப்போ…சினிமாவுக்கு வந்த பிறகு கமிசன கொறைங்கன்னு சொன்னே பாத்துக்க” விரலை நீட்டி நாக்கை கடித்தார்.
சமயக்கார பாய் மேல போய் சமையலை தொடர்ந்தார்.
குழம்பில் உப்பை அதிகமாக போட்டார். டீயில் ஜீனி போட மறந்தார். சோறு அடிக்கடி குழைந்து போனது. கறியில் காரம் போட மறந்தார்.
அவரிடம் இருந்த ஜேபி மாமா ஷரத்துக்கள் அடங்கிய இன்லெண்டு லெட்டர் கவனமாக கைப்பற்றப்பட்டு சுக்கு நூறாக கிழிக்கப்பட்டது.
”ஐயோ…தாடிக்கார பாய்… என்ன செய்தியோ.. ஆதாரத்த பாழாக்கி போட்டீங்களெ..”

பழசு ஒன்னு, புதுசு ஒன்னு

$
0
0

Sudhakar is Nothing
ஹிண்டு ரங்கராஜனின் படத்தில் நடிகர் சுதாகர் நடித்துக்கொண்டிருந்த போது, ஹிண்டு பத்திரிக்கையில் அந்த நேரத்தில் ரிலீசாகியிருந்த ஒரு சுதாகர் படத்தின் விமர்சனம் பிரசுரமாகியிருந்தது. அதில் Sudhakar is nothing என்றே எழுதப்பட்டிருந்தது.
சுதாகரின் பெரும்பாலான படங்கள் தரமில்லாமல் தான் இருந்தது. மார்க்கெட் முடிவுக்கு வரும்படியான சூழ்நிலை வெகு சீக்கிரமாக உருவாக இருந்தது. தயாரிப்பில் இருந்த ஹிண்டு ரங்கராஜனின் படமும் படுதோல்வியை தழுவ இருந்த படம் என்பது தான் வேடிக்கை.

’கௌரவம்’ படத்தை எடுத்த ஹிண்டு ரங்கராஜன். நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார். ஜெமினி கணேசன் ஹிண்டு முதலாளியின் நல்ல நண்பர். மற்றபடி எந்த நடிகரையும் அவர் மதிக்கக்கூடியவர் அல்ல. ஒரு மஹாராஜா தோரணையில் இருப்பவர்.
’ நான் இவர் படத்தில் கதாநாயகன். என்னைப்பற்றி அவருடைய பத்திரிக்கையில் இப்படி ‘Sudhakar is nothing’ என்று எழுதுவது நியாயமா?’
வெளிப்படையாக முனகினார் சுதாகர்.
ஹிண்டு ரங்கராஜன் காதுக்கு இது போன போது அவருடைய ரீயாக்சன் சுதாகருக்கு இன்னும் அவமானமாய் ஆகி விட்டது.
ஹிண்டு பத்திரிக்கையை சுதாகரால் influence செய்ய முடியுமா?
புகைப்படங்கள்
ஹிண்டு ரங்கராஜனின் அந்த படத்தில் ராஜநாயஹம்
..........................................................

ஷோபா சக்தி
விகடன் ந.முத்துசாமிக்கு பெருந்தமிழர் விருது கொடுத்து கௌரவித்த விழாவுக்கு சில மாதங்களுக்கு முன் போயிருந்த போது அ.மார்க்ஸ் பக்கத்தில் அமர்ந்திருந்த ஷோபா சக்தியை சந்தித்தேன்.
ஃபேஸ்புக்கில் என்னை படிப்பதாக சொன்னார்.
ஃபேஸ்புக்கில் படிக்கும் பலரும் எனக்கு லைக் கொடுப்பதில்லை.
2002ல் நான் எழுதிய “ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையை படித்து விட்டு எனக்கு ஃப்ரான்சில் இருந்து ஒரு கடிதம் ஷோபா சக்தி எழுதியிருந்தார்.
திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் ’கொரில்லா’ நாவலைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதற்காக புத்தகமெல்லாம் பேராசிரியர்களுக்கு நானே விலை கொடுத்து வாங்கி படிக்க கொடுத்தேன்.

விகடன் விழாவில் ஷோபா சக்தி என்னிடம் வந்து கேட்டார் “ சிகரெட் பிடிப்பீங்களா?”
’இல்ல. நான் சிகரெட் பிடிக்கிறதில்ல சார்’
சிகரெட் பிடிக்க கம்பெனி கிடைக்குமா என்பதற்காக என்னிடம் கேட்டிருக்கிறார்.
”உங்க அப்பா கஸ்டம்ஸ் ஆஃபிசர்?”
நான் ”ஆமா சார்”
அவர் சிகரெட் பிடிக்க கிளம்பிப் போனார்.
அப்புறம் எனக்கு தோன்றியது. ஷோபா சக்தியுடன் போயிருக்கலாம். அவரிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டேனே!
ஷோபா சக்தியின் ’விகடன் தடம்’ பேட்டி அந்த மாதத்தில் தான்.

