என்னிடம் இருந்து என் எழுத்து விஷயங்களை எடுத்து பலரும் கையாள்வது ஒரு புறம் இருக்கட்டும்.
வினோதமான ஒரு திருட்டு சமீபத்தில் நடந்திருக்கிறது.
ஒரு கட்டுரை. அதில் இந்த என் புகைப்படம் வெளியாகியிருந்தது.
வினோதமான ஒரு திருட்டு சமீபத்தில் நடந்திருக்கிறது.
ஒரு கட்டுரை. அதில் இந்த என் புகைப்படம் வெளியாகியிருந்தது.
தினமணி.காமில் பழைய நடிகை தேவிகா பற்றி ஒரு கட்டுரை.
என்னுடைய புகைப்படத்தை அதாவது ராஜநாயஹத்தின் ஃபோட்டோவை (Rajanayahem in waist coat)என் ப்ளாக்கில் இருந்து எடுத்து தினமணி.காமில் தேவிகாவின் கணவர் தேவதாஸ் பற்றி எழுதப்பட்ட இடத்தில் வெளியிட்டிருந்தார்கள்.
அதை கண்டு பிடித்து இங்கே ஃபேஸ்புக்கில் எனக்கு மெஸேஜ் செய்திருந்தார் ஒரு நல்ல நண்பர்.
எந்தக்காலத்து நடிகை அவர். என் புகைப்படம் அவருடைய கணவராக அறியப்பட பிரசுரமாவது விந்தையிலும் விந்தை.
ராஜநாயஹம்! உனக்கு இப்படி ஒரு popularity தேவை தானா? It is always better to be unpopular by your own choice!
அந்த என் ஃபோட்டோவை அந்த தினமணி கட்டுரையிலிருந்து நீக்குவதற்கு நான் மூன்று நாட்கள் போராட வேண்டியிருந்தது.
என் அப்பா காலத்து நடிகை தேவிகா!
என் அப்பா புகைப்படத்தை தேவிகாவின் புருஷன் என்று போட்டால் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
என்னுடைய ப்ளாக்கில் ”சிக்கலான இழைகள்” பதிவிலிருந்து இந்த புகைப்படத்தை சுட்டிருக்கிறார்கள். அவசரக்குடுக்கைகள்!
என்னுடைய ப்ளாக்கில் ”சிக்கலான இழைகள்” பதிவிலிருந்து இந்த புகைப்படத்தை சுட்டிருக்கிறார்கள். அவசரக்குடுக்கைகள்!
’சிக்கலான இழைகள்’ பதிவில் அந்த புகைப்படத்தின் கீழ் ஒரு வரி குறிப்பு இப்போது எழுதி விட்டேன்!
ஏற்கனவே என்னுடைய பிரபலமான புகைப்படம் அது. இப்போது அதற்கு இப்படி ஒரு பிரபலம்!
ஏற்கனவே என்னுடைய பிரபலமான புகைப்படம் அது. இப்போது அதற்கு இப்படி ஒரு பிரபலம்!
என்னை நேரில் பார்க்காமலே என் புகைப்படங்களைப் பார்த்திருப்பதால், சந்திப்பதற்கு முன்னே என்னை சாலையில் ஸ்கூட்டரில் போகும்போது பார்த்து விட்டு அடையாளம் கண்டவர் என் எழுத்தின் மீது அபிமானம் கொண்ட ’கிடாரி’ இயக்குனர் பிரசாத் முருகேசன்.
‘சார் இன்று சின்மயா நகர் பஸ் ஸ்டாப் அருகில் நீங்கள் வரும்போது பார்த்தேன்’ என்று அவர் செல் பேசியில் சொல்லி விட்டு மறு நாள் வீட்டிற்கு வந்து சந்தித்தார்.
இப்படியும் நடக்கிறது ஒரு சம்பவம்.
‘சார் இன்று சின்மயா நகர் பஸ் ஸ்டாப் அருகில் நீங்கள் வரும்போது பார்த்தேன்’ என்று அவர் செல் பேசியில் சொல்லி விட்டு மறு நாள் வீட்டிற்கு வந்து சந்தித்தார்.
இப்படியும் நடக்கிறது ஒரு சம்பவம்.
தினமணி வேடிக்கையும் நடக்கிறது!
…………………………………………………………..
photos
1.R.P.Rajanayahem
2.Devika
3.R.P.Rajanayahem's Father