Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all 1852 articles
Browse latest View live

R.P.Rajanayahem's performance in Koothuppattarai 05.05.2018


Conscious Police firing and Deliberate Brutal Killing

$
0
0
Anti - Sterlite Protest
 Conscious Police firing and Deliberate Brutal Killing

We have an awful time to be alive.
Proud people breed sad sorrows.

சோரம் செய்திடாமே, தீமை செய்திடாமே ஊரையாளும் முறைமை ஓர் புரத்தும் இல்லை என்ற எட்டயபுரத்தானின் கொந்தளிப்பின் சாசுவதம்.

சால்சா மணி - அனு கல்பனா- ஜானி

$
0
0

டான்ஸர் சால்சா மணி 2009ல் விஜய் டிவி பிரபலம். இவர் மனைவி ஷீலாவுடன் இணைந்த ஜீதமிழ் சானலில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி சாகச நிகழ்ச்சி ஞாபகமிருக்கலாம்.

ஷீலா சில நாட்கள் கூத்துப்பட்டறையில் பயிற்சிகளில் கலந்து கொண்டதுண்டு.
இப்போது சால்சா மணி என்ற மணிகண்டன் சசிதரன் கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகர்களுக்கு டான்ஸ் க்ளாஸ் எடுக்கிறார்.
சினிமாவில் மாஸ்டர். அவர் choreography செய்திருக்கிற பாடல்களை பார்த்தேன்.
உங்களுக்கு பிடித்த ஆதர்ஸமான டான்ஸர்ஸ் ஆண் பெண் இருவரிலும் யார் யார்? என்று கேட்டேன்.

ஆச்சரியமான பதில் சொன்னார். ஏனென்றால் இப்படி கேட்டால் கமல்ஹாசன், பிரபுதேவா என்பதாக அல்லது மைக்கல் ஜாக்ஸன் தான் என பதில் சொல்லும் டான்ஸர்கள் தான் உண்டு.
சால்சா மணி அபூர்வமான பதில் சொன்னார். A magnanimous person!
”ஆண்களில் ஜானி மாஸ்டர். Johnny became a Choreographer in the cinefield. பெண்களில் அனு கல்பனா. சினிமாவில் க்ரூப் டான்ஸர். இவர் டான்ஸ் மாஸ்டர் ஆகவேயில்லை.”
ஜானி, அனு கல்பனா இருவருமே unsung and unhonoured.
வித்வத் வேறு, ப்ராபல்யம் வேறு.
ஜானி ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடலில் அஜீத்துடன் க்ரூப் டான்ஸர் ஆக ஆடுவதை யூட்யுப்பில் சுட்டிக்காட்டினார். உண்மை. பிரமாதமான மூவ்மெண்ட்ஸ்.
பிரபுதேவாவுடன் ஆடும் க்ரூப்டான்ஸராக அனு கல்பனாவை அடையாளம் காட்டினார். என்ன ஒரு க்ரேஸ். என்ன ஒரு துடிப்பு. என்ன ஒரு வேகம்.

நடனத்தில் அபூர்வ திறமையுள்ள இவர்கள் இருவரும் டான்ஸ் மாஸ்டர்களாக பேரும் புகழும் பெற வேண்டும்.

சால்சா மணியும்  தனக்கான இடத்தை அடைவார். His whole future is before him. He will see greater things in life.
………………………………….
புகைப்படங்களில் சால்சா மணியுடன் ராஜநாயஹம்


https://rprajanayahem.blogspot.in/2018/02/blog-post_27.html

Dirty little secrets

$
0
0

ஒரு நாள்
ஆலப்பாக்கத்தில் இருந்து மினி பஸ். வளசரவாக்கத்தில் இறங்கியவுடன் விருகம்பாக்கத்திற்கு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். சில சமயங்களில் ஷேர் ஆட்டோவிலும் போவதுண்டு.
விருகம்பாக்கம் போகும்போது பின்னாலிருந்து மொபைல் பேச்சு சற்று சத்தமாக வந்தது.
“இங்கே பார், நான் கேட்டது என்ன? நீ ஏன் என்னன்னமோ பேசுற.”
“ சரி… நீ சொல்ல வேண்டியத சொல்லு. எவ்வளவு நேரமோ நீ பேசி முடி.”
சில நிமிடங்கள் கழித்து “ முடிச்சிட்டியா.. இப்ப ஏன் ஒன் புருஷன பத்தி எங்கிட்ட பேசற… நான் கேட்டது என்ன… என் குழந்தைக்கு பிறந்த நாள். என் பொண்டாட்டி கொண்டாடனும்னு உயிர எடுக்குறா…ஒரு ஐயாயிரம் ரூபா ஒங்கிட்ட கேக்கறேன்… அதுக்கு ஏன் என்னன்னமோ சொல்ற..”
Extraordinary love. A fiery affair. Pure selfishness.
“ நான் என் பொண்டாட்டி பத்தி பேசுறனா.. குத்தி காமிக்கிற.. நீ ஒன் புருஷன பத்தி தேவையில்லாம என்கிட்ட பேசுற.. அத கேட்டது தப்பா? இந்தா பார் என் கொழந்த பொறந்த நாள கொண்டாட ஐயாயிரம் ரூபா கேட்டேன். அதுக்கு பதில் சொல்லு..”
Dirty little secrets always comes out.
“ என் கொழந்த பொறந்த நாள் கொண்டாட ஐயாயிரம் கேட்டேன். அதுக்கு பதில சொல்லு நீ..” பின்னால் உள்ள முப்பத்தைந்து வயது மதிக்க நபரின் குரல் மிகவும் உயர்கிறது.
அந்தப்பக்கம் பெண் கட் செய்து விட்டாள் போல தெரிந்தது. Not responding is a response. Silence is just another word for pain.
They both will always be unfinished business.

……….



இன்னொரு நாள்
வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்கிறேன்.
நொங்கு வெட்டிக்கொண்டிருப்பதை பார்த்து மூன்று நொங்கு இருபது ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுகிறேன். வெய்யில் உக்கிரம் தாள முடியவில்லை.
வளசரவாக்கத்தில் இறங்கியவுடன் ஷேர் ஆட்டோவில் ஏறுகிறேன். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் மார்க்கெட் முனையில் இறங்க வேண்டும்.
நீல்கிரிஸ் அருகில் ஒருவர் ஏறுகிறார்.
பொதுவாக எனக்கும் ஆட்டோக்காரருக்கும் கேட்கிறார் போல் “வளசரவாக்கம் தாஸ்மாக் மூடிட்டாங்க.. சாலி கிராமம் போக வேண்டியிருக்கு….என்ன செய்ய..”
இந்த பிரயாணமே அவருக்கு தேவையில்லை. நிர்ப்பந்தம்.
நான் அவரிடம் “நான் இப்ப மூனு நொங்கு சாப்பிட்டிருக்கேன். வெய்யில் தாங்க முடியாம வேர்த்து ஊத்துது. இந்த வெய்யில்ல சரக்கு நீங்க சாப்பிடனுமா?”
குடிமகன் பதில் : சார்.. நான் எப்பவாவது மாசத்திற்கு ஒரு தடவ தான் குடிப்பேன்.
“ நான் இப்படி வெய்யில்ல நீங்க தாஸ்மாக் போறீங்கன்னவுடனே Day Drunkardனு நெனச்சேன். எப்பவாவது குடிக்கிறதுன்னா நீங்க வெய்யில் எறங்குன பிறகு சாயந்திரம் ஆறு மணிக்கு சாவகாசமா போய் சௌகரியமா சந்தோஷமா குடிக்க வேண்டியது தான? ஏன் இப்படி இந்த வெய்யில்ல குடிச்சி சிரமப்படனும். குடிக்கிறத கொண்டாட்டமா சுகமா சாயந்திரமே செய்யலாமே.”
அவர் பதில் சொல்லாமல் என்னைப் பார்த்து சினேகமாக சிரித்தார்.
“குடிக்கனும்னு நெனப்பு வந்துட்டா தள்ளிப்போட முடியாது?”ன்னு கேட்டதற்கும் அப்பாவிச் சிரிப்பு. Silence is just another word for pain. Not responding is a response.
காளியம்மன் கோவில் மார்க்கெட் முனையில் நான் இறங்கும்போது அவர் “ போய்ட்டு வாங்க சார்” என்றார். கொஞ்சம் அர்த்த சாரமாக, இணக்கமாக நான் பேசியதற்கு அவருடைய நல்லெண்ண சமிக்ஞை.
An aged drunkard becomes a second time a child.
அவர் Day Drunkard தான். என்ன செய்ய? Dirty little secret.
…………………………………