சங்கடம்

$
0
0

இன்கம் டாக்ஸ் ரெய்டு. உறவினர் வீட்டில். ரெய்டு முடிந்தவுடன் அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன் நான் அவரை பார்க்க போயிருந்தேன்.
‘ தொர, நாலஞ்சு வருடங்களுக்கு முன் ஒரு தடவை கஸ்டம்ஸ் ரெய்டு வீட்டில் நடந்தது. அப்போ ஒன் அப்பா பெயரை சொல்லி ’அவருடைய உறவினர் தான் நான்’ என்று சொன்னேன்.
உடனே ரொம்ப மரியாதை கொடுத்து அந்த ஆஃபீசர்கள் வைர நெக்லஸ்களை கூட திருப்பி கொடுத்து விட்டு போனார்கள். அந்த மரியாத இந்த இன்கம் டாக்ஸ் ரெய்டு நடந்த போது இல்ல.’
’முன் ரூம்ல இருந்த போட்டோவின் பின் பக்கம் இருந்து பேப்பரில் சுருட்டி வைக்கப்பட்ட (லட்சக்கணக்கில்) பண பொட்டலத்தை எடுத்தார்கள். அதன் பிறகு எனக்கு இன்கம் டாக்ஸ் ஆஃபிசர்கள் மரியாதையே கொடுக்கவில்லை. அதனால் தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக வேண்டியதாகி விட்டது. நிறைய கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள்.’
அவர் என்னிடம் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய மகளும் மருமகனும் ஊரில் இருந்து வந்தார்கள்.
நேரே மருமகன் எங்களிடம் வந்து உட்கார்ந்தான்.
எடுத்த எடுப்பில் கேள்வி “ எத்தனை பேர் ரெய்டுக்கு வந்தாங்க”
என் உறவினருக்கு மருமகனால் நிம்மதி கிடையாது.
சுரத்தேயில்லாமல் அவன் மாமனார் சொன்னார்: ஏழு ஆஃபிசர்கள்.
மருமகன் : அந்த ஏழு பேர் அட்ரஸ்ஸும் இன்கம் டாக்ஸ் ஆஃபிஸில் வாங்குங்க.
மாமனார் : எதுக்கு?
மருமகன் : 'ஏழு பேர் வீட்டு விலாசம் எனக்கு வேணும். ஏழு பேரையும் நான் காலி பண்ணிடுவேன். ஏழு பேரையும் ஆளு வச்சி காலி பண்ணிடுறேன்.'
என்னை பெருமையாக ஒரு பார்வை பார்த்தான். ’தொர நம்மள கண்டு மிரண்டு, பிரமிச்சு, ஆச்சரியப்படுறாப்ல’ என்று ஒரு தோரணை.
மாமனார் விளக்கெண்ணெய் குடித்தது போல் குழம்பி, எரிச்சலை மறைத்து அவனை பார்த்தார்.
“ ஆளு வச்சி காலி பண்ணிடுவேன். உங்க பேரும் வெளிய வராது. என் பேரும் வெளிய வராது.”
அவன் மாமனார் என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வைக்கு அர்த்தம் ‘தொர, என் தலயில ஓத்த விதிய பாத்தியா’
அவன் மீண்டும் அழுத்தமாக சொன்னான் : 'பயப்படாதீங்க.. இந்த விஷயத்தில ஒங்க பேரும் வெளிய வராது. என் பேரும் வெளிய வராது. ரெய்டப்ப நான் இல்லாம போயிட்டேன். இருந்திருந்தா கிண்டி கிழங்கு எடுத்திருப்பேன்.'
என்னை மீண்டும் ரொம்ப பெருமையாக ஒரு பார்வை பார்த்தான். ‘தொர, மலச்சிப்போய்ட்டாப்ல’ன்னு அர்த்தம்.
உள்ளே கிளம்பிப்போனான். சிரம பரிகாரம் பண்ணி விட்டு மாமியாரிடமும் இந்த டயலாக்கை விட்டுக்கொண்டிருந்தான்.
அவன் மாமனார் வேதனையுடன் புலம்பினார் ‘தொர, ஒனக்காவது நான் பொன்ன கொடுத்தனா? நீயாவது என் பொண்டாட்டிக்கு ரத்த சொந்தம். இப்ப பாரு எந்த காட்டுப்பயலோ வந்து என்னை என்ன பாடு படுத்தறான் பாரு.’

