சங்கரன் கோவில் அத்தை.
அப்பாவின் மூத்த சகோதரி.
95 வயது.
செஞ்சுரியடிக்க இன்னும் ஐந்தே வருடம்.
தாத்தா செய்துங்கநல்லூர் சாராயக் கடை ராஜநாயஹம் பிள்ளை
நூறு வயதைத் தாண்டி வாழ்ந்தவர்.
அத்தையின் தகப்பனார் போலவே இவரும் கூட
நூறு வயதைத்தாண்டுவார். ததாஸ்து!
அபாரமான ஞாபகசக்தி.
செய்துங்கநல்லூர் தாத்தா, ஆச்சி, பெரியப்பா, அப்பா பற்றி இயல்பாக நினைவுகளை
அத்தை
அசை போட்டார்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் குலதெய்வம் குறித்து நான் கேட்ட கேள்வியை இப்போது நினைவில் வைத்து அதற்கு ஆலோசனையும் கூட சொன்னார்.
அத்தை கணவர்
ரத்தினம் பிள்ளை மாமா செக்கச்செவேல்னு ஹாலிவுட் ஆக்டர் போல இருப்பார்.
அந்த கால சங்கரன்கோவில்
S.R.S. transport பங்கு தாரர்.
சங்கரன் கோவில் நடராஜ பிள்ளையின் இளைய சகோதரர்.
46 வருடங்களுக்கு முன் ரத்தினம் பிள்ளை மாமா 1976ல் மறைந்து விட்டார்.
டிசம்பர் நான்காம் தேதி
பல வருடங்களுக்குப் பின் அத்தையை சந்தித்திருக்கிறேன்.
https://www.facebook.com/100006104256328/posts/3213525762194201/?mibextid=Nif5oz
https://www.facebook.com/100006104256328/posts/3088026201410825/?mibextid=Nif5oz