போர்ஹே சிறுகதை ‘கடவுள் எழுதியது’

$
0
0

The writing of the God என்று ஒரு சிறுகதை. போர்ஹே எழுதியது. ‘கடவுள் எழுதியது.’
ஷினாக்கான் என்பவன் ஒரு பிரமிடின் பூசாரி. அந்த பிரமிடு கொளுத்தி எரிக்கப்படுகிறது. தீக்கிரையாக்கிய பெட்ரோ டி அல்வரடோ இந்த ஷினாக்கானை சித்திரவதைக்குள்ளாக்குகிறான். சிறையில் இவனை அடைத்து பக்கத்து செல்லில் ஒரு சிறுத்தையை அடைக்கிறான்.
ஷினாக்கான் மந்திரவாதியாக இருந்த கியாஹோலம் பிரமிடில் கல்வெட்டு எழுத்துக்களை எவ்வளவு முறை பார்த்திருக்கிறான்.
எழுதப்படுவது எல்லாம் புரியவா செய்கிறது? வாசிப்பின் தேடல்.

Paradise will be a kind of library என்று போர்ஹே சொல்வார்.

அபூர்வமான தரிசன வரி – ’காலத்தின் முதல் விடியற்காலை’யை எண்ணிப்பார்ப்பது.

கனவில் தோன்றும் ஒரு மணல் துகள் இரண்டு துகளாகி பெருகி பெருகி சிறையறை முழுவதும் நிரம்பி ஷினாக்கானை மூழ்கடித்து இவன் இறந்து விட்டதாக நினைக்கும்படியாவது, ’தண்ணீராலும் நெருப்பாலும் ஆன சக்கரம்’.
சிறை அறை – இறைச்சியும் தண்ணீர்க் குவளைகளும் கீழிறக்கப்படும் போது கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற அந்த சில துளி நேரத்தில் சிறுத்தைப்புலியின் மஞ்சள் தோலின் மீதுள்ள கருநிற பட்டை வரிகளில் கடவுளின் வாக்கியத்தை தேடும் ஷீனாக்கான்.
The God's Script! முழுமையான வளம் கொண்ட மந்திரம் கடவுளால் எழுதப்பட்டதை புரிந்து கொள்ள தவிக்கும் ஷீனாக்கான்.
அச்சொற்களை அறிந்து கொண்டதாகவே முடிவில் நினைக்கும் ஷீனாக்கான் ஒருபோதும் அதை உச்சரிக்கக்கூடாதென்றே முடிவெடுக்கிறான். சிறுத்தைப்புலி மீது எழுதப்பட்டுள்ள கடவுளின் வாக்கியத்தின் அர்த்தம் தன்னுடனேயே செத்துப்போகட்டும் என்று தீர்மானிக்கிறான்.
மாயர்களின் புராணீகத்தை பேசும் மயன் புனித நூல் Mayan book of the Dawn of life பற்றி இக்கதையில் 'மக்கள் புத்தகம்'என போர்ஹே குறிப்பிடுகிறார்.
....................................................................







கும்பல்ல கோவிந்தா

$
0
0

அரசியல் நடப்புகள் பற்றி முடிந்தவரை பல்லை கடித்துக்கொண்டு இது பற்றி விரிவாக எழுதக்கூடாது என்று தவிர்ப்பவன் நான். கோரஸ் பாடக்கூடாது என்கிற உறுதி.
ரஜினி தூத்துக்குடி விவகாரம் ’தூத்தூ’ என்கிற அளவில் இறங்கியதைப்பார்த்த போது எழுதத் தான் வேண்டியிருக்கிறது. இந்த இணைய கோரஸில் நானும் இணையத்தான் வேண்டியிருக்கிறது. கும்பல்ல கோவிந்தா? என் சத்தம் யாருக்கு கேட்கப்போகிறது?
ரஜினிக்கு தர்ம அடி நானும் தான் கொடுக்க வேண்டியிருக்கோ?
துப்பாக்கி சூடு போது ரஜினி எல்லோரும் போலத் தான் கோரஸ் பாடினார்.
தூத்துக்குடி போய் அங்கே 13 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம், காயம்பட்டவர்களுக்கு பத்தாயிரம் கொடுத்து விட்டு அவர் பின்னர் பேசியிருப்பது பற்றி ஒரே வார்த்தை. நாராசம்.
கிட்டத்தட்ட முதல்வர் ஆகி விட்ட பிரமையில் தான் ரஜினியின் விமான நிலைய பேட்டி. தன்னை இப்போதே முதல் அமைச்சராக பாவித்துக்கொண்டு தான் இப்படி பேசியிருக்கிறார்.
அவருக்கு போலீஸை அடிப்பது பற்றி ஒரு கடுங்கோபம் இருக்கிறது. அதை முன்னர் போலவே இப்போதும் வெளிப்படுத்தியுள்ளார்.

Every hero becomes a bore atlast.
அதனால தான் ஒர்த்தன் “ நீங்க யாரு”ன்னு தூத்துக்குடியில கேட்டிருக்கான்.
சினிமாவில என்னமா வீர வசனம். கோடிக்கணக்கில சம்பளம் வாங்கிக்கிட்டு
“ நாங்க ஏழைங்க நினைச்சா…”ன்னு விரல உயர்த்துவாரு.
சினிமாவில இன்னைக்கி “காலா” வரை போராட்ட வசனம் பேசுறாரு.. நிஜமான தார்மீக கோப போராட்டங்கள் தமிழகத்தை சுடுகாடாக்கி விடுமாம். Double standard. Split personalitiy.
ஊடுறுவிய சமூக விரோதிகள் யாரென்று தெரியுமாம்.
சமூக போராளிகளை சமூக விரோதிகள் என்று சொல்வது அதிகார வர்க்கத்தின் cliché.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒரு சமூக விரோதியையாவது காட்ட முடியுமா?
’வன்முறை’க்கு எதிராக பேசுவது எவ்வளவு சுலபமான விஷயமாகி விட்டது. Rajini’s so called Non-violence itself is a cruel violence.
கொக்குக்கு ஒரு புத்தி. ஒற்றை பரிமாண வியாக்யானம்.
அதிகார வர்க்கத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார். தன்னை அதிகார வர்க்க ’சக்தி’யாகவே கூட பாவிக்கிறார்.
பத்திரிக்கையாளர்களை விஜயகாந்த் ’த்தூ’ என்று காறித்துப்பியதற்கும், எஸ்.வி.சேகர் களங்கப்படுத்தியதற்கும், இப்போது ரஜினி பத்திரிக்கையாளர்கள் மீது காட்டியிருக்கிற துவேசம், அலட்சிய பார்வை, திமிரான கடுங்கோப உடல் மொழிக்கும் வித்தியாசமே கிடையாது.
பத்திரிக்கையாளர்கள் முதுகில் அவர் பிரம்பாலடித்தது, தூத்துக்குடியில் நூறு நாட்கள் போராடிய குடும்பங்கள் மீதும் விழுந்த அடி. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் முதுகிலும் விழுந்துள்ள அடி.
அவர் ரொம்ப தீர்மானமாக தெரிவித்துள்ள கருத்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆதரவான கார்ப்பரேட் காவியம்.
’பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இயங்கப்போகிறேன் நான்’ என்ற திட்டவட்டம்.
உறுதியாக பாரதிய ஜனதாவின் தயவில் நான் முதல்வராகப்போகிறேன் என்ற ஆணித்தரம்.
No doubt, Rajini is ’The Apple’ of Bharathiya Janatha’s ’Eye’!