..............................................

சைகல் பாடிய ’பாபுலு மோரா’

$
0
0

நவாப் வாஜித் அலி ஷா எழுதிய உருது பாட்டு ’பாபுலு மோரா’.
Baabul mora
Naihar chhuto hi jaae
Baabul mora
Naihar chhuto hi jaae
O My father! I'm leaving home.
O My father! I'm leaving home.
’அப்பா… நான் நம் வீட்டை விட்டு போகிறேன்.’ ஒரு மணப்பெண் திருமணமாகி தன் பிறந்த வீட்டை விட்டுப் பிரிந்து போகும் நிலையில் பாடுவதாக இந்த பைரவி ராக தும்ரி.
விதி செய்யும் விளைவு. வாஜித் அலி ஷா பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்டார். வெள்ளையர்கள் அவரை இருட்டு பிரியும் முன் லக்னோவை விட்டு வெளியேறி விட வேண்டும் வற்புறுத்தியுள்ள நிலையில் அப்படியே நவாப் கிளம்பிப்போகிறார். விஷயம் ஊருக்கு அதற்குள் தெரிந்து விட்டது. நல்ல இருட்டில் மக்கள் சாலையின் இரு பக்கமும் கூடி விடுகின்றனர். வாஜித் அலியின் அரண்மணை பாடகன் அவர் இயற்றிய பாடலை உரக்கப் பாடுகிறான். மக்கள் தேம்பித் தேம்பி அழுகின்றார்கள். விம்மலுடன் பாடிய பாடகனுக்கு, அந்த நிலையிலும் நவாப் ஒரு பரிசு தருகிறார். அதை ஏற்க அவன் மறுத்து விடுகிறான்.
இந்த தும்ரி பாடல் அதன் பின் எவ்வளவோ பேர் காலம் காலமாக பாடினார்கள்.
ஜம்முவில் பிறந்தவன் கே.எல்.சைகல். ரயில்வே டைம் கீப்பர், ரெமிங்க்டன் டைப்ரைட்டர் சேல்ஸ்மன், ஓட்டல் மானேஜர் என்று எவ்வளவோ வேலை பார்த்தவன்.

ஹிந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் சைகல். அப்போதெல்லாம் கல்கத்தாவில் தான் ஹிந்தி திரையுலகம் இயக்கம் கொண்டிருந்தது.
சைகல் தான் என் குரு என்று லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார் என்று பலரும் பேட்டியில் எப்போதும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முகேஷ் அப்படியே ஒரு copycat ஆக சைகலை பின்பற்றி பாடியவர்.
சைகல் பாடல்கள் அகில இந்தியாவையும் பைத்தியமாக்கியது. பாபுலு மோரா, சோ ஜா ராஜ்குமாரி, மேரே சப்னோ கி ராணி, ஏக் பங்களா பனே நியாரா, கம்தியே முஸ்த்து கில்லு கித்துனா பாடல்களை முணு முணுக்காதவர்கள் யாரும் இல்லை.
’நெஞ்சில் ஓர் ஆலயம்’ கல்யாண் குமார் கூட என்னிடம் சொன்னார். சைகல் பாடல்கள் தான் அவருக்கு பிடிக்கும். சைகல் பாடல்களை மனப்பாடமாக பாடுவார்.
பாபுலு மோரா பாடல் 1938ல் ’ஸ்ட்ரீட் சிங்கர்’ என்ற படத்தில் சைகல் பாடி மிகவும் பிரபலம்.
இந்தப் பாடல் பாடுகிற காட்சியை தத்ரூபமாக படமாக்க வேண்டும் என சைகல் ஆசைப்பட்டார். தனியாக ரிக்கார்டிங் செய்ய அவர் மனம் ஒப்பவில்லை. இயக்குனரையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பின் போது சைகல் இதை பாடிக்கொண்டே நடக்கும் போது கேமராவிற்குள் வராமல் இசைக்குழுவினர் பின்பற்றி நடந்து கொண்டே வாசித்திருக்கிறார்கள்.
நாற்பத்திரெண்டு வயதில் சைகல் அற்பாயுசில் இறந்து போனார்.
அதன் பின் இந்த பைரவி ராக பாடலை பண்டிட் பீம்ஷன் ஜோஷி, கிஷோரி அமோங்கர், ஜக்ஜித் சிங் என்று எத்தனையோ பேர் கச்சேரிகளில் பாடியிருக்கிறார்கள்.
ராஜேஷ் கன்னா, ஷர்மீளா டாகூர் நடித்த அவிஷ்கார் படத்தில் கூட இந்தப்பாடல் இடம்பெற்றிருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் தினமணி தீபாவளி மலரில் அசோகமித்திரன் ‘அகோர தபசி’ சிறுகதை எழுதியிருந்தார். காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ சிறுகதைத் தொகுப்பில் பிரசுரமாகியுள்ளது.

’ நான் அந்த மனிதனை ஒரு பஜனை மடத்தில் தான் பார்த்தேன். எல்லோரும் கிருஷ்ணா ராமா என்று பாடினால் இவன் சைகல் பாடல்களைப் பாடினான். சைகல் பாட்டு இந்தி அல்லது உருதுவில். எதைப்பற்றி கூறுவதாக இருந்தாலும் அந்த மனிதன் அப்பாட்டுக்களைப் பாடும்போது கேட்போர் மனதை அவை எங்கெங்கோ அழைத்துச் சென்றன. அதிலும் அவன் ’பாபுலு மோரா’ என்ற பாட்டைப் பாடும்போது மனம் அன்று வரை அறியாத எல்லைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்.
என் மூடிய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. எனக்கு மட்டும் என்றில்லை. வேறு பலரும் அவன் பாட்டைக் கேட்டு அவர்களையறியாது கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார்கள்.’
இந்தப் பாத்திரத்தை ’சைகல் மனிதன்’ என்றே அசோகமித்திரன் தன் சிறுகதையில் அடையாளமிடுகிறார்.
அவன் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடுகிறது.
சைகல் மனிதன் பசுபதியின் மனைவி சொல்கிறாள் ‘அவரோட கூடப்பொறந்தவா ஆறு பேர். நிறைய பணம் காசோட சௌக்கியமா வேறே வேறே இடங்கள்ளே இருக்கா. இப்போ வீட்டை வித்துப் பாகம் பிரிக்கணும்கறா. இவருக்கு இந்த வீட்டை விட்டா எங்கே போறதுன்னு கவலை.’
’அகோரத் தபசி’ கதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது. ‘ ஒரு வாரத்திற்குப் பிறகு கோட்ஸ் ரோடு சென்றேன். அந்த வீடு பூட்டுப் போட்டிருந்தது. ஒரு மாதத்திற்குப்பிறகு காலி வீட்டை யாரோ வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஏழு பேரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு விட்டார்கள் என்று ஊகித்துக்கொண்டேன்’
பசுபதியின் நிர்க்கதியான சோகம், உணர்விறுக்கம், பிரிவாற்றாமை பற்றி புரிய பாபுலு மோரா பாடல் பற்றி, பாடல் எழுதிய நவாப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். சைகல் பாடலையும் கேட்டு ரசித்திருக்க வேண்டும்.





'That Fellow' - Paternal and Filial affections

$
0
0

படித்துக்கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கன் கல்லூரியில் ”That felllow"என்ற வார்த்தை மரத்தடியில் ரொம்ப பிரபலம். ’அப்பா’ வை குறிப்பிட இப்படித்தான் எல்லோராலுமே சொல்லப்படும்.
Maternity is comfirmed and paternity is the probability.Paternity is a legal fiction.
"டேய், வீட்டுல that fellow என்ன ரொம்ப insult பண்ணுறான்.தாழன் சைஸ் சரியில்ல. வீட்டை விட்டு வெளியேறிடுவேன். ’கிளிக்கு ரெக்க மொளைச்சிடுச்சி’ன்னு அதயும் கிண்டல் பண்ணுவானேன்னு தான் பொறுமையா இருக்கேன்.”
”That Fellow ரொம்ப என் விஷயத்தில தலயிடுறான். Unnecessarily poking his nose into my affairs. ’அம்மாவோட தாழன்’றதுக்காக எவ்வளவு தான் பொறுமையா இருக்கிறது?”
“அம்மா கிட்ட சொல்லிட்டேன். That fellowவ சொல்லி வை. மரியாத கெட்டுடும்.”
“இன்னக்கி எங்க அம்மா கிட்ட “Who is that fellow? அவனுக்கும் ஒனக்கும் என்ன தொடர்பு? ஏன் எப்பவும் என்ன மொறச்சிக்கிட்டெ இருக்கான்?”ன்னு கேட்டுட்டேன்.”
“ஏம்மா ஒன் மாப்பிள்ள இப்படி என்ன சித்ரவத செய்றான்? இதெல்லாம் நல்லாயில்ல..”
" That fellowவுக்கு இன்னக்கி சரியான nose cut. ”’ஒன் வயசில ஆப்ரஹாம் லிங்கன் வேல பாத்துக்கிட்டே படிச்சான்’ன்னு சொன்னான். நான் முகத்தில அடிச்ச மாதிரி திருப்பி சொல்லிட்டேன்.’ ஓன் வயசில ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாயிட்டான் தெரியும்ல’ன்னு.”
‘ மாப்பிள்ள! எப்பவுமே என் test paper பாத்தா ஏன் தான் That fellow ரொம்ப டென்ஷன் ஆகுறான்னு தெரியலடா. “ Don't call me Daddy hereafter"னான். “ யோவ், இது Monthly test தான்.. DNA test இல்ல”ன்னு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன். வாய தெறந்து சொன்னா ’வீட்ட விட்டு வெளிய போடா’ன்னு சொல்லிட்டா நான் எங்க போவேன். நேக்கு யாரத்தெரியும். பசி பொறுக்க மாட்டேன்.”
Classic problem - too much mother, too little father.