.............

தீமை செய்திடாமே சோரம் செய்திடாமே ஊரை ஆளவே முடியாதா?
செம்மைதீர் அரசியல் அநீதி!
Power mongers campaign in Fair Poetry and govern in Foul Language.
பதின்மூன்று மனித உயிர்களை காக்காய் சுடுவது போல சுட்டுக்கொன்ற அநியாயம். பாவிகளா.
இப்படி காக்காயை துச்சமாக எழுதக்கூட குற்ற உணர்வாய் இருக்கிறது.
”மனிதாபிமானத்தை விட ’சர்வ ஜீவ தயை’ மேலானது” என்பாரே தி.ஜானகிராமன்.
..........................

R.P.Rajanayahem's performance in Koothuppattarai on 02.06.2018

R.P.Rajanayahem's performance 02.06.2018

$
0
0


மழை நின்று கொஞ்ச நேரத்தில் மின்சாரத்தடை. மொபைல் போன்களின் ஒளியில் தொய்வின்றி தொடர்ந்த நிகழ்த்துக்கலை
( பகுதி இரண்டு)

தகவல் பிழை

$
0
0

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் லட்சுமி நாராயணன். நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்காரர் வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்.
இவருடைய மனைவி (பெயர் ஜெயலட்சுமி என்று நினைவு.) குற்றாலம் பராசக்தி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மகளிர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.
லட்சுமி நாராயணன் தென்காசியில் சொந்த வீட்டுக்காரர். அவ்வப்போது தென்காசிக்கு ஒரு சில நாட்கள் செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் யூ.கே.ஜி படித்துக்கொண்டிருந்த என் இளைய மகன் அஷ்வத் தான் மாமியோடு கூட துணைக்கு படுத்துக்கொள்வான். சுட்டிப்பயல். ஒரு சில நாட்களில் பெட்டிலயே ஒன் டாய்லட் போய் விடுவான். ஆனால் மாமி அதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வார்.
லட்சுமி நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் போது கூட அவரிடம் அஷ்வத் “ நீங்க எப்ப ஊருக்கு போவீங்க. நீங்க ஊருக்கு போங்க. நான் மாமியோடு படுத்துக்கிறேன். நீங்க ஊருக்கு போங்க.. நான் மாமியோடு படுத்துக்கிறேன்.” என்று அனர்த்துவான். “டேய், என்ன இங்க இருக்க விட மாட்டியா..என்னடா என் பொண்டாட்டி கூட படுத்துக்கிறேன்னு ஏங்கிட்டவே சொல்றே… சரி… நான் போகும்போது சொல்றண்டா..” என்று ஜாலியாக அவர் பதில் சொல்வார்.
எங்கள் வீட்டிலும் அவர் வீட்டிலும் சீனியம்மா என்ற அருந்ததியப் பெண் வேலை பார்த்தாள். வீட்டு வேலை பார்க்கும்போது அவளுடைய குழந்தையை தூங்க வைப்பது, கவனித்துக்கொள்வது எல்லாம் லட்சுமி நாராயண அய்யங்கார் தான். சீனியம்மாவின் குழந்தையை சீராட்டுவார்.
என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா, மணோன்மணியம் சுந்தரனார் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஆகியோருடைய வகுப்புத்தோழராக லட்சுமி நாராயணன் தன்னைப் பற்றி சொல்வார். க.ப.அறவாணன் இவருடைய பெயரை தூய தமிழில் மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவாராம். இவர் மறுத்து விட்டாராம். அப்போது பாப்பையா தன் பெயரை ‘வளவன்’ என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டிருந்தாராம்.
என்னிடம் பேசும்போது அடிக்கடி ஒரு விஷயம் குறிப்பிட்டதுண்டு. ‘ஜெமினி கணேசன் மனைவியும் லா.ச.ராமாமிருதம் மனைவியும் கஸின்ஸ். ஜெமினி பற்றி லா.ச.ரா ‘ நான் கேரக்டர் இல்லாத மனிதனை மதிப்பில்லை’ என்று சொல்வார்.
இதனை என் பதிவுகளில் லட்சுமி நாராயணன் சொன்னதாகவே நான் எழுதியிருந்தேன்.

இப்போது ஜெமினி மனைவி பாப்ஜியும் லா.ச.ரா மனைவியும் உறவினர்கள் அல்ல என்று எனக்கு தெரிய வந்தது. உடனே அதை என் பதிவில் இருந்து நீக்கி விட்டேன். என் பதிவுகளில் தகவல் பிழை இருப்பது உறுதியாக தெரிந்தால் நான் எப்போதும் அதை திருத்திக்கொள்வேன்.
முன்பு எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய உறவினன் ஒருவன் 2002ல் என்னிடம் அவருக்கு 80 வயது என்று சொன்னான். என்னால் நம்ப முடியவே இல்லை. ஆனால் அவன் எஸ்.எஸ்.ஆர் வயது எண்பது தான் என அடித்து சொன்னான்.

2008ல், 2013ல் என் பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆனால் பின்னர் அவன் சொன்னது உண்மையல்ல என்பது உறுதியாக தெரிய வந்தது. உடனே அதனை என் பதிவுகளிலிருந்து நீக்கியிருக்கிறேன்.
எஸ்.எஸ்.ஆர் இறந்த போது நான் தான் ’இந்தியா டுடே’யில் இரங்கல் எழுதியிருந்தேன்.
அது எப்படி லட்சுமி நாராயணன் என்னிடம் இப்படி இல்லாத ஒரு விஷயத்தை பேசியிருக்க முடியும். அப்படியென்றால் லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

தென்காசியில் லா.ச.ரா வங்கி ஒன்றில் பணி புரிந்த போது தான் லட்சுமி நாராயணன் அடிக்கடி சந்தித்திருக்கிறார். இன்னொன்றும் தோன்றுகிறது. லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லவில்லை என்றால் லா.ச.ரா ஏன் அப்படி அவரிடம் பொய் சொல்ல வேண்டும். குழப்பமாயிருக்கிறது. இருவரும் இப்போது உயிருடன் இல்லை. ஜெமினி கணேசனும் தான் இல்லை. அவருடைய முதல் மனைவி பாப்ஜியும் தான்.
லட்சுமி நாராயணன் சொன்ன மற்றொரு விஷயம் பற்றி என் “ உண்டிங்கு ஜாதி எனில்” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனால் அதனை ஒரு எள்ளலோடு வேடிக்கையாக தாமரை இலை தண்ணீராக அந்த விஷயத்தில் ஒட்டாமல் எழுதியிருந்தேன்.
ஏனென்றால் நம்மாழ்வார் காலத்தில் அவர் ஜாதி பற்றி இப்படி உறுதிப்படுத்துவதெல்லாம் அபத்தம்.
எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்கு அருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என் தாத்தா செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக நம்மாழ்வார் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ? என்றெல்லாம் புல்லரித்து, செடியரித்து, மரமரித்து……
………………………………………………………….



.