எப்பவும் ’காண்டு’லயே இருக்கும் கவுண்டமணி
“ அடேய் தகப்பா..”

என்னோட ரெண்டு மகன்களும் வேலைக்கு போற பசங்க. அம்மா அவனுங்கள நல்லா திட்டுவா.. அவ அடிச்சா கூட சுரணையே இல்லாம பொறுத்துக்கிறானுங்க..நான் லேசா மொறச்சு பாத்தா போதும், ’உவ்வா’.... ரோஷம் பொத்துக்கும்,ரொம்பத் தான் ‘மூட் அவுட்’ ஆகிடுறானுங்க. 
..........................................




Helium balloon

$
0
0

சென்ற ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் திருச்சியில் இருந்தேன். திருச்சி NIT எஞ்ஜினியரிங் காலேஜில் நடந்த ஒரு கூத்து போட்டி நிகழ்ச்சியில் நடுவராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். 2017ம் ஆண்டு போல இந்த வருடமும் என்னை மாணவர்கள் அழைத்து இந்த கௌரவத்தை தந்திருந்தார்கள்.
இரண்டு நாட்கள் இருந்த போதும் நான் திருச்சியில் வேறு யாரையும் போய் சந்திக்கவில்லை.
ஆச்சரியம். ஒரு விசித்திரமான விஷயம். யாராயிருந்தாலும் சில இடங்களுக்கு போய் ஒரு சிலரை சந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள்.
திருச்சியில் நான் சந்திக்க பலரும் உண்டு. நேரமும் இருந்தது தான்.
ஆனால் நான் ஜங்ஷனில் இருந்து National Institute of Technology போனேன். அங்கிருந்து பின் 7ம் தேதி இரவு ஜங்ஷன் வந்து ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.
திடீரென்று இன்று தான் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது.
சென்ற நவம்பர் மாதம் என்னை இளமைக்கால சிநேகிதி ஒருவர் தேடி கண்டு பிடித்திருந்தார். இவரை 2009ல் தேட நான் ஒரு முயற்சி செய்த போது ஈடேறவில்லை.
மொபைலில் இருவரும் பேசிக்கொண்டோம்.
இரண்டு விஷயம் தெரிந்து கொண்டார்.
1.நான் வசதியாக இப்போது இல்லை
2.அவருடைய இஷ்ட தெய்வத்தை நான் வணங்குவதில்லை.

இப்போது திருச்சியில் தான் இருக்கிறார். வினோதம் என்னவென்றால் அவர் அங்கிருக்கிறார் என்கிற விஷயமே திருச்சியில் இரண்டு நாட்கள் நான் இருந்த போது என் பிரக்ஞையில் இல்லை.
People do look different when you fall out of love with them.
If you don't hold the helium balloon, it flies away into the sky.
photos

Rajanayahem's performance in Koothuppattarai on 5th May, 2018
...........................................................







Rajanayahem is a Transformative Actor

$
0
0


வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்
மூன்று வார சனிக்கிழமைகளில்
( ஏப்ரல் 28, மே 5, மே 12)
என் நடிப்பை பார்த்த

 கூத்துப்பட்டறை ’அரசன்’

மு. நடேஷ் 

என்னை பற்றி நேற்று சொன்னார்.
“ Rajanayahem is a Transformative Actor!"
A declaration, indeed.
அவருடைய பரவசத்தை முத்துசாமி சாரிடமும் மாமியிடமும் கூட உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரில் இருந்து ’இளவரசர்’ ரவி சாரின் வாழ்த்துக்களை இன்று பெற்றேன்
நன்றி நடேஷ் சார்! Thank you for your kindness.
I can hold the audience spellbound. I have the guts.

https://www.youtube.com/watch?v=dYiA2ND7vVs&t=48s




............................................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html


Convictions are more dangerous foes of truth than lies - Nietzsche

பாலகுமார நினைவுகள்

$
0
0

பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரைகள், என்றும் அன்புடன், கரையோர முதலைகள் நாவல்கள் படித்தேன். 
கல்யாண முருங்கை குறு நாவல் ஒன்று ’மணியன்’ மாத நாவலாக வந்ததை வாசித்திருக்கிறேன். 
அந்த பிரபலமான ’சின்ன சின்ன வட்டங்கள்’ சிறு கதை தொகுப்பு கூட.
அப்புறம் பாலகுமாரனை திரும்பிக்கூட பார்த்ததில்லை.
ஒரு கவிதை இரும்புக்குதிரைகள் நாவலில் படித்தது இன்னும் மறக்கவில்லை.
”சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத் தெரியா குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையை
கல்லென்று நினைக்க வேண்டாம்.”
இன்னும் கூட ஒன்றிரண்டு பாலகுமாரனின் நாவல்களில் படித்தது.
”இந்த உலகத்தில் எதுவுமே சரியில்லை என்று நினைப்பவர்கள் எல்லாம் பாரதியை நினைத்தால் அழத்தான் முடியும்.”
“ நெஞ்சோடு ஒட்டி தேறுதல் சொல்லும் சினேகம் எவருக்குமே வாய்ப்பதில்லை.”
அசல் அதே வார்த்தைகள் அல்ல. என் நினைவில் நிற்பதில் இருந்து உருவி எழுதுகிறேன்.
தி.ஜா இவருக்கு எழுதிய கடிதம் ஒன்று. மறக்க முடியாத கடிதம்.
பாலகுமாரன் சில பரிசு பொருள்கள் தி.ஜாவுக்கு கொடுத்த போது எப்படி இதற்கு react செய்வது என்று தெரியாமல் placid ஆக தான் இருந்தது பற்றி, இதுவே பி.எஸ்.ராமையா என்றால் எவ்வளவு உற்சாகமாய் எதிர்வினையாற்றியிருப்பார் என்றெல்லாம் அந்த கடிதத்தில் ஜானகிராமன் எழுதியிருந்தார். 
ஏதோ ஒரு பத்திரிக்கையில் பாலகுமாரன் அந்த கடிதத்தை பிரசுரம் செய்திட வைத்திருந்தார்.
தி.ஜா இறந்த அன்று ஸ்கூட்டரில் உடனே திருவான்மியூர் வீட்டுக்கு சென்று தேம்பி அழுத பாலகுமாரன்,
ஒரு நாவலை ஜானகிராமனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் - “ எழுத்துலக பிதாமகன், என்னைப் போன்ற எத்தனையோ ஏகலைவர்களுக்கு மௌன உபாத்யாயர் தி.ஜானகிராமன்.”
இதனை நான் தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்ட போது சேர்த்திருந்தேன்.
திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அஞ்சலி கூட்டத்தில் என் பெயரை ஒருவரிடம் நான் சொல்ல வேண்டியிருந்த போது உடனே பாலகுமாரன் என்னை கூர்ந்து பார்த்தார். 

 மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏறிய போது நான் அவர் கை பிடித்து மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

...............................................................

Filial Obligation

$
0
0

சி.ஆர். ராஜம்மா தமிழ் பெண் எழுத்தாளர். சொல்லொனாத் துயரம் அனுபவித்தவர்.
ரொம்ப காலம் முன்னாலேயே மறைந்து விட்டார்.
ஒரு கண் பார்வை இல்லாமல் இருந்தவர். பூ விழுந்த கண். அந்த கண் கொஞ்சம் வெளியே துருத்திக்கொண்டிருந்திருக்கிறது.

அவர் அனுபவித்த பெருந்துயரங்களில் ஒரு சிறு துளி இங்கே:
சி.ஆர்.ராஜம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது பக்கத்தில் படுத்து இருந்த அவருடைய கைக்குழந்தை உறக்கம் தொலைத்து விளையாண்டு கொண்டிருந்திருக்கிறது. அம்மாவின் கண் அந்த தூக்கத்திலும் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதை உற்று கவனித்த குழந்தை அந்த கண்ணை பிடித்து இழுத்து விட்டது.. பூ விழுந்த கண் வெளியே வந்து விட்டது.

அதிர்ந்து விழித்த சி.ஆர்.ராஜம்மா எப்படி துடித்து தவித்திருப்பார்.

’எனக்கொரு குழந்தை’ என்று இவர் நூலொன்றின் தலைப்பு.