பாட்டுல டயலாக்

$
0
0

நல்ல போதையில் ஒருவர். பொது இடம். ஒரு பாடல் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
’ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ஆடிப்பாடுங்கள் இன்றாவது’
பாடலை போதைக்காரர் காது கொடுத்து நன்கு கவனித்து கேட்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த மாதிரி ஆட்கள் எப்படியும் எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் react செய்வார்கள். நான் நின்று அவர் கவனிக்காத வகையில் அவரை கவனிக்க ஆரம்பித்தேன்.
பாடலின் ஒவ்வொரு சரண முடிவில் எஸ்.பி.பி தத்துவமாக டயலாக் சொல்கிறார். ரொம்ப நெனப்போடு அந்த டயலாக்குகள்.
’நாம் பிறந்த மண்’ படத்தில் கமல் கூட ரொம்ப ஓவர் நெனப்போடு தான் பாடலின் டயலாக்குகளுக்கு நடித்திருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.
’கட்டிடம் ஜொலிக்கிறது..அஸ்திவாரம் அழுகிறது.’
’இன்பங்கள் தூங்குவதில்லை.. துன்பங்களும் அப்படித்தான்’
அப்படி இரு சரண முடிவில் டயலாக் வரும்போதும் குடிகாரர் முகம் சுளித்து ‘ச்சே’ என்பதாக தலையை உதறினார்.
மூன்றாவது சரணம் முடியும் போது டயலாக்
’உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்’
உடனே போதைக்காரர் ஒரு கூப்பாடு போட்டார்
“உழுதவர்கள் ஒழ்க்கிறார்கள். ஒங்கள குனிய வச்சு தள்ளுவார்கள்.
அறுத்தவர்கள் புழுத்துவார்கள். பாடச்சொன்னா ஒழுங்கா பாட்ட பாடுங்கடா.. ஏண்டா தேவையில்லாம பேசிறீங்க. பெரிய தத்துவப்புழுத்திங்க..”
Children, fools and drunkards have a beautiful vision.
………………….
மதுரையில் ஒரு சினிமா பாடல் கச்சேரி. பாடகர் ”தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று பாட ஆரம்பித்தார்.
தோரணையெல்லாம் சிவாஜி பாணியில். ஏதோ அந்தப்பாடலை அந்த மேடைப்பாடகரே எழுதி இசையமைத்து பாடுவதாக ஒரு பெருமிதமான அங்க சேஷ்டைகள்.
“உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன” என்று இரண்டு விரல் நீட்டி கையை ஆட்டிக்காட்டி டயலாக் சொன்னார்.
ஏற்கனவே ஏதாவது உடைசல் கொடுக்கும் முடிவில் முன்னால் நின்று கொண்டிருந்த குருவி மண்டையன் உடனே ஒரு கூப்பாடு போட்டான் “ அவை இரண்டும் கருத்தக்கண்ணு கசாப்புக்கடையில் அறுக்கப்பட்டு விட்டன”
.................................

கஜல், சூஃபி பாடல்களில் இடையிடையே பேசுவதை கேட்பதற்கு எவ்வளவு இதமாக இருக்கிறது. பாடல்களுக்கு இடையே பேசுவதற்கு ஒரு நேர்த்தியான இயல்பு தன்மை இருக்கிறது.
............

R.P.Rajanayahem"s performance 09.06.2018

சொட்டு

$
0
0

சொட்டு 1
1996ல் மும்பை கொலாபாவில் உள்ள 
சராக் தின் (Charagh Din) ஷோ ரூமில் இருந்து 
தருவிக்கப்பட்ட ரெடிமேட் சர்ட் 
இன்றும் இருபத்திரெண்டு ஆண்டுகளாக
 எனக்காக உழைத்துக்கொண்டிருக்கிறது.





.................................

சொட்டு 2
ஒரு எழுவது வயசு கிழவி.
A Pompous Hag!


அதுக்கு ராஜநாயஹத்தை பிடிக்கலைன்னு சொல்லுச்சாம். இதை என் கிட்ட சொன்னவரே அத்த பத்தி சொன்னார்..’DANGEROUS LADY'
Nobody likes even a fairy when she is seventy.
Why should I bother about a seventy year old wicked witch?

சொன்னா ‘ஓ, இன்னாரான்னு எல்லாருக்கும் தெரிஞ்ச வீண்ணா போன பொம்பள தான்.
ச்சீ...போ....ஐய...கெய்வி...

.................................................

வில்லுப்பாட்டு

$
0
0

பள்ளிப்படிப்பின் போது அடிக்கடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும். மொத்தத்தில் ஒரு இருபது தடவைகளாவது வில்லுப்பாட்டு நிகழ்த்தியிருக்கிறேன்.
சிறுவனாக நான் வில்லுப்பாட்டு பிரமாதமாக பாடி பேசி நடிப்பதாக எல்லோரும் அப்போது சொல்வார்கள்

கல்லூரி காலத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வாய்ப்பே கிட்டவில்லை. அந்நியமாகி விட்டது.
 பால் பருவத்து என் வில்லுப்பாட்டு அப்படியே பசுமையாக நினைவில் இருக்கிறது. பாடல் வரிகள்.

“தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட வந்தருள் சந்தான தெய்வமே
சந்தத்தோடு பானை தாளம்
சித்துடுக்கை பம்பையுடன்
பஞ்ச பூதங்கள் அழித்த
பரமன் கதை நானுரைக்க
பாதக மானிடன் மீட்பை
பாங்குடனே நான் விளக்க
வந்தெனக்கு துணையிருப்பாள்
துர்க்கையம்மனே
அந்த வடிவழகி பாதம் போற்றி!”

” பாடறியேன் படிப்பறியேன்
அந்த பாட்டிலுள்ள பொருளறியேன்
பாடறியா நாளையிலே
என்னை படிக்க வைத்தார்
என் தாய் தந்தையர்
படிக்காமலே தறுதலையாய்
நான் ஊர் சுற்றினால் என்ன செய்வார்?
நான் ஒரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நினைவொரு நாள் மறப்பதில்லே
என் நினைவொரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நெஞ்சொரு நாள் மறப்பதில்லே”

’இந்த பாடறியேன் படிப்பறியேன்’ என்ற ஆரம்ப வரி பின்னால் இளையராஜாவால் சிந்து பைரவியில் நாட்டுப்புற பாடலாக பிரபலமானது.

நடிகர் எஸ்.எஸ்.ஆர் பல காலம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆனால் எனக்கு அவருடைய நிகழ்ச்சி பார்க்க கிடைத்ததில்லை. எஸ்.எஸ்.ஆரையே நான் நேரில் பார்த்ததில்லை.


’வில்லடிச்சான் கோவிலிலே விளக்கு வைக்க நேரமில்லை’ என்ற அளவிற்கு கோவில்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ரொம்ப காலத்திற்கு இருந்திருக்கிறது.



R.P.Rajanayahem"s performance 23.06.2018

ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சர்

$
0
0

என் அப்பா மறைவுக்கு பின் இரண்டு மாதத்தில் எனக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. ஒரு காண்ட்ராக்ட் மூலமாக. ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக. ஆறு மாதமாக அப்போது வேலை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நிலையில் இந்த வேலை.
குழந்தைகள் என் துயரங்களின் நிழலை விரட்டியடித்தார்கள்.
மன நிம்மதி என்பதை நம்புபவன் அல்ல. ஆனால் ஒரு ஆன்மீக அனுபவமாக பள்ளியில் என் அனுபவம்.
என் மீது இத்தனை அன்பை யாரும் வாழ்நாளில் காட்டியதில்லை.
2013 -2014 எனக்கு விசேஷமான கால கட்டம்.
குழந்தைகளின் பெற்றோர் என்னை தேடி வந்து பிரமிப்போடு பேசினார்கள்.
மிக சுருக்கமாக இதை எழுத வேண்டியிருக்கிறது.
என்னேரமும் ’ஸ்போக்கன் சார்’ பற்றி தான் வீட்டில் பேச்சாம். சொல்லி வைத்த மாதிரி நூறு பெற்றோர் இப்படி சொன்னார்கள்.
நான் பாடமெடுக்காத வகுப்புக்குழந்தைகள் கூட என்னை நேசித்தார்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் பாடல்கள் பாடினேன்.