மூணு எளனி

$
0
0

இவ்வளவு காலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்தேன். 2005 மாடல். 2010ல் திருப்பூரில் ஹோண்டா ஆக்டிவா ஷோரூமிலேயே எஞ்சினை மாற்ற வேண்டும் என்று மிரட்டினான். நான் ஸ்கூட்டரை அங்கிருந்து எடுத்து வந்து விட்டேன்.
மெக்கானிக் யாராவது எஞ்சின் என்று ஆரம்பித்தாலே மெக்கானிக்கை மாற்றி விடுவேன். சென்னை வந்து 32 மாதங்களிலும் இப்படித் தான்.
இப்போது 2005 மாடல் என்றாலே மெக்கானிக் எவ்வளவு அடிக்க முடியும் என்று தான் பார்க்கிறான்கள்.
சமீபத்தில் ஒரு ஐயாயிரம் வரை செலவழித்தும் ஸ்கூட்டர் ஆஃபிஸ் போகும் போதும் சரி வரும்போதும் ஐந்து முறை நின்று விடும்.
ஹோண்டா ஆக்டிவா மக்கர் செய்தால் எருமை மாடே தான். தள்ளி முடியாதே.
மெக்கானிக் ஒவ்வொருத்தனும் எஞ்சின் வேலைக்கு வாய்க்கு வந்த பெருந்தொகையை சொல்ல ஆரம்பிக்கவே என் வாழ்வு முறையை மாற்றிக்கொண்டேன்.
ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி விட்டேன். 13 வருட ஸ்கூட்டர் வாழ்க்கைக்கு இப்போதைக்கு முற்றுப் புள்ளி.
ஆலப்பாக்கத்திலிருந்து வளசரவாக்கத்திற்கு மினி பஸ். வளசரவாக்கத்திலிருந்து விருகம்பாக்கத்திற்கு ஷேர் ஆட்டோ. அப்புறம் காளியம்மன் கோவில் மார்க்கெட் வரை நடந்து அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ. ஸ்ரீ ஐயப்ப நகரில் இறங்கி ஒரு நடை நடந்து ஆஃபிஸ்.
இதே மாதிரியான சுழற்சி தான் வீட்டுக்கு போகும்போதும். சமயங்களில் ஆற்காடு ரோட்டில் இறங்கி ஆலப்பாக்கத்திற்கு முக்கால் கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

கடந்த ஐம்பது நாட்களாக இப்படித்தான்.
பொதுவாக டூவீலர் பயன்படுத்தியவர்கள் இப்படி பஸ்சிலும் ஷேர் ஆட்டோவிலும் போக நேர்ந்தால் மிகவும் கஷ்டமாகத் தான் நினைப்பார்கள். மிகப்பெரிய அசௌகரியம் என்று உணர்வார்கள்.
எனக்கு இந்த மாற்றம் மிகுந்த பரவசத்தைத் தான் தருகிறது. கௌரவ பங்கம் ஏதுமில்லை. எந்த ஸ்தான சலனமும் என்னை ஒரு புதிய உலகத்தைக் காட்டி பிரமிக்கச் செய்கிறது. ரொம்ப உற்சாகமாக இந்த மாற்றத்தை ரசிக்கிறேன். I always accept my life unconditionally.
இழப்புகள், சரிவுகள், தாளமுடியாத துயரங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியாகவே எனக்கு தெரிய வந்திருக்கிறது.
மினி பஸ், சிட்டி பஸ், ஷேர் ஆட்டோ என்று ஸ்ரீ ஐயப்ப நகர் ஸ்டாப்பில் இறங்கியவுடன் இளநீர் ஒரு வண்டியில். இளனிக்கார ஆளை காணவில்லை. பார்வையை ஓட்டுகிறேன். பக்கத்தில் ஆட்டோக்காரர் சவாரி ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர் எழுந்து வந்தார்.
“சார்,அவன் டீ சாப்பிட போயிருக்கிறான்.”
சரி, வெய்ட் பண்றேன்.
ம்ஹும். ஆளக்காணோம்.
என்னை விட அந்த ஆட்டோக்காரர் ரெஸ்ட்லெஸ் ஆகி விட்டார்.
“இருங்க சார், நான் போய் கூட்டி வர்றேன்.”
இருபது கடை தாண்டி இருக்கும் ஐயப்பநகர் மெயின்ரோட்டு முனையில் இருக்கும் டீக்கடைக்கு ஓடுகிறார்.
அவரையும் கொஞ்ச நேரம் காணோம். சரி வேண்டாம்னு எனக்கு கிளம்ப மனசில்லை. எனக்காகவும் இளனிக்காரருக்காகவும் இப்படி சம்பந்தமேயில்லாத ஆட்டோக்காரர் மெனக்கெடும்போது நான் பொறுமை காப்பது தான் நியாயம்.
ஷேர் ஆட்டோக்களும், மினி பஸ்ஸும், சிட்டி பஸ்களும், ஃபாஸ்ட்ராக், ஓலா, உபர் கால்டாக்ஸிகளும் இருக்கும் ஊரில் ஒரு ஆட்டோக்காரரின் தொழில் தான் எத்தனை போராட்டமானது?
கொஞ்ச நேரத்தில் ஆட்டோக்காரர் ஓடி வருவது தெரிந்தது. வரும்போதே என்னைப் பார்த்து கை காட்டிக்கொண்டே தான் வந்தார்.
“சார், டீ குடிச்சிட்டு இருக்கான். நான் சொல்லிட்டேன். இப்ப வந்துடுவான். போயிடாதீங்க”
“ அதெப்படிங்க நான் போக முடியும். நீங்க இப்படி எனக்கு ஒரு எளனி குடிக்க, அந்தாளுக்கு ஒரு எளனி விக்க வேண்டி சிரமப்படுகிற போது எனக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலே.”
கொஞ்ச நேரம் கழித்து எளனி வண்டிக்காரர் ஓடி வந்தார். வரும்போதே இங்கே ஆட்டோக்காரர் ‘எளனி குடிக்க ஆள் இன்னமும் நிக்கிறார்’ என்று கையால் சிக்னல் செய்தார்.
நான் சொன்னேன் “ ஆட்டோக்காரர் பாரு, எவ்வளவு நல்ல மனசு. ஒன் வியாபாரத்துக்கு எவ்வளவு மெனக்கிடுறார்.”
பரிதாபமான பஞ்ச தோற்றத்தில் எளனிக்காரர். காலை சாப்பாடே அந்த டீயாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்.
”ஆட்டோக்காரருக்கும் ஒரு எளனி கொடு. நான் காசு கொடுத்திடுறேன்.”
ஆட்டோக்காரர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார். நான் ஆட்டோக்காரரும் குடிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து எளனி வாங்கிக்கொடுத்தேன்.
“ ஒரு எளனிக்கு ஒனக்கு என்ன கிடைக்கும்?”
“ நாலு ரூபா சார். ஓனருக்கு ஒரு எளனிக்கு ஐந்து ரூபா”
நான் ரெண்டு எளனி காசை கொடுத்து விட்டு இன்னொரு நாலு ரூபா சேர்த்துக்கொடுத்தேன்.
’எதுக்கு சார்?’
”ஒனக்கு மூணு எளனி வித்த லாபம் கிடைச்சதா இருக்கட்டும்.”

……………………………………….

R.P.ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை. (ஒரு பகுதி)

R.P.ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை ( பகுதி 2)

R.P.ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை ( பகுதி 2)

Na.Muthuswamy’s Play “Appaavum Pillaiyum”

$
0
0

Na. Muthuswamy’s play “Appaavum Pillaiyum” won't make you snore. I promise. Though it’s an absurd play , it has the pleasure of text. A very interesting play to be staged.
“ Theatre of absurd has a sense of metaphysical anguish towards the absurdity of the human condition.People should learn to appreciate such productions.”
- Martin Esslin
Martin Esslin coined the term “Theatre of Absurd” in the year 1962 and Na.Muthuswamy has written his first absurd play (kaalam kaalamaaga) in the year 1968.
Muthuswamy is an avant – garde playwright in Tamil.
“Appavum Pillaiyum” means Father and Son. This play offers a tragicomic outlook on human existence. Muthuswamy has achieved a theoretical impossibility in this play in which three Ramaswamys are conversing among themselves.

Author Muthuswamy has lost his father at the age of seven. He frets a lot about his father’s death. If his father had lived for some more years, his childhood and youth life would have been brightened. This is the basic sorrow of the protagonist in Appavum pillaiyum.
It’s a struggling life. Ramaswamy has to achieve and win in his challenging life.
The story travels in this chennai and Punjai village. There is a quantum jump and sudden significant change.
Ramaswamy explains happenings in the road when he goes to meet his friend.
His detailed reminiscence of childhood and father is beautifully described by Author.
There are other dreamy characters like Amma, Periyappa, Rasavayyar, Pavadai, Ponnuswamy, Vairakkannu, journalist and an unseen friend.
Author of this play is a renowned , significant short story writer also. His revelation has promted him to change direction to work as a playwright. We can witness the elements of a classic short story also in Appavum Pillaiyum.
Author has successfully utilised the stream of consciousness throughout the play.
Every theatre person and book reader in Tamil world has a great admiration for Muthuswamy’s work. That is what it is. It has epic, heroic.. What he has achieved.
This play is a nightmare from which Author Muthuswamy is trying to awake.
……………………………………………………

Anger and Displeasure - Bawdy incidents

Viewing all 1853 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>