இண்டெர்னெட்டில் என் புகைப்படத்தை எடுத்து ஒரு ஒன்பதாம் வகுப்பு சிறுமி என்னைப்பற்றி எழுதி லேமினேட் செய்து நோட்டிஸ் போர்டில் போட்டதை ஆசிரியர்கள் என்னிடம் சொன்னார்கள்.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அபூர்வமாக ஆசிரியர் வராத போது நான் வகுப்பெடுத்திருக்கிறேன்.
பள்ளியில் கூட்டிப்பெருக்கும் பெண்மணியொருவர் “குழந்தைகள் உங்களைப் பார்த்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள். இப்படி நான் பார்த்ததேயில்லை சார். நீங்கள் வெள்ளிக்கிழமை பாடும்போது எனக்கு அழுகையாக வருகிறது சார்.”
மார்ச் ஒன்றாம் தேதி பள்ளிக்கு போயிருந்த போது காண்ட்ராக்ட் ஃப்ராடுகள் எனக்கு இனி அங்கு வேலையில்லை என்ற தகவலை தந்த போது கண்ணில் பட்ட பள்ளி மாணவ மாணவியரிடம் பூடகமாக இனி நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லி விட்டு, உடைந்து நான் கலங்கி விடுவதை தவிர்த்து அவசரமாக பள்ளியை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது குழந்தைகள் கண் கலங்கி என் காலில் விழுகிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவிகள். ஒன்பதாம் வகுப்பு குழந்தைகள் சிலர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் – இது தான் பள்ளியில் என்னுடைய கடைசி நாள் என்று அறிந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தவன் இரண்டு மணி நேரமாக அழுது கொண்டே தான் இருந்திருக்கிறான்.
ஜூன் மாதம் ஆரம்பித்த வேலை பிப்ரவரியோடு முடிவுக்கு வந்து விட்டதை மார்ச் ஒன்றாம் தேதி தான் நானே அறிய வந்தேன்.
எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளத்தை காண்ட்ராக்ட் ஃப்ராடுகளிடமிருந்து என்னால் வாங்கவே முடியாமல் போய் விட்டது.
மீண்டும் ஜூன் மாதம் மற்றொரு தனியார் பள்ளியில் நேரடியாக வேலைக்கு சேர்ந்தேன். ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சராக. மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. இரண்டு பள்ளிகளுக்கும் எல்லா வகுப்பிற்கும் கம்யூனிகேட்டிவ் இங்க்ளிஷ் ட்ரைனர்.
ஜூன் 12ம் தேதி முதல் நாளே என் தலையில் இடியாக ஒரு செய்தி மொபைலில் வருகிறது. அந்த துயரத்தை தாங்கிக்கொண்டே தான் அன்றும் மறு நாள் மெட்ரிகுலேஷன் ஸ்கூலிலும் வகுப்பறைகளில் “ When I was just a child, I asked my mama what will I be?”  பாடினேன்.
ஆசிரியர்கள் சொல்கிறார்கள் ‘ அது எப்படி சார்? உங்களுக்கு மட்டும் பள்ளிக்கூடத்தில் இவ்வளவு Fans.’
பிசிக்ஸ் மேடம் வகுப்பில் “ அடுத்த பீரியட் நான் வர மாட்டேன். ராஜநாயஹம் சார் தான் வருவார்” என்று ப்ளஸ் ஒன் வகுப்பில் சொன்னவுடன் மாணவர்கள் மாணவிகள் பரவசமாகி எழுந்து ஆடினார்களாம். பிஸிக்ஸ் மேடம் “ என்ன மாயம் சார் இது?” என்று என்னிடமே வந்து சொல்கிறார்.
மாலை பள்ளி விட்டு செல்லும்போது “good-bye"சொல்லிக்கொண்டிருந்த பிள்ளைகள் என்னால் எல்லோரிடமும் “Adieu"சொல்ல ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் “Adieu"சொல்ல போட்டி போடும் செல்லங்கள்.
இந்த பள்ளியின் கூட்டிப்பெருக்கும் ஆயாவும் “ ஏன் சார்? இது புதுசா நான் பாக்கறேன். பதினஞ்சு வருசமா இங்கே கூட்டி பெருக்கிறேன். இப்ப தான் அதிசயமாருக்கு.. இப்படி குழந்தைகள் எல்லோருமே உங்கள பாத்தவுடனே இப்படி சந்தோசப்படுறாங்களே”
குழந்தைகளோடு இருப்பது எவ்வளவு சுகமோ, அந்த அளவுக்கு நிர்வாக கடுமை கசப்பானது.
இங்கேயும் நிர்வாகம் திடீரென்று பிப்ரவரியுடன் எனக்கு வேலை முடிகிறது என்கிறார்கள்.
அந்த வருடம் நான் முன்னர் வேலை பார்த்த பள்ளியின் மாணவி ப்ளஸ் டூவில் மாநிலத்தில் முதல் ரேங்க்.
அவளுடைய வீட்டில் பெற்றோர் சொல்கிறார்கள்
“ இவ ப்ளஸ் ஒன் படிக்கும்போது தான் இங்க்ளீஷில கூச்சமில்லாம பேச ஆரம்பிச்சா சார். ஒங்களால தான்.”
அவளுமே ‘நாங்க தான் உங்க கிட்ட படிச்சதுக்கு பெருமைப்படணும். ப்ளஸ் டூவில நாங்க எல்லோருமே உங்கள எப்பவும் நெனச்சிக்கிட்டே இருப்போம் சார்”
மனைவிக்கு ஆபரேசன், எனக்கு கண் ஆபரேசன் எல்லாம் முடிந்து ஆகஸ்டில் வேலைக்கு சேர்கிறேன்.
ஆகஸ்ட் கடைசி நாள் மாலை. ஒரு ஏழாவது வகுப்பு மாணவனின் தாய் என்னிடம் அந்த பையனை அழைத்து வந்து பேச ஆரம்பிக்கிறார்.
“என்னேரமும் வீட்டில் உங்களைப்பற்றியே தான் பேசிக்கொண்டிருக்கிறான். எல்.கே.ஜியில் இருந்து இப்படி இவனை நான் பார்த்ததேயில்லை. இவனோட அப்பாவும் ஆச்சரியப்படுறாரு. உங்கள மாதிரி ஒரு வாத்தியார் கிடைக்கிறது அபூர்வம் சார். உங்களோட ஆசி இவனுக்கு எப்பவும் வேணும் சார்.”
அப்போது உதவி பிரின்ஸிபால் என்னை கூப்பிட்டு “ சார், நிர்வாகத்தில ஸ்போக்கன் இங்க்ளிஷிற்கு இந்த வருடம் பட்ஜெட் இல்லன்னு சொல்லிட்டாங்க சார். நாளையில் இருந்து உங்களுக்கு பள்ளியில் வேல இல்லன்னு மேடம் சொல்லச் சொல்லிருக்காங்க சார்.”
நிர்வாகியோ, பிரின்ஸிபாலோ என்னை சந்திக்கும் தர்ம சங்கடத்தை தவிர்த்தார்கள்.
செப்டம்பர் 13ந்தேதி குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்தேன்.
இப்போதும் பள்ளிக்குழந்தைகள் பலரும் “ We miss you a lot sir, please come back” என்று அடிக்கடி ஃபேஸ்புக்கில் மெஸ்ஸேஜ் போடுகிறார்கள். போனில் கூட என்னிடம் அன்பை பொழிகிறார்கள்.

மந்திரவாதி யார்? ரத்தங்கக்கப்போறவர் யார்?

$
0
0


மந்திரவாதி யார்? ரத்தங்கக்கப்போறவர் யார்?
டெல்லி முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் - டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால்
இருவரில் 
மந்திரவாதி யார்? ரத்தங்கக்கப்போறவர் யார்?
புதுவை முதல்வர் நாராயண சாமி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
இருவரில்
யார் மந்திரவாதி? யார் ரத்தங்கக்கப்போறவர்?
Real Power???

தமிழ் நாட்டில் கூட யார் தான் மந்திரவாதி? யார் தான் ரத்தங்கக்கப்போறவர்?

இங்கே விசித்திரமாக கவர்னரும் எதிர்கட்சி தலைவரும்!

வவ்வா ஏழு பூழலுக்கு ஆசப்பட்டு, கடசியில வாய் வழியா பேலும்படியான கதை தானா கவர்னர் சமாச்சாரம்?

Real power with Elected Government - Supreme court Judgement.

தூங்கும்போது வரும் கனவு

$
0
0
ஆழ்ந்த தூக்கத்தில் கனவு வருகிறதா? தூக்கம் முடிகிற நேரத்தில் கனவு வருகிறதா? இரவின் பின் பாதியில் கனவா?
Dreams while sleeping
காரணங்கள் என்பதற்கு தேவை எந்தக் கனவிலும் கிடையாது. யதார்த்தத்தை முற்றிலும் மறுதலிக்கும் கனவு.
சென்ற வாரம் புது ஊரில் சரியான தூக்கம் இல்லாத நிலையில் கூட ஒரு சிறு கனவு.
கனவில் வந்த இரவின் இருட்டில் இரண்டு குட்டி நாய்கள். ரொம்ப குட்டியான நாய்கள். ஒரு குட்டி கழுதையைப் பார்த்து குரைக்கின்றன. குட்டி கழுதை கொஞ்ச நேரம் நாய்க்குட்டிகளை பார்த்து விட்டு பதிலுக்கு மழலையாக கத்துகிறது. நாய்க்குட்டிகள் மிரண்டு குரைப்பதை நிறுத்துகின்றன.
இரண்டு நாட்களுக்கு பின் ஒரு கனவு. ஒரு நிகழ்ச்சி. அதில் பலர் கூடியுள்ள நிலையில் ஒரு பெண் என்னிடம் ஏதோ சொல்ல நெருக்கமாக வருகிறாள். அவள் ஏதோ சொல்லத்தான் செய்கிறாள். அப்போது அவள் என் மீது முழுவதுமாக சாய்ந்து விட்டதை கவனிக்கிறேன். அவள் சொல்வது என்ன என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. அவள் முதுகை என் நெஞ்சில் சார்த்தி வைத்துக்கொண்டு தொடர்ந்து நீளமாக பேசுகிறாள்.
Siesta. Daytime napping. நேற்று இங்கே வீட்டில் பகலில் சற்று அயர்ந்த போது ஒரு தெளிவான கனவு.

தர்மு சிவராம் வருகிறார். சிவப்பு கலரில் ஒரு branded readymade shirt போட்டிருக்கிறார். கனவில் வந்த சிவராம் ஒல்லியாக இல்லை. சற்றே பூரித்த உடம்பு. ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.
’போட்டோவில் பிரமிள் ரொம்ப அட்டகாசமான அழகுடன் இருப்பார். அவருக்கு போட்டோஜீனிக் ஃபேஸ்’ என்று சுந்தர ராமசாமி சொன்னது என் கனவிலேயே நினைவிற்கு வருகிறது.

நான் ஒரு மொட்டை மாடியில் நிற்கிறேன். பிரமிள் பக்கத்து வீட்டு மொட்டை மாடி. என்னைப் பார்த்து “துரை” என்று கூப்பிட்டு கையசைக்கிறார். துரை என்ற என் பெயர் பிரமிளுக்கு எப்படி தெரிந்தது!
உடனே அவர் அந்த மொட்டை மாடியிலிருந்து நான் இருக்கும் மொட்டை மாடிக்கு தாவுகிறார். இரண்டு கட்டடங்களும் பல மாடி கொண்டவை. நான் இருக்கும் கட்டடடத்தில் ஜன்னலோ எதிலோ அவருடைய பாதங்கள் நின்ற அடுத்த சில நொடியில் நழுவி கீழே விழுகிறார்.
ஐயோ…
அவருடைய ‘தன்னழிவு’ கவிதை முழுவதுமாக கனவில் என் நினைவில் தெளிவாக வருகிறது.
“கண்ணில் கருக்கொண்ட
மணல்
ஏதோ ஒரு ஒளியின்
ஊற்றாகிறது.
பாலை
புனலாகிறது.
இக்கணம்
இதயத்துள் வேரூன்றி
நிலைத்தது நனவு.
முளைத்தெழுந்து
பழுத்தது
சாவு.”
என் பதற்றத்தில் நான் மிரட்சி நீங்காதிருக்கிறேன். சில நிமிடங்களில் படியில் யாரோ வரும் சத்தம்.
மொட்டை மாடிக்கு வந்து விட்ட அந்த மனிதர் பிரமிளே தான்.
ஆகாய நீல வண்ணத்தில் நல்ல முழுக்கை நீள சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு பிரமிள் என்னைப்பார்த்து சிரிக்கிறார். ஸ்கை ப்ளு ரெடி மேட் சர்ட். நல்ல செழிப்பான பூசின உடலும் பூரித்த முகமுமாக பிரமிள்.
கனவுகள் ஆன்மாவின் மொழி. Dreams and the relevance they play in the journey of life. பௌலோ கொய்லோவின் Alchemist நாவல் நிழலாடுகிறது.
செத்தபின் சாவு என்னும் தூக்கத்தில் என்ன கனவு வரும் என்பார் ஷேக்ஸ்பியர்.
In that Pramil’s sleep of death what dreams may come!

….............


LADIES NOT ALLOWED

$
0
0

ஜெமினி கணேசன் தாத்தா நாராயணசாமி ஐயர் புதுக்கோட்டை மஹாராஜா கல்லூரி பிரின்சிபாலாயிருந்தாராம்.. இவர் ஒரு இசை வேளாளர் இன பெண்ணை அபிமான தாரமாக மணந்திருக்கிறார். அவருக்கு பிறந்தவர்கள் பின்னால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என அறியப்பட்டவரும், ஜெமினி கணேசனின் தந்தை ராமசாமியும். ராமசாமியும் ஒரு இசை வேளாளர் இனப்பெண்ணைத் தான் மணந்திருக்கிறார். அவரை தான் கங்கா பாட்டி என்று ஜெமினி மகள் கமலா செல்வராஜ் சொல்கிறார்.
ஜெமினி சுத்த பிராமணர் அல்ல. ஆனால் ஜெமினியின் மகள் இவரை பிராமணர் என்றே சித்தரிக்கிறார். ஜெமினி முக்காலே அரை வீசம் இசை வேளாளர் இனம் தான்.
ஜெமினியின் தாயார் முண்டனம் செய்த பிராமண விதவைக்கோலத்தில் தான் தன் வாழ்நாளில் இருந்தார். ஒரு விஷயம். இசை வேளாள இனம் பிராமண ஜாதியுடன் கலந்து விட்டால் அப்படிப்பட்டவர்கள் பிராமண கோலம் கொள்வதையே விரும்புவர் என்பதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மடிசார் புடவையே சாட்சி.
” என்னோட அம்மா ஒரு கம்மனாட்டி. கம்மனாட்டி வளத்த பிள்ளை நான்” என்று என்னிடம் ஜெமினி சொன்னார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தன் அத்தை என்பதை ஜெமினி மறைத்ததில்லை. ஆனால் எப்படியோ ஜெமினிக்கு பிராமணர் என்ற பிம்பம் சாசுவதமாயிருந்திருக்கிறது.
ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி பிராமணப்பெண் என்று சொல்லப்படுகிறது.
ஜெமினியின் பேச்சே பிராமண பாஷை தானே.
பி.யூ.சின்னப்பா புதுக்கோட்டைக்காரர்
புதுக்கோட்டைக்காரர் ஜெமினி என்னும்போது மற்றொரு திரைப்பட நடிகர் ஏ.வி.எம்.ராஜனும் புதுக்கோட்டைக்காரர் தான். ஜெமினிக்கு தம்பி போல இருப்பார். இவர் அம்மா இசை வேளாளர், அப்பா முக்குலத்தோர் என சொல்லி கேள்வி.
ஜெமினியின் திரையுலக அந்தஸ்து பற்றி நான் தெளிவாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
தமிழ் திரையுலக மூவேந்தர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று கூர்முனை என்பது ஐம்பதுகளில். அதில் ஜெமினி என்ற கூர் முனை 1960களில் மெல்ல மழுங்கிப்போனதை யாரும் மறக்கக்கூடாது. ஜெமினியின் இயல்பும் இதற்கு ஒரு காரணம். சிவாஜியோடு இரண்டாவது கதாநாயகனாக நடித்ததோடு நிற்கவில்லை. எம்.ஜி.ஆர் இதற்கே “ ஜெமினி தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே” என்று வருத்தப்பட்டார்.
தன் திரையுலக அந்தஸ்திற்கு குறைவான நடிகர்கள் ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.ஏம்.ராஜன், ரவிச்சந்திரனோடும் இணைந்து ஜெமினி பல படங்கள் நடித்தார். எஸ்.எஸ்.ஆரோடு வைராக்கியம், குலவிளக்கு ஆகிய படங்கள்.
திரையுலக மூவேந்தர் என்ற அமைப்பு மாறி திரையுலகின் இரண்டு திலகங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி உச்ச அந்தஸ்து பெற்று விட்டனர்.
ஜெமினி சின்ன பட்ஜெட் நடிகராகி விட்டார்.
சின்ன பட்ஜெட் நடிகரானது Blessing in disguise. கே.பாலச்சந்தரின் தரமான படங்கள் அவருக்கு கிடைத்தன.
சாவித்திரியோடு அவர் வாழ்ந்த காலங்கள். சாவித்திரி கொடி கட்டிய காலங்களில் ஜெமினிக்கு மார்க்கெட் தமிழ் திரையுலகம் மட்டும் தான். ஆனால் சாவித்திரிக்கு பிரமாண்டமான தெலுங்கு திரையுலகிலும் மார்க்கெட். ஆந்திர மண்ணின் மகள்.
தெலுங்கில், தமிழில் அவர் மொத்த சம்பாத்தியம், ஜெமினியின் சம்பாத்தியத்தை விட நிச்சயம் அதிகம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. சாவித்திரி பிஸியாக இருந்த காலங்களில் அவர் அந்தஸ்து ஜெமினியை விட கூடுதல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஜெமினி நடித்த இந்திபடங்கள் கூட வெற்றி பெற்றன என்பது வேறு விஷயம்,
1953ல் ஜெமினி ’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் தொடங்கி 1974ல் ’நான் அவனில்லை’ படத்தோடு அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது.
”உண்மைக்கின்னே ‘புன்னகை’ (1971)ன்னு ஒரு படம் நடிச்சேனே..அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க.. பொய்க்குன்னே ஒரு படம் ‘ நான் அவனில்லை’ …அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க..” என்று ஜெமினி வேதனையோடு சொன்னார்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் 1974ல் உரிமைக்குரல், தங்கப்பதக்கம் என சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
1953 துவங்கி 1974 வரை ஜெமினி 21 வருடங்கள் மார்க்கெட்டில் இருந்ததாகக் கொள்ளலாம்.
பின்னரும் ஜெமினி எத்தனையோ படங்களில் இருந்தார் என்றாலும் அவை ஜெமினி கணேசன் படம் என்றெல்லாம் சொல்லலாகாது.
மார்க்கெட் போனதை ஜெமினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழு மேக்கப், தலையில் விக் வைத்துக்கொண்டு ஸ்டுடியோக்களில் காரில் வலம் வருவார். பார்ப்பதற்கு ஜெமினி இன்னும் மார்க்கெட்டில் இருப்பதாக தெரிய வேண்டும்!
மார்க்கெட். தினத்தந்தியில் ஒரு செய்தி அந்தக்காலத்தில்.
”சௌகார் ஜானகியின் மார்கட்டு சரிந்தது!”
மார் கட்டு.
நடிகையர் திலகம் படம் பார்க்கிற விசேஷ ஆர்வம் எனக்கு இல்லை. சாவித்திரியம்மாவைப் பற்றி ராஜநாயஹம் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
BioPic எப்போதும் ஒரு ஆளுமை பற்றி கூடுதல் புகழ்ச்சி இருக்கும். படத்தை மஹாநதி என்று தெலுங்கர்கள் எடுத்திருக்கிறார்கள். மண்ணின் மகளை உயர்த்திப்பிடிக்கவே செய்வார்கள். பொதுப்புத்தி காவிய நாயகியாக உயர்த்தும்போது கணவன் வில்லனாக மாறுவது என்ன அதிசயமா?
சாவித்திரியின் தெலுங்கு திரைச் சாதனைகள் இங்கே உள்ளவர்களுக்கு எப்படி முழுமையாக அறிய முடியும்.
ஜெமினி கணேசனை மட்டம் தட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஜெமினி பேச்சை சாவித்திரி கேட்டிருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தடுத்திருக்க முடியும்.
சாவித்திரியின் Bio pic கமலா செல்வராஜ் சகோதரிகள், சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி, மகன் சதீஷ் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
புஸ்பவல்லி, மகள்கள் ரேகா, ராதா நல்லவர்கள். ஆனால் சாவித்திரி மகள்? என்று பொங்குகிறார் கமலா.
சமந்தா ‘என் முதல் காதலன் ஜெமினி மாதிரி தான். நல்லவேளை அவனை நான் கட்டியிருந்தால் எனக்கு சாவித்திரி நிலை தான்’ என்று ஆசுவாசப்படுகிறாள்.
சாவித்திரிக்கு ஜெயசித்ரா கேள்வி ‘ நீங்க ஏம்மா ஜெமினிய கட்டினீங்க. வேற யாரயாவது கட்டியிருக்கலாமே’
கமல் அந்தக்காலத்தில் சொல்வார் “ ஜெமினி மாமாவை யாராலும் அவமானப்படுத்தவே முடியாது. உங்களப் பத்தி இப்படி இந்த ஆள் பேசறான்னு அவர் கிட்ட சொன்னா ‘போறாண்டா. சொல்லிட்டுப்போறான்…’ என்பார்”
இப்போது அவர் உயிருடன் இருந்து இந்த ’நடிகையர் திலகம்’ பார்த்திருந்தால் “சாவித்திரிய நன்னாத்தான்டா காண்பிச்சிருக்கான்….” அது போதுமே என்று திருப்திப்பட்டிருப்பாரோ.
விஜய சாமுண்டீஸ்வரி சாவித்திரியோடு பகை பாராட்டியதால் தான் அண்ணா நகரில் தனியாக வசித்திருக்கிறார். ஜெமினி கணேசன் மீது சாவித்திரி மகள் கேஸ் போட்டதுண்டு. ஜெமினியை கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்ததுண்டு.
கமலா செல்வராஜ் தன் தாயை விட சாவித்திரியம்மாவை பிடிக்கும் என்று கூட பேட்டியில் சொன்னதுண்டு. ஆனால் சாவித்திரி படம் அவர் மீது மிகுந்த துவேசத்தை ஏற்படுத்தி விட்டது. “She is very bad. கல்யாணத்திற்கு பிறகும் சாவித்திரிக்கு affairs இருந்தது.” என்று கமலா தூற்றும்படியாக இந்த சாவித்திரி படம் மாற்றி விட்டது.
Caesar’s wife is above suspicion.
என்னுடைய சாவித்திரி கட்டுரையில் அவர் affairs பற்றி குறிப்பிட்டதில்லை.
இப்போது நடிகர் ராஜேஷ் “ அப்படி சாவித்திரியோடு affair வைத்திருந்த நடிகர்களை எம்.ஜி.ஆர் மிரட்டியிருக்கிறார் தெரியுமா?’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார்!
கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்.
அவர் மறைந்து இவ்வளவு காலம் கழித்து அவர் கற்பு விவாதத்துக்குள்ளாகிறது.
ஜெமினி, சாவித்திரி இருவருமே Promiscous persons.
எம்.எஸ் பெருமாள் என் சாவித்திரி கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்ன ஒரு விஷயம்.
’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் இப்போது கேட்கும் போதாவது ஜெமினி மாமா உங்க கூட இனிமேலாவது சேரமாட்டாரா’ என்று 1970களில் எம்.எஸ்.பெருமாள் கேட்ட போது சாவித்திரி “இப்ப அந்த பாட்ட பார்த்தா அவர் என் கையில உள்ள பெண் குழந்தை இப்ப பெரிய பிள்ளையாயிருப்பாளே, அவள எப்படி கணக்கு பண்ணலாம்னு தான் அவர் புத்தி போகும்” என்றாராம்.
கமலா செல்வராஜுக்கு அவர் அப்பா பற்றி ரொம்ப பிரமையிருக்கிறது. அவர் அழகானவர் என்பதால் எல்லா பெண்களும் அவரை காதலித்தார்களாம். அவரைத் தேடி வந்தார்களாம். அவர் மேல தப்பில்லையாம்.
என் பங்குக்கு நானும் சொல்கிறேன்.
”குழந்தையுள்ளம்” (1969) படம் சாவித்திரி இயக்கிய சொந்தப்படம். ஜெமினி கணேசனும் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த படம். சௌகார் ஜானகியும் உண்டு.எஸ்.பி.பியின் ஆரம்பக்கால பாடல் ”முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு”. சாவித்திரி டாக்டரம்மாவாக வருவார்.
இந்தப்படத்தில் பி.வாசுவின் சித்தப்பா சேகர் கேமராவில் பணி புரிந்திருக்கிறார். அப்பா பீதாம்பரம் மேக் அப்.
சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் சண்டை பார்த்திருக்கிறீர்களா என்று நான் சேகரிடம் கேட்டேன்.
சேகர் சொன்னார். “ ரெண்டு பேருக்கும் சண்ட என்ன…. ’நீ அவன் கூட படுத்தில்ல..எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டியா?’ன்னு இவரு கேப்பார்..பதிலுக்கு அந்தம்மா ’நீ அவ கூட, இவ கூடல்லாம் படுத்தேல்ல’ன்னு சொல்லும்.
எல்லா கேசனோவோக்களும் பெண்களிடம் செருப்படி வாங்கித்தான் ஆக வேண்டும்.
கமல் மற்றொரு நடிகரிடம் சொன்னதாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். என்னுடைய புரிதல் கீழ்கண்டவாறு.
ஜெமினி ஒரு நடிகையை தொடக்கூடாத இடத்தில் தொட்டிருக்கிறார். நடிகை இவரை உடனே மறுதலித்து எதிர்த்து கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் அப்போது உள்ளே நுழைந்தவர் அதை பார்த்து விட்டார். இந்த மூன்றுமே சில வினாடிகளில். எதுவுமே நடக்காதது போல ஜெமினி சௌஜன்யமாக கமலைப்பார்த்து கேட்டாராம் “ என்னடா பிள்ளையாண்டான்! எப்படிடா இருக்கே..எப்படா வந்தே…”
அவருடைய கடைசி மனைவி(!) ஜூலியானா அவருடைய தள்ளாத வயதில் குடையால் அடித்திருக்கிறாள்.
ஜூலியானா Spendthrift. ஜெமினி சிக்கனக்காரர். ’எவ்வளவு நகை வாங்கியிருக்கா. இப்பவும் உங்க கடையிலும் நகைய அள்ளறா பாருங்க.’ என்று என் மாமா அங்குராஜிடம் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்.
ஜூலியானாவிடம் இருந்து தன் அப்பாவை மீட்டு கமலா செல்வராஜ் ஜி.ஜி.ஆஸ்பிடலில் வைத்திருந்த போது அவருடைய அறைக்கு வெளியே ஒரு போர்டு. “ LADIES NOT ALLOWED”
இந்த விஷயம் நான் தான் மொதல்ல சொல்றேன்.
The height of Irony!
இந்த ‘Ladies not allowed’ அறிவிப்பு காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா? சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா?
…………………………….

மந்திரவாதி ? ரத்தங்கக்குறது ? யாரு? யாரு?

$
0
0

இதுனால தான் ஜெ.தீபா கூடாரம் காலியா?
ஆகாககாக! இந்த கோணத்தில நினச்சி பாக்கவேல்லியே!
ச்சீ பச்சைத் துரோகம்.............
ஜெ.தீபாவோட தொண்டர்களயெல்லாம்
ஓ.பி.எஸ் கடத்தி ஆளுங்கட்சியில சேத்துட்டாராமே...
நீஜிம்மாவா?
இப்படி ஒரு சண்ட!
இதுல மந்திரவாதி யாரு? ரத்தங்கக்குறது யாரு?............

........................

ப. சிதம்பரம் வீட்டுல திருட்டுன்னாங்க.....
அப்புறம் கம்ப்ளெய்ன்ட் வாபஸ்!
இன்னா நடக்குது?
யாரு மந்திரவாதி? 
ரத்தங்கக்குறது................?
.....................................

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

$
0
0



’வானத்தில் திரியும் பறவைகளைப் பற்றி மட்டும் பாடாதீர்கள். மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்.’
உச்சி வெய்யில் நண்பகல் பதினொன்றரை மணி நேரம். ஆலப்பாக்கத்தில் ஒரு காலனியின் நுழைவு பகுதிக்கு முன்னே தேங்கி நிற்கிற சிறு அளவு மழை நீர் குட்டை. ரோட்டில் அதை ஒட்டி ஒரு தள்ளு வண்டி டிபன் ஸ்டால். இந்த பக்கம் ஒரு பேங்க். பஸ் ஸ்ட கரும்பு ஜூஸ் கடை. எதிரே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகம். படு பிசியான ரோடு.எதிரே ஃபர்னிச்சர் கடை. டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ரெண்டு.பல வகை வாகனங்கள் நகர்வில். நடப்பவர்கள், நிற்பவர்கள் என ஜீவனுள்ள பகுதி ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
’குளத்தோடு கோவித்துக்கொண்டு குண்டி கழுவாமல் ஒருவன் போனானாம்’ என்று ஒரு சொலவடை. ஒருவன் குண்டி கழுவ குளத்தில் இறங்கும் போது கால் வழுக்கி அடி பட்டு விடுகிறது. பதறி எழுந்து விரைத்துக்கொண்டு குளத்தை முறைத்துப் பார்த்து விட்டு ச்சீ போ என்று தலையை ஒரு பக்கமாக திருப்பி, உதட்டை பிதுக்கிக்கொண்டு விறு விறு என்று நடக்க ஆரம்பிக்கிறான். நடக்கும் போதே குளத்தைப் பார்த்து திரும்பி மீண்டும் மீண்டும் உதட்டை பிதுக்கி, ச்சீ போ என்று தலையை ஒரு பக்கமாக கோபமாக திருப்பி...இப்படியே ரோஷத்தோடு போய் விடுகிறான்.
கட்.
மீண்டும் ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
ஒரு பெரிய மனுஷன் வேட்டிய கழற்றி தரையில் வைத்து விட்டு, ’யார் கோபப்பட்டாலும் எனக்கென்ன? நான் கவலைப்படவே மாட்டேன், மயிரே போச்சி’ன்ற தோரணையில டவுசரை கழற்றிய படி புடுக்கு தெரிய, பீக்குண்டி தெரிய மழை நீர் குட்டையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கும் போது.....
எனக்கு வளசரவாக்கம் மினி பஸ் வந்து விட்டது.
..............................
Viewing all 1852 articles
Browse latest